எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் அரசியல் வட்டாரத்தில் கடந்த ஆண்டு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. 7-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும், தற்போதைய ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்ற முனைப்பில் தி.மு.க. தனது தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கி விட்டது.
தி.மு.க. தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் அவ்வப்போது கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் மூலமாகவும் உற்சாகப்படுத்தி வரும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தினமும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்த்து வைப்பதன் மூலம் அவர்களின் வாக்குகளை பெற முயற்சி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் தங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களிடமும் ஆலோசனை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நிர்வாகிகளுக்கு சிறந்த எதிர்காலத்துடன் பரிசுகளும் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கிய கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது 4-ம் கட்ட பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி தொடர்பான கருத்துக்கள் சிறுசிறு சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் அதனை தவிர்த்துவிட்டு தனது எழுச்சி பயணத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்தியும், தி.மு.க.வின் ஆட்சி, அவலங்கள் குறித்து பொதுமக்களிடமும் பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிக்கனியை பறித்திட தயாராகுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்ற மத்திய மந்திரி அமித்ஷா, தி.மு.க.வின் கனவுகள் தவிடு பொடியாக் கப்படும். பிரதமராகும் ராகுல்காந்தியின் கனவும், தமிழ்நாட்டில் உதயநிதியை அடுத்த முதலமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவும் பலிக்காது என்றார். அத்துடன் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கு தொண்டர்கள் அயராது பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் வெளியேறியது, பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன், அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனின் கட்சி பதவிகள் பறிப்பு என்று ஒருபுறம் அந்த கூட்ட ணியில் பரபரப்பு காட்சிகள் தொடர்ந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் அதிரடி காட்டி வருகிறார்கள்.
இந்தநிலையில் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிசாமியை நயினார் நாகேந்திரன் சந்தித்து உடம் நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோரிடம் சமரசம் பேச நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும், காலம் இருக்கிறது, நம்முடைய நோக்கமும், டி.டி.வி.தினகரனின் நோக்கமும் தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்பதுதான். தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என்ற ஒருமித்த கருத்து உள்ளவர்கள் ஒன்றாக சேர்ந்தால் அவர்களுடைய லட்சியங்கள் நிறைவேறும். இதே தவிர்த்து விட்டு சூழ்நிலை காரணமாக வெளியேறிவிட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன். நான் இப்பொழுதுதான் மாநில தலைவராக இருந்து கட்சியை பலப்படுத்துகிற வேலையை செய்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பரப்புரை பயணம், மாநாடு, சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ள நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் தமிழகத்தின் நான்கு மூலைகளிலும் பிரம்மாண்ட மாநாடுகளை நடத்த தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்த அரசியல் கட்சிகள் ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், கூட்டணியின் பலத்தை எதிர்க்கட்சிகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் பிரமாண்ட மாநில மாநாடுகளை நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த வரிசையில் பா.ஜ.க.வும் இணைந்துள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்த மாநாடுகளில் பிரதமர் மோடியை பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், அந்த மாநாடுகளில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளில் தற்போது முதலே தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஈடுபட்டு வருவதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க. நடத்தும் மாநாட்டில் பிரதமரை பங்கேற்க செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியிருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
முழு சந்திர கிரகணம்: இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை உள்பட பல நகரங்களில் பார்வையிட்ட மக்கள்
07 Sep 2025சென்னை : இந்தியாவில் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நேற்று நிகழ்ந்த முழு சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
-
த.வெ.க. தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியீடு
07 Sep 2025சென்னை : திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 13-ம் தேதி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள த.வெ.க.
-
இன்று சென்னை திரும்புகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
07 Sep 2025சென்னை : வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வா் மு.க.ஸ்டாலின், இன்று, திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறாா்.
-
விடுமுறை தினம்: குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
07 Sep 2025தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும்.
-
தமிழகத்தில் 4 இடங்களில் பா.ஜ.க. பிரமாண்ட மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
07 Sep 2025மதுரை : நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவை, தஞ்சாவூர், சென்னை, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்டமாக மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
-
சந்திர கிரகணம் எதிரொலி: திருச்செந்தூர் கோவிலில் நடை அடைப்பு
07 Sep 2025தூத்துக்குடி : சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
-
குறளிசைக்காவியம் படைத்த லிடியன் நாதஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
07 Sep 2025சென்னை : திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரனுக்கு பாராட்டுகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
செப்.9 முதல் அக்.19 வரை சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
07 Sep 2025தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, செப்.9-ம் தேதி முதல் அக்.19-ம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
-
பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்த புதிய தகவல் வெளியீடு
07 Sep 2025புதுடெல்லி : இனமோதல் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லவிருக்கும் பிரதமர் மோடியின் பயணத் திட்டம் பற்றி பா.ஜ.க. வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த செங்கோட்டையன்
07 Sep 2025சென்னை : அ.தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பும் எனக்கு கொடுக்கப்படவில்லை : முன்னாள் எம்.பி. நடிகர் ராமராஜன் பேட்டி
07 Sep 2025ஶ்ரீவில்லிபுத்தூர் : முன்னாள் எம்.பி.யான எனக்கு அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பும் கொடுக்கவில்லை.
-
முல்லை பெரியாறு அணையை தந்த பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
07 Sep 2025சென்னை : முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையைத் தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக் குடும்பத்தினருடனான சந்திப்பு குறி
-
மேலவையில் பின்னடைவு: பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா
07 Sep 2025டோக்கியோ : ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் பின்னடைவு காரணமாக ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது பதவியில் இருந்து விலகினார்.
-
செங்கோட்டையனுக்கு ஆதரவு: சத்தியபாமாவை கட்சி பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ். நடவடிக்கை
07 Sep 2025சென்னை : செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளரான முன்னாள் எம்.பி. சத்தியபாமாவின் கட்சி பதவியையும் பறித்துள்ளார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
-
இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல்: உக்ரைன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா-3 பேர் உயிரிழப்பு
07 Sep 2025கீவ் : உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா 800 ட்ரோன்களை ஏவியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது.
-
மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் நாளை பஞ்சாப் பயணம்
07 Sep 2025புதுடெல்லி : பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா மீண்டும் சாம்பியன்
07 Sep 2025நியூயார்க் : அமெரிக்கா ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமன்டா அனிசிமோவா, பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் மோதினர்.
-
அசாமில் பெற்றோருடன் நேரம் செலவிட அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை
07 Sep 2025கவுகாத்தி