எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 4, புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ஆகிய 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதில் காலை 9.40 மணிக்கு பெங்களூரு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மாலை 6.10 மணிக்கு கவுகாத்திக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், இரவு 9.10 மணிக்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம், இரவு 10.40 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்களும் மற்றும் அதிகாலை 1 மணிக்கு புனே, காலை 9 மணி, மாலை 5.35 மணிக்கு பெங்களூரு, இரவு 8.20 மணிக்கு டெல்லி, இரவு 10.05 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வரவேண்டிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
நிர்வாக காரணங்களால், இந்த விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டு உள்ளதாக விமான நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. விமானங்கள் திடீர் ரத்தால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்து இருந்த பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, இதை போல் நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள விமான பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் இன்று இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டு விட்டு, அதன் பின்பு பயணம் செய்ய விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளதாக பயணிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


