எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவில் உள்ள குமி நகரில் கடந்த 27-ந் தேதி தொடங்கியது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் சீனா 15 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 26 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. இந்தியா 8 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் 2-வது இடத்தை தனதாக்கியது.
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நமது அணியின் அற்புதமான செயல்திறனுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகத் தெரிந்தது. விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.
____________________________________________________________________________________________________________________________________
ராஜீவ் சுக்லா பி.சி.சி.ஐ. தலைவர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைய வுள்ளதையொட்டி, அவருக்குப் பதிலாக பி.சி.சி.ஐ.யில் புதிய இடைக்காலத் தலைவராக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பதவியேற்கவுள்ளதாக பி.சி.சி.ஐ.யில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். வருகிற ஜூலை மாதத்தில் பொறுப்பேற்கவுள்ள ராஜீவ் சுக்லா மூன்று மாதங்கள் பதவி வகிப்பார் என்றும், செப்டம்பரில் நடைபெறும் வருடாந்திர பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலிக்குப் பிறகு புதிய தலைவராக ரோஜர் பின்னி 2022 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைய தேர்தலின் போது 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னி மட்டுமே மனுத் தாக்கல் செய்திருந்தார். வருகிற ஜூலை 19 ஆம் தேதியன்று ரோஜர் பின்னி 70 வயதை எட்டுகிறார். பி.சி.சி.ஐ. தலைவருக்கான வயது வரம்பு 70. அதனாலேயே புதிய தலைவருக்கான தேர்வு நடைபெற்றுள்ளது.
____________________________________________________________________________________________________________________________________
தென்னாப்பிரிக்கா வீரர் ஓய்வு
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக விளையாடி வரும் கிளாசன், இதுவரை 60 சர்வதேச ஒருநாள், 58 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2,141 ரன்களும், டி20 போட்டிகளில் 1,000 ரன்களும் குவித்துள்ளார். மேலும், ஐ.பி.எல். தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிளாசன், 48 போட்டிகளில் 2 சதங்கள், 7 அரைசதங்கள் உள்பட 1,480 ரன்கள் எடுத்துள்ளார்.
ஓய்வு தொடர்பாக கிளாசன் வெளியிட்ட அறிவிப்பில், ” இது உண்மையிலேயே மிகவும் கடினமான முடிவு, ஆனால், முழு மனதுடன் எடுத்துள்ளேன். எனக்கு கிடைத்த சிறந்த நட்புகளையும் உறவுகளையும் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகக் கருதுகிறேன். என் வாழ்க்கையில், என்னை நம்பிய சில பயிற்சியாளர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
____________________________________________________________________________________________________________________________________
கோலியின் உணவகத்துக்கு அபராதம்
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒன் 8 கம்யூன் என்ற பிரபல மதுபான விடுதி மற்றும் உணவகத்தை விராட் கோலி நடத்தி வருகிறார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள மதுபான விடுதியின் உணவகப் பகுதியில் ‘புகைப்பிடிக்க அனுமதியில்லை’ என்ற அறிவிப்பு பலகை வைக்காததால் பெங்களூரு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ஏற்கெனவே, ஒன் 8 கம்யூன் மதுபான விடுதியின் மீது இரண்டு முறை நடவடிக்கை எடுக்கப்பட்டு சர்ச்சையானது.
முதலில், கடந்தாண்டு ஜூன் மாதம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து மதுபான விடுதியை நடத்துவதாக பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம், தீயணைப்புத் துறையிடம் முறையான அனுமதி பெறாத குற்றச்சாட்டுக்காக பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
____________________________________________________________________________________________________________________________________
“ஐ.பி.எல். 2025-ன் மிகச் சிறந்த ஷாட்!” - ஸ்ரேயஸ் அய்யருக்கு டிவில்லியர்ஸ் புகழாரம்
ஐ.பி.எல். 2025-ன் நேற்று முன்தினம் 204 ரன்களை இலக்காகக் கொண்டு இறங்கும்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கடைசி 3 ஓவர்களில் 31 ரன்கள் தேவை. பும்ராவிடம் ஓவரைக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா. பும்ரா 140+ கி.மீ. வேக யார்க்கரை ஸ்டம்பை நோக்கி இறக்கினார். மிடில் ஸ்டம்பின் அடிப்பகுதி நொறுங்கியிருக்கும் அப்படிப்பட்ட யார்க்கர் அது. மட்டையை கடைசி நொடியில் இறக்கினார் அய்யர், பந்து தேர்ட்மேன் திசையில் பவுண்டரிக்குப் பறந்தது. திகைப்பூட்டும் ஷாட். “இது ஷாட் ஆப் த ஐ.பி.எல்., என்னைப் பொறுத்தவரை இந்த ஐ.பி.எல். தொடரின் ஆகச் சிறந்த ஷாட். பந்து நேராக மிடில் ஸ்டம்பைத் தாக்க வந்தது. துல்லிய யார்க்கர். மட்டையின் அடிப்பகுதியையே உடைக்கக் கூடிய யார்க்கர். அதை ஆடவே முடியாது. அதைப் போய் பவுண்டரிக்கு விரட்டினார் ஸ்ரேயஸ் அய்யர்.
