எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படர்தாமரை,தோல் நோய்கள் நீங்க எளிய தீர்வு
- படர் தாமரை எனப்படும் தோல் நோய்க்கு என்ன மருந்து எடுத்துக்கொள்ளலாம் என்பதை காணலாம்.
- தோல் நோய் மற்றும் அலர்ஜி 13 முதல் 18வகை வகை உள்ளது.
- தோலில் நோய் வருவது,மூக்கில் நீர் வருவது, தோலில் அரிப்பு வருவது இவை அனைத்தும் அலர்ஜி எனப்படும் ஒருவிதமான ஒவ்வாமை ஆகும்.
- நமது உடலில் உள்ள கெட்ட நீர் மற்றும் அழுக்குகள் வியர்வை மூலமாக வெளியேற்றப்படும்,இந்த வெளியேற்றம் தடை படும்போது அது அரிப்பு,கொப்பளம்,அலர்ஜி மற்றும் தோல் நோயை ஏற்படுத்துகிறது.
- நமது உடலை சுத்தமாக அழுக்கு மற்றும் கெட்டநீர் சேராமல் பார்த்துக்கொண்டால் இந்த தோல் நோயில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
- நமது உடலில் உள்ள மறைமுகமான பகுதிகளை நம் அதிக கவனமெடுத்து சுத்தம் செய்ய வேண்டும்,இதன் மூலம் தோல் நோய்யை வரும்முன் தடுக்க முடியும்.
- ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு மாவையும்,கடலை மாவையும் போட்டு பன்னீர் அல்லது எலுமிச்சம்பழச்சாறு சிறிதளவு ஊற்றி உடன் சிறிதளவு தயிர் அல்லது மோரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை மறைவான பகுதிகள் உட்பட உடலின் அனைத்து பகுதிகளிலும் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன் தடவிக்கொண்டு பின் குளிக்கும் போது மயிர் கால்களுக்கு இடையில் உள்ள அனைத்து விதமான கெட்ட நீர்கள் மற்றும் அழுக்குகளும் வெளியேறி அலர்ஜி மற்றும் தோல் நோய் வராமல் நம்மை பாதுகாக்கும்.
- கை,கால்,தொடை,அக்குள்,முகம் மற்றும் மறைவான அனைத்து இடங்களிலும் இந்தகலவையை தடவி நல்ல பயன் பெறலாம்.
- இதை செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி ஈரத்தன்மை அகன்று நல்ல காற்றோட்டம் ஏற்பட்டு தோல் நோய் வருவதை தடுக்கிறது.
- இந்த மருத்துவமுறையை தொடந்து பின்பற்ற வேண்டும்,மேலும் கட்டாயம் சோப்பு போட்டு தான் குளிக்கவேண்டும் என்பவர்கள் முதலில் சோப்பு போட்டு குளித்து விட்டு பின்னர் இந்த கலவையையும் பயன்படுத்தி வந்தால் அலர்ஜி விலகும்.
- இதன் அடுத்தகட்டமாக ஏற்படுவது படர் தாமரை,இது கருப்பு சிகப்பு மற்றும் வெள்ளை கொப்பளங்கள் போல் ஏற்பட்டு அதிக எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும்.
- இவை சிறு சிறு வட்டமாகவும் பொரிப்பொரியாகவும் ஏற்படலாம்.
- இந்த படர் தாமரையை தடுக்க சிறிதளவு எலுமிச்சம் பழ சாறுடன், சிறிதளவு மஞ்சளை சேர்த்து ஒரு கலவையை தயார் செய்து அதை தடவி வந்தால் குணம் பெறலாம்.
- கட்டி சூடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலந்து பூசினாலும் படர் தாமரை அகலும்.
- குளித்த பின் தோலில் ஏற்படும் வறண்ட தன்மையை இது சரிசெய்யும்.
- தோலின் நிறம் மாறி அதிக அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
- படர் தாமரை முற்றி வெண்மை கொப்பளம் ஏற்பட்டால் கருஞ்சீரத்தூளை இந்த கலவையில் சேர்த்து பயன்படுத்தினால் நல்ல பலன்தரும்.
- இந்த மருத்துவ முறைகளை பின்பற்றி வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
- வேர்க்குரு என்பது வெப்ப சூழலில் உண்டாககூடிய ஒன்று. இது அதிகமாக வியர்வையில் இருப்பவர்களுக்கு, வெயிலில் அதிகம் செல்பவர்களுக்கு அதிகமாக உண்டாகும்.
- அதிகப்படியான வியர்வை மற்றும் மோசமான சுகாதார பிரச்சனைக் காரணமாக வேனல்கட்டி,வேர்க்குரு வருகிறது.
- கோடைகாலத்தில் வரக்கூடிய வேர்க்குரு பிரச்சனையை சரியான முறையில் கையாண்டால் வேர்க்குருவை தடுத்துவிடலாம்
- வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம்.
- வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம். மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்; கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
- சந்தனத்தை பன்னீர் கொண்டு குழைத்து உடைந்த கொப்புளங்கள் இருக்கும் இடங்களில் தடவி விடுவது சருமத்தை குளிர்விக்க செய்யும்.
- தினமும் இரு முறை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
- வியர்வை என்பதே உடலில் இருக்கும் உஷ்ணம் வெளியேறும் நிலை தான். இது சருமத்துளைகள் வழியாக வெளியேறும். இந்த துளைகள் அடைக்கும் போதுதான் வியர்வை தங்கி சிறு சிறு கொப்புளங்களாக சிவப்பு நிறத்தில் வெளிப்படும்.
- வேர்க்குரு சிவப்பு நிறத்தில் அரிப்பும் நமைச்சலும் கொண்டு அதிக அசெளகரியத்தை உண்டாக்கும்.
- உடலில் நீரேற்றம் குறையாமல் தினசரி 3-4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் உஷ்ணத்தை தவிர்க்க செய்யும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வியர்வையையும் உஷ்ணத்தையும் தணிக்கும்.
- கோடையில் கிடைக்கும் நுங்கு அதிகம் சேர்க்கலாம்,இளநீர் தினசரி குடிக்கலாம், இதனால் கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சல் தன்மை குறைந்து, வேர்க்குருவினால் ஏற்பட்ட அரிப்பும் சிவப்பு தோலும் மறைந்து விடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
15 Jun 2025டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு
15 Jun 2025பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
15 Jun 2025சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்: தந்தையர் தினத்தில் கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
-
ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
15 Jun 2025டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!
15 Jun 2025திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
-
4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்
15 Jun 2025சென்னை : த.வெ.க.
-
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்: இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தீவிர மோதல்
15 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தொடர்ந்த தீவிர மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
15 Jun 2025சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதிய
-
ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை
15 Jun 2025தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
-
இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி-320 பேர் படுகாயம்
15 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா.
-
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jun 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
15 Jun 2025ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்
15 Jun 2025லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி
15 Jun 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக நேற்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றார்.
-
பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு
15 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-06-2025.
16 Jun 2025 -
இன்றைய ராசிபலன்
15 Jun 2025 -
இன்றைய நாள் எப்படி?
15 Jun 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
15 Jun 2025- திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.
- சோழவந்தா ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- கீழ்திருப்பதி கோவ