முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? - அண்ணாமலை கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      தமிழகம்
Annamalai 2

Source: provided

திருச்சி : என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 

திருச்சியில் நிருபர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: 

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் கொலை வழக்கில்  உண்மையை மூடி மறைக்க போலீசார் முயற்சி செய்கின்றனர். வழக்கை அவசர கதியில் முடிக்க காரணம் என்ன? ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக பல கேள்விகள் எழுகிறது.

சரண் அடைந்தவரை அவசரமாக என்கவுன்டர் செய்தது ஏன்?. போலீஸ் காவலில் இருந்தவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது. சரண்டரான ஒருவர் எப்படி தப்பிக்க முயற்சிப்பார்?. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை அரசு முறையாக விசாரிக்கவில்லை. 

தவறு செய்தவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும். அவசர அவசரமாக என்கவுன்டர் என்ற பெயரில் உயிரை பறிக்க வேண்டிய அவசியம் என்ன?இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து