மும்பை இந்தியன்ஸிடமிருந்து ஆட்டத்தைப் பறித்த ஷாட் அது. அதுவும் உலகின் தலை சிறந்த பவுலருக்கு எதிராக. நிச்சயம் நம்ப முடியாத பேட்டிங் அது. தூய ஆற்றல் மற்றும் உந்தம், என்ன ஒரு ஃபண்டாஸ்டிக் பிளேயர். இந்த உலகத்தில் இல்லாத இன்னிங்ஸ் இது. இந்த இன்னிங்ஸுக்காக வரும் அனைத்துப் பாராட்டுகளுக்கும் அய்யர் தகுதியானவர். வாழ்வா சாவா போட்டியில் மிகவும் நிதானமாக அமைதியாக வெற்றி பெற்றுத் தந்தார் என்று கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் நிலவில் வெற்றிகர தரையிறக்கம்
05 Jun 2025டோக்கியோ: நிலவின் வடக்கு பகுதியில் ஜப்பான் தனியார் ஆய்வு விண்கலம் தரையிறங்கியது.
-
காசாவில் 2 பிணை கைதிகளின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல்
05 Jun 2025காசா: காசாவில் 2 பிணை கைதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தகவல் தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் அதிரடி கைது: கூடுதல் டி.ஜி.பி. தகவல்
05 Jun 2025சென்னை: தமிழ்நாட்டில் 136 சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் தெரிவித்துள்ளார்.
-
லைகா நிறுவனத்துக்கு ரூ. 21 கோடியை நடிகர் விஷால் வட்டியுடன் தர வேண்டும் சென்னை ஐகோர்ட் உத்தரவு
05 Jun 2025சென்னை: லைகா நிறுவனத்துக்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
05 Jun 2025நியூயார்க்: உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா தக்க பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர் துயர சம்பவம் குறித்து தாமாக முன்வந்து கர்நாடகா உயர் நீதிமன்றம் விசாரணை
05 Jun 2025பெங்களூர்: கர்நாடாகவில் ஐ.பி.எல்.
-
நார்வே செஸ் தொடர்: உலக சாம்பியனை வீழ்த்திய வைஷாலி
05 Jun 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி, உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.
-
எச்சரிக்கை விடுத்த போலீஸ்; மறுத்து அடம் பிடித்த ஆர்.சி.பி. 11 பேர் பலி சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்
05 Jun 2025பெங்களூரு: போலீஸ் எச்சரிக்கை விடுத்தும் ஆர்.சி.பி. நிர்வாகம் அடம் பிடித்ததே 11 பேர் பலியானதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
-
சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை
05 Jun 2025ராய்ப்பூர்: சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.
-
ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538 கோடியில் ஒப்பந்தம்
05 Jun 2025சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ.
-
இங்கிலாந்து அணியில் ஓக்ஸ்
05 Jun 2025இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணியில் கிறிஸ் ஓக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
-
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கார் வீட்டுக்குள் புகுந்ததில் 6 பேர் பலி
05 Jun 2025நாசிக்: சாலையோரம் உள்ள வீட்டுக்குள் கார் புகுந்ததையோட்டி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பெண் பலி
05 Jun 2025உடுமலை: பெங்களூருவில் ஐ.பி.எல். சாம்பியன்ஷிப் ஆர்.சி.பி.
-
ஐ.நா.வின் பொருளாதார, சமூக கவுன்சிலுக்கு இந்தியா தேர்வு
05 Jun 2025ஜெனீவா: ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 18 நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ள நிலையில், தற்போது இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
-
பெங்களூரு கூட்ட நெரிசல்: சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை, முற்றிலும் உடைந்துவிட்டேன்: கோலி
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்.சி.பி. வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2025.
06 Jun 2025 -
ஐ.ஐ.டி.யில் இடம்பிடித்த மாணவியின் கல்விச்செலவை அரசே ஏற்கும்: முதல்வர்
05 Jun 2025சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் பிடித்த பழங்குடியின மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் தமிழக அரசு அறிவிப்பு
05 Jun 2025சென்னை: ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
05 Jun 2025லண்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
பெங்களூரு நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதி ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவிப்பு
05 Jun 2025பெங்களூரு: பெங்களூரு நெரிசலில் சிக்கி உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
11 பேர் உயிரிழப்பு...
-
மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
05 Jun 2025சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அலுவலகத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்கள்
-
ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வு
05 Jun 2025புதுடில்லி: ஐ.நா. பொருளாதார-சமூக கவுன்சிலின் உறுப்பினராக 2026 முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
-
ஐ.ஐ.டியில் இடம் பிடித்த மாணவி ராஜேஸ்வரிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
05 Jun 2025சென்னை: மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் ஒப்புதல்
05 Jun 2025பாகிஸ்தான்: 2025-26 பட்ஜெட்டிற்கு ரூ.4.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய பாகிஸ்தான் ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 4,866-ஐ தாண்டியது 24 மணி நேரத்தில் 7 பேர் பலி
05 Jun 2025புதுடில்லி: இந்தியாவில் இதுவரை 4,866 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி இருக்கின்றனர்.