எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஒரே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. அவரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷ்ரேயாஸ் ஐயர் கூறியதாவது:- ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட்ட வீரர் அல்ல. கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார். பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன். இவ்வாறு கங்குலி தெரிவித்துள்ளார்.
_____________________________________________________________________________________
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார். 22 வயதாகும் ஹைதராபாதைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் 749 ரன்கள் மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார். கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா விளையாடவுள்ளது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது:
ஐதராபாதைச் சேர்ந்த சர்வதேச வீரரான என். தாக்குர் திலக் வர்மா ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்கு விளையாடுவதற்காக அந்த அணி நிர்வாகத்தால் அணுகப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்காக அவர் சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1,204 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50.16 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 121 ஆகவும் உள்ளது. முதல் தர போட்டிகளில் அவர் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________
தயாராக உள்ளோம்: ஆலே போப்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உற்சாகத்துடன் தயாராக இருப்பதாக இங்கிலாந்தின் ஆலி போப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இது இளமையான அணி. ஆனால் இந்த இந்திய வீரர்களிடம் நிறைய ஆழமான திறமை இருக்கிறது. அவர்கள் நல்ல இளம் வீரர்களுடன் இங்கே வந்திருக்கிறார்கள். ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு சத்தமாக பேசக்கூடிய ஒளி நிறைந்த விராட் கோலியை இந்தியா மிஸ் செய்யும். ஆனால், அவர்களுடைய மற்ற வீரர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்கள்.
அதற்கு எங்களுடைய வீரர்களும் தயாராக இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு சிறந்த நேரமாகும். கடந்த கோடைக் காலத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடினோம். ஆனால், இந்திய அணி நிறைய தரத்தைக் கொண்டு வரும். எனவே, நாங்கள் அதிகமாக எதையும் பார்க்காமல் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக இத்தொடரில் விளையாட நாங்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
_____________________________________________________________________________________
பரிசுத் தொகை அறவிப்பு
டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது. இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணி, மற்றும் 2ம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை விவரங்களை காணலாம். அதன்படி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.30.75 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.18.50 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
_____________________________________________________________________________________
மூன்று அணிகள் தகுதி
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும். போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும். ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன. தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார். இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி
13 Jun 2025அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
-
ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி? - திருச்சி த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு
13 Jun 2025திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
-
இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
13 Jun 2025புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களுக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Jun 2025சென்னை : மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி.
-
மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
13 Jun 2025தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
13 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையானது.
-
உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
13 Jun 2025ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-06-2025
13 Jun 2025 -
திடீர் தொழில்நுட்ப கோளாறு: திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
13 Jun 2025சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு
-
கருப்பு பட்டையுடன் வீரர்கள்
13 Jun 2025குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளா
-
அதிகாலையில் தெஹ்ரானில் குண்டு மழை: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 Jun 2025தெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
-
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக்குழு: த.வெ.க. தலைவர் விஜய்யுடன் சந்திப்பு
13 Jun 2025பரந்தூர் : பரந்தூர் மக்களை விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில் சந்தித்துள்ளனர்.
-
கடன் வசூல் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட 2 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
13 Jun 2025சென்னை : கடன் வசூல் ஒழுங்கு மசோதா உள்ளிட்ட 2 முக்கிய மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 Jun 2025அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
அகமதாபாத்தில் பலியானவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி
13 Jun 2025மாமல்லபுரம் : அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
குஜராத் விமான விபத்தில் 2 விமான பணிப்பெண்கள் உள்பட 10 ஊழியர்கள் பலி
13 Jun 2025குஜராத் : குஜராத் விமான விபத்தில் 2 விமானிகள் மற்றும் 10 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
-
நாட்டிற்காக சிறப்பானதை செய்ய அற்புதமான வாய்ப்பு: கவுதம் காம்பீர்
13 Jun 2025பெக்கன்ஹாம் : நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்று இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் காம்பீர் எழுச்சி உரையாற்றினார்.
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்கா அறிவிப்பு
13 Jun 2025வாஷிங்டன் : ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்
-
கீழடி அகழாய்வில் மேலும் சான்றுகள் கேட்கிறார்கள்: தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்க முயற்சி : மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 Jun 2025சென்னை : கீழடி அகழாய்வில் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள், இது தொடர்பாக மேலும் சான்றுகள் தேவை என்று தமிழர்களின
-
கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி
13 Jun 2025அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
-
வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைப்பு : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
13 Jun 2025சென்னை : தேசதுரோக குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஓராண்டு தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27-ம் த
-
மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்கள் கடமை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
13 Jun 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., அ.தி.மு.க.
-
டெஸ்ட் கிரிக்கெட்: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
13 Jun 2025லார்ட்ஸ் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 43 ஆண்டு கால சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார்.
ரபாடா அபாரம்...
-
அகமதாபாத் விமான விபத்து: காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டு தொகை ரூ.1,290 கோடி
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விபத்தில் ரூ.1,290 கோடி இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.