எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரையில் வரும் 12-ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு 24.6.2020 அன்று அதிகாலை 0.00 மணி முதல் 5.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை அமல் படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் மேலும் 7 நாட்களுக்கு, அதாவது 6.7.2020 அதிகாலை 0.00 மணி முதல் 12.7.2020 நள்ளிரவு 12.00 மணி வரை பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த முழு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவிதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் காலத்தில் இது மிகவும் தீவிரமாக்கப்பட்டு கண்காணிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்கும் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்யும்.
இந்தப் பகுதிகளில் கிருமி நாசினி ஒரு நாளைக்கு இருமுறை தெளிக்கப்படும். அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 days ago |
-
அரசின் மானியம் இல்லாவிட்டால்... எலான் மஸ்க்கை எச்சரித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
01 Jul 2025வாஷிங்டன் : அரசின் மானியங்கள் இல்லாவிட்டால் டெஸ்லா சி.இ.ஓ., எலான் மஸ்க், அநேகமாக தென்னாப்பிரிக்கா திரும்பி விடுவார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
-
மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு
01 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவிக்கு வரும் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவி
-
இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்கள் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
01 Jul 2025சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ தகவல்
01 Jul 2025வாஷங்டன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார் என்றும் இந்தியா - அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறி
-
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
01 Jul 2025இராமேசுவரம் : தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு
01 Jul 2025புதுடில்லி : வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைக்கப்பட்டுள்ளது.
-
ராமநாதபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
01 Jul 2025புதுடில்லி : மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை 87-ஐ ராமநாதபுரம் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமர் அமெரிக்க பயணம்
01 Jul 2025டெல்அவிவ் : இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரும் ஜூலை 7 ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிறந்தநாளை முன்னிட்டு வெங்கையா நாயுடு, அகிலேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2025சென்னை : முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் இருவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து த
-
நடுவானில் கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா விமானம்
01 Jul 2025புதுடில்லி : அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்த அடுத்த ஓரிரு நாட்களில் டில்லியில் இருந்து வியன்னா சென்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டு இருந
-
காவலாளி அஜித் குமார் மரணம்: நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
01 Jul 2025மதுரை : திருப்புவனம் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் கந்தர்லால் சுரேஷ் தலைமையில், நீதி விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்
-
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்காக வெற்றி நிச்சயம் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார் : ரூ.12 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்க ஏற்பாடு
01 Jul 2025சென்னை : சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற "நான் முதல்வன்" திட்டத்தின் மூன்றாண்டு வெற்றி விழாவில் உலகத்தரம் வாய்ந்த முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மற்
-
வீடு, வீடாக சென்று பிரசாரம் ஏன்? அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
01 Jul 2025சென்னை, டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.
-
எல்லை நிர்ணய விவகாரங்களில் இந்தியாவுடன் பேச தயார்: சீனா
01 Jul 2025பெய்ஜிங் : இந்தியாவுடன் எல்லை பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
-
2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இங்கி.க்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?
01 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் இன்று தொடங்கவுள்ள நிலைியல் வெற்றியே பெறாத மைதானத்தில் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசி
-
தொலைபேசி அழைப்பு கசிவு: தாய்லாந்து பிரதமர் ஷினவத்ராவை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்
01 Jul 2025பேங்காக், கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு நீதிமன்றம் இடைநீக்கம் செய
-
காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலில் 74 பொதுமக்கள் பலி
01 Jul 2025காசாமுனை : காசாவில் உணவுக்காக காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் 74 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
-
10-வது ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; அதிகாரமளித்தலின் புதிய சகாப்தம்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
01 Jul 2025புதுடில்லி : டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், அதிகாரமளித்தலின் புதிய சகாப்தத்திற்கு வழிவகுத்த ஒரு பயணத்திற்கு நாம் சாட்சியாக நி
-
இ.பி.எஸ். வீட்டிற்கு செல்வீர்களா? - முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்
01 Jul 2025சென்னை : இ.பி.எஸ். வீட்டிற்குச் செல்வீர்களா? என்ற கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினிடம் அளித்த பதிலளித்துள்ளார்.
-
தகவல் கிடைத்தவுடன் திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து விட்டோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
01 Jul 2025சென்னை : திருப்புவனம் கோவில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
-
பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாக்.குடன் பேச்சு இல்லை : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டம்
01 Jul 2025நியூயார்க் : பயங்கரவாத அமைப்புகளை இந்தியா இனி விட்டு வைக்காது என்றும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தவிர வேறு எந்த விஷயத்திலும் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை ந
-
வரி மசோதா நிறைவேறினால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: மஸ்க்
01 Jul 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள வரி மற்றும் செலவு மசோதாவுக்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
-
த.வெ.க. கொடி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: ஜூலை 3-ம் தேதி தீர்ப்பு
01 Jul 2025சென்னை : த.வெ.க.
-
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை: இ.பி.எஸ்.
01 Jul 2025சென்னை, “திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க.