முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'ஒரணியில் தமிழ்நாடு' திட்டம் மூலம் 1 கோடியே 35 லட்சம் பேர் தி.மு.க.வில் இணைந்தனர் : கட்சி தலைமை அறிவிப்பு

புதன்கிழமை, 16 ஜூலை 2025      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

சென்னை : தி.மு.க.வின் ஒரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு திட்டத்தில் 1 கோடியே 35 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.  

இது குறித்து தி.மு.க. வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு., ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார். அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி,தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க தி.மு.க.வில் மக்களை உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும்முன்னெடுப்பு திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் , கடந்த ஜூலை 3 ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, 10ம் தேதி  திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் , “ஓரணியில் தமிழ்நாடு”என்ற மாபெரும் முன்னெடுப்புதிட்டத்தில், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களைசேர்த்தார். மேலும், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கழக தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை கடந்த 12 ம் தேதி முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்து, தி.மு.க. மக்களை உறுப்பினர்களாகசேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடுஎன்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ்தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இணைக்கப்பட்ட மக்களின் விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஓரணியில் தமிழ்நாடு என்ற மாபெரும் முன்னெடுப்புதிட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாகசந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்.கே.என். நேரு, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர். எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைஅமைச்சர் . சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன், மன்னம்பந்தல் ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா, மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியச் செயலாளர்முருகமணி ஆகியோர் உடனிருந்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் இதுவரை 1,35,43,103 நபர்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து