எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான் என்றும் அவர் கூறினார். பணி நியமன ஆணைகளை பெற்ற ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் மொழிப் பாடத்திறன் மற்றும் கணிதத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான "திறன்" இயக்கத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள புத்தகங்களை துணை முதல்வர் வெளியிட்டார். மேலும் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குக் கணினிசார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன் மற்றும் அதனைப் பயன்படுத்தும் நுட்ப அறிவியலையும் கற்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட பாடநூல்களையும் வெளியிட்டார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது.,"ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரத்து 457 தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றன். அதோடு சேர்த்து பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக 'திறன்' மற்றும் டிஎன் ஸ்பார்க் ஆகிய இரண்டு முக்கியமான முன்னெடுப்புகளையும் இங்கே தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனக்கு எப்பவுமே ஆசிரியர்களைப் பார்த்தாலே கொஞ்சம் பதற்றம் வந்துவிடும். ஒன்றிரண்டு ஆசிரியர்களை பார்த்தாலே பதற்றம் வந்து விடும். இன்றைக்கு இத்தனை ஆசிரியர்கள், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் வந்து இருக்கிறீர்கள். எனவே உங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் பதற்றம் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும், உங்களை எல்லாம் இன்றைக்கு ஒரே இடத்தில் பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கின்றது.
தொடக்கக் கல்வியில் 100 சதவீதம் இடைநிற்றல் இல்லாத ஒரே மாநிலம் இந்தியாவில் தமிழ்நாடு மட்டும்தான். அதற்கு காரணமும் வந்திருக்கக்கூடிய ஆசிரியர்கள் நீங்கள் தான். இதனை நான் சும்மா சொல்லவில்லை. மத்திய அரசினுடைய புள்ளிவிவரங்கள் இதை சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க கல்வித்துறையில் பணியேற்கக்கூடிய உங்களுக்கெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஊர்கூடி இழுக்க வேண்டிய அந்த கல்வி எனும் தேருக்கு தொடக்கக் கல்வி ஆசிரியர்களாகிய நீங்கள்தான் அச்சாணி. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பாதவது., இந்த இனிய விழாவில் பங்கேற்று, இடைநிலை ஆசிரியர்களுக்கு நானே நேரில் பணிநியமன ஆணைகள் வழங்கவேண்டும் என ஆவலாக இருந்தேன். ஆனால், சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவர்கள் ஓய்வெடுக்குமாறு கூறிய அறிவுரையின் காரணமாக, இந்த விழாவில் பங்கேற்க இயலாமல் போனது வருத்தமளிக்கிறது. நிகழ்ச்சிக்கு நேரில் வர இயலாமல் போனாலும் எனது எண்ணமெல்லாம் உங்களைக் குறித்தே உள்ளது.
பிற்போக்குத்தனமான, அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆசிரியப் பெருமக்களின் தேவைகளை உணர்ந்த அரசு இந்த அரசு. மாணவர் நலனையும், ஆசிரியர் நலனையும் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை இரண்டு கண்களெனப் போற்றிச் செயலாற்றி வருகிறது. பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இன்னும் வளரும், தொடரும் என்று கூறி, புதிதாக பணியேற்கும் இடைநிலை ஆசிரியப் பெருமக்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 4 weeks ago |
-
வைகோ, கமல்ஹாசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
25 Jul 2025சென்னை, பதவிக்காலம் நிறைவுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள எம்.பி.,க்களை வாழ்த்தியும் தி.மு.க.
-
வீடு வீடாக சென்று பொதுமக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு
25 Jul 2025சென்னை, நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று மக்கள் பிரச்சினைகளை கேட்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
புதிய பிரசாரத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
25 Jul 2025புதுக்கோட்டை, 'உருட்டுகளும் திருட்டுகளும்' என்ற பெயரில் புதிய பிரசார முன்னெடுப்பை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
-
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Jul 2025ராமநாதபுரம், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
5-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம்
25 Jul 2025சென்னை : ஆஞ்சியோ சிகிச்சைக்கு பிறகு 5-வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல வெளியாகி
-
வைகோ தேர்தல் பிரச்சார அட்டவணை வெளியீடு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் 8 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதற்கான பிரச்சார அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
-
தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
25 Jul 2025சென்னை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
-
போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு: அமைச்சர் சிவசங்கர்
25 Jul 2025கடலூர், போக்குவரத்து துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
-
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பதவியேற்பு
25 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றனர்.
-
கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது
25 Jul 2025சூலூர்பேட்டை : திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்
25 Jul 2025சென்னை, பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.
-
பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு
25 Jul 2025புதுடில்லி, சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், பார்லிமென்டை சமூகமாக நடத்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
-
வாக்காளர்கள் சிறப்பு திருத்த விவகாரம்: நெருப்புடன் விளையாட வேண்டாம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை : பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கத்திற்கு கடும் கண்டனம்
25 Jul 2025சென்னை : வாக்காளர்கள் சிறப்பு திருத்தம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக உள்ளது என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நெருப்புடன் விளையாடதீர்கள் என்றும் எச்சரிக்க
-
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி
25 Jul 2025தூத்துக்குடி : ரூ.400 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்றுபிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்கிறார்.
-
பார்சிலோனா லெஜெண்ட் ஜவியை நிராகரித்த இந்திய கால்பந்து கூட்டமைப்பு
25 Jul 2025மும்பை : இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியளிக்க விரும்பும் பார்சிலோனா லெஜெண்ட் ஜவிக்கு அனைத்து இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்: ஜோ ரூட் வரலாற்று சாதனை
25 Jul 2025மான்செஸ்டர் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 3-வது வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார்.
-
கோடீஸ்வரர் பட்டியலில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
25 Jul 2025நியூயார்க் : கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை முன்னணி கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்தார்.
-
பார்லி., 5-வது நாளாக முடங்கியது: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் போராட்டம்
25 Jul 2025புதுடெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் நேற்று 5-வது நாளாக பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
-
ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை: இந்தியா சாதனை
25 Jul 2025புதுடில்லி, ட்ரோனில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
-
தாய்லாந்து - கம்போடியா மோதல்: முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சம்
25 Jul 2025சுரின் : தாய்லாந்து - கம்போடியா மோதலால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து முகாம்களில் 1,38,000 மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
-
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
25 Jul 2025மாலே, 2 நாட்கள் பயணமாக மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி அதிபர் மொய்சுவை சந்தித்து பேசினார்.
-
இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
25 Jul 2025புதுடெல்லி : இலவசங்கள் அறிவிப்புக்கு எதிரான மனு தள்ளுபடியை சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயண செலவு ரூ.295 கோடி
25 Jul 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு 4 ஆண்டுகளில் ரூ.295 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்
25 Jul 2025ஆப்பியா : தென்பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சமோவா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
25 Jul 2025சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று (ஜூலை 26) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.