எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள் முதல் விலையும் விற்பனை விலையும் உயர்த்தப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி :- பால் கொள்முதல் விலையையும் விற்பனை விலையை உயர்த்தியிருக்கின்றீர்கள், மக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...
பதில் :- சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அரசால், பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்படும். அதே வேளையில், விற்பனை விலையும் உயர்த்தப்படும் என்று அந்த சட்டமன்றத் தொடரிலேயே தெரிவித்தேன். நீங்கள் சட்டமன்றத்திலே அறிவித்தீர்கள்.
ஆனால், பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். அதுமட்டுமல்லாமல், பால் உற்பத்தியாளர்கள் என்னை சந்தித்து பேசுகின்றபொழுது, கால்நடை வளர்ப்பின் பராமரிப்புச் செலவு கூடுதலாக இருக்கிறது, பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஐந்தாண்டு காலம் ஆகிறது. இந்த இடைப்பட்ட ஐந்தாண்டு காலத்திலே கால்நடை தீவனங்களின் விலை ஏற்றம், பராமரிப்புச் செலவு உயர்ந்திருக்கின்ற காரணத்தினாலே அரசு, பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கேட்டார்கள்.
விற்பனை விலையையும், கொள்முதல் விலையையும் கணக்கிட்டு அரசு, பசும் பாலுக்கு 4 ரூபாயும், எருமை பாலுக்கு 6 ரூபாயும் விலை உயர்த்திருக்கின்றது. அதேபோல விற்பனை விலையும் 6 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பொழுது, பல பால் உற்பத்தியாளர் ஒன்றிய சங்கங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. சில சங்கங்கள் தான் லாபத்தில் இயங்குகிறது. பெரும்பாலான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் நஷ்டத்தில் இயங்குகிறது.
இருந்தாலும், அரசு இதையெல்லாம் சமாளித்து இன்றைக்கு சுமார் 4,லட்சத்து 60, ஆயிரம் பால் உற்பத்தியாளர் பயனடைய வேண்டும் என்பதற்காக பாலின் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளது. டீசல் விலை உயர்வதன் காரணமாக பாலை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்கின்ற போக்குவரத்துக் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதையெல்லாம் கருத்திலே கொண்டுதான் அரசு இந்த விலை நிர்ணயம் செய்திருக்கிறது.
கேள்வி :- கர்நாடகாவில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு 6 ரூபாய் ஊக்கத் தொகையாக கொடுக்கிறார்கள். தமிழக அரசிற்கு அது போல் ஏதாவது திட்டம் இருக்கிறதா?
பதில் :- கர்நாடகத்தில் ரூ.29.72, கேரளாவில் ரூ.34.76, ஆந்திரா ரூ.28.13, தெலுங்கானா ரூ.27.30, குஜராத் ரூ.30.37, எல்லோரையும் விட நாம்தான் அதிகமாக பால் உற்பத்தியாளர்களுடைய கோரிக்கையை ஏற்று ரூ. 32 ஆக நிர்ணயித்திருக்கின்றோம்.
கேள்வி :- விற்பனை விலை ஏற்றத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு வருகிறதே?
பதில் :- ஐந்து வருடமாக விலைவாசி எவ்வளவு உயர்ந்திருக்கிறது. சம்பளமும் எல்லோருக்கும் உயர்ந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கும் கூலி உயர்ந்திருக்கிறது. அனைவருக்கும் உயர்வு இருக்கும்பொழுது பால் உற்பத்தியாளர்களுக்கும் உயர்த்தி தானே கொடுக்க வேண்டும். வரவு ஐந்தாண்டு காலத்தில் எவ்வளவு கூடியிருக்கிறது என்று சொன்னால், அதற்கு தகுந்தாற்போல் இருக்கும். வரவு கூடியிருக்கும்பொழுது, பலதரப்பட்ட விவசாயிகள் கால்நடை வளர்ப்பது என்பது சுலபமல்ல.
சில காலகட்டத்தில் கால்நடைகளை நோய் தாக்குகின்றபொழுது, அதை தாக்குபிடித்து அந்த கால்நடைகளை வளர்க்க வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது. அப்படி கால்நடைகளை நோய் தாக்குகின்றபொழுது, பால் உற்பத்தி குறைந்து விடுகின்றது. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு தான் அரசு, தீவிரமாக பரிசீலித்து இந்த பால் விலையை உயர்த்தியிருக்கிறது.
கேள்வி :- கால்நடைகளுக்கான தீவனத்தை ரேஷன் கடைகளில் அளிக்க முடியுமா?
பதில் :- அது இயலாத காரியம். அது நடைமுறையில் ஒத்துவராது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.