எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி போட்டியில், தாய்லாந்தை வீழ்த்தி இந்தியா தங்க பதக்கத்தை வென்றது. இந்தப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக வெற்றி பெற்றது. மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வந்தது. இதில் இந்தியா, தாய்லாந்து, ஜப்பான், இந்தோனேஷியா, தென் கொரியா, சீனா, மலேசியா என்று மொத்தம் 7 அணிகள் இடம் பெற்று விளையாடின. இதில், அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி இறுதி போட்டியில் தாய்லாந்தை எதிர் கொண்டது. இறுதி போட்டியில், பிவி சிந்து உலக மகளிர் பேட்மிண்டன் தரவரிசையில் 17-வது இடத்தில் உள்ள சுபனிடா கேத்தோங்கை 21-12 21-12 என்ற கோல் கணக்கில் வீழ்த்தினார். அதன் மூலம் இறுதிச் சுற்றில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. தரவரிசையில் 23வது இடத்தில் இருக்கும் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஆகியோர் தரவரிசையில் 10வது இடத்தில் இருக்கும் ஜோங்கோல்பன் கிடிதரகுல் மற்றும் ரவிந்தா பிர ஜோங்ஜாய் ஜோடியை 21-16 18-21 21-16 என்ற கணக்கில் வீழ்த்தினர்.
இதையடுத்து நடந்த 2ஆவது ஒற்றையர் பிரிவில் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் 11-21 14-21 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தார். தேசிய சாம்பியனான இளம் ஸ்ருதி மிஸ்ரா மற்றும் பிரியா கொன்ஜெங்பாம் ஜோடி, உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள பென்யாபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் 11-21 9-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தனர். இதன் மூலமாக இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் 2-2 என்று சமநிலையில் இருந்தன. கடைசியாக வெற்றை தீர்மானிக்கும் 5ஆவது போட்டி நடந்தது. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனையான அன்மோல் கர்ப் 21-14 21-9 என்ற கணக்கில் தரவரிசையில் 45வது இடத்தில் இருக்கும் போர்ன்பிச்சா சோய்கிவோங்கை வீழ்த்தினார். இதன் மூலமாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக பிவி சிந்து தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
__________________________________________
நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய டேரில் மிட்செல் அணிக்கு திரும்பியுள்ளார்.
நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு., டிம் சவுதி (கேப்டன்), டாம் பிளண்டெல், டேவான் கான்வே, மேட் ஹென்ரி, ஸ்காட் குஜ்லின், டாம் லதம், டேரில் மிட்செல், வில் ஒ ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், நீல் வாக்னர், வில்லியம்சன், வில் யங்.
__________________________________________
சேவாக்கின் சாதனை சமன்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார். அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
__________________________________________
மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்
சர்வதேச டி20 லீக் கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. பங்கேற்று விளையாடிய 6 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ், கல்ப் ஜெய்ண்ட்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ், துபாய் கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியும், துபாய் கேபிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற துபாய் கேபிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. நிகோலஸ் பூரன் 57 ரன்னும், பிளட்சர் 53 ரன்னும், முகமது வசீம் 43 ரன்னும், குசால் பெரேரா 38 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய துபாய் கேபிடல்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நிகோலஸ் பூரன் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக நிகோலஸ் பூரனும் தொடர் நாயகனாக சிக்கந்தர் ராசாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
__________________________________________
இலங்கை திரில் வெற்றி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹசரங்கா 67 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 3 விக்கெட்டும், நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. கேப்டன் இப்ராஹிம் சட்ரன் மட்டும் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. இலங்கை அணி சார்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் 2 23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு
07 Jan 2026சென்னை, தமிழக மக்கள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட அரிசி, சர்க்கரை, கரும்புடன் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இன
-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற காரின் டயர் வெடித்தால் பரபரப்பு
07 Jan 2026திண்டுக்கல், முதல்வர் ஸ்டாலின் சென்ற கார் டயர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
துணிவிருந்தால் என்னை கைது செய்யுங்கள்: ட்ரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்
07 Jan 2026நியூயார்க், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சவால் விட்டுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? வெளியான புதிய தகவல்
07 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க.வுக்கு 17 முதல் 20 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு
07 Jan 2026தமிழகத்தில் ஜன. 9-ம் தேதி முதல் 3 நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
என் தந்தை விரைவில் நாடு திரும்புவார்: வெனிசுலா நாடாளுமன்றத்தில் மதுரோ மகன் உருக்கமான பேச்சு
07 Jan 2026காரக்கா, அமெரிக்காவால் கடத்தப்பட்டுள்ள என் தந்தை நிகோலஸ் மதுரோ மீண்டும் நாடு திரும்புவார் என பேரவையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கண்ணீர் மல்க உருக்கமாகப் பேசினார் அவர
-
அன்புமணியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை: டாக்டர் ராமதாஸ் முக்கிய தகவல்
07 Jan 2026சென்னை, இந்நிலையில் அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.
-
பாக்.கிற்கு ரகசிய தகவல்களை அளித்த இந்திய சிறுவன் கைது
07 Jan 2026சண்டிகார், பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
-
அதிகமான வரிவிதிப்பால் மோடி என் மீது வருத்தத்தில் உள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
07 Jan 2026வாஷிங்டன், நான் விதித்துள்ள வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்பது எனக்கு தெரியும் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு மக்களின் எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் : எடப்பாடி பழனிசாமி பேட்டி
07 Jan 2026சென்னை, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி அ.தி.மு.க. நல்லாட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 2026 தேர்தல் நமது சுயமரியாதைக்கு விடப்பட்டிருக்கும் சவால்: தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லயில் உள்ளவர்களா..? திண்டுக்கல் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
07 Jan 2026சென்னை, 2026 தேர்தல் என்பது, "தமிழ்நாட்டை நாங்கள் ஆளவேண்டுமா? இல்லை, எங்கேயோ டெல்லியில் இருந்து, நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஆள வேண்டுமா?
-
இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி
07 Jan 2026சென்னை, இது நம்ம ஆட்டம் 2026 போட்டிகளுக்கான இணையதள முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
திண்டுக்கல் மாவட்டத்திற்கு எட்டு புதிய அறிவிப்புகள்
07 Jan 2026திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்துக்கான 8 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.
-
நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம்
07 Jan 2026சென்னை, சென்னையில் நாளை நடைபெறவிருந்த அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டது.
-
மாணவர்களுக்கு மடிக்கணினிகளை 5 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கியிருக்க வேண்டும்: செங்கோட்டையன் கருத்து
07 Jan 2026சென்னை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விவகாரம் குறித்து செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜன. 28-ம் தேதி பிரதமர் தமிழ்நாடு வருகிறார்...? கூட்டணியை இறுதி செய்ய பா.ஜ.க. தீவிரம்
07 Jan 2026சென்னை, வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகயுள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகளை இறுதி செய்ய பா.ஜ.க.
-
இ.பி.எஸ்.சுடன் அன்புமணி சந்திப்பு: அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றது பா.ம.க..!
07 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்றது. இ.பி.எஸ்.
-
இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு: இரு நாட்டு நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை
07 Jan 2026புதுடெல்லி, இந்தியா-இஸ்ரேல் நட்புறவை வலுப்படுத்த ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
-
டி-20 உலக கோப்பை தொடர்: வங்கதேசத்துக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்பு
07 Jan 2026லண்டன், இந்தியாவில் வங்கதேச அணி விளையாட இருந்த டி-20 உலக கோப்பைக்கான போட்டிகளை இலங்கைக்கு மாற்ற ஐ.சி.சி. மறுப்புத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வன்முறைகள் அதிகரிப்பு...
-
கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த விவகாரம்: மாணவிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
07 Jan 2026மதுரை, கவர்னரிடம் இருந்து பட்டம் பெற மறுத்த மாணவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
நியூசி.க்கு எதிரான தொடரில் விளையாடுகிறார் ஷ்ரேயாஸ் : பி.சி.சி.ஐ. வெளியிட்ட முக்கிய தகவல்
07 Jan 2026புதுடெல்லி, பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு ஷ்ரேயாஸ் அய்யருக்கு முழுஉடற்தகுதி சான்று அளித்துள்ளது.
-
கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு
07 Jan 2026சென்னை, கீழ் நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
-
அரசுக்கு எதிரான போராட்டங்கள்: ஈரானில் உயிரிழப்பு 36 ஆக உயர்வு
07 Jan 2026டெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அது தொடர்பான வன்முறைகளில் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்: 6.20 லட்சம் பேர் விண்ணப்பம்
07 Jan 2026சென்னை, கடந்த சனி, ஞாயிறு அன்று நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமில் பெயர் சேர்க்க, திருத்தும் செய்ய 6.20 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து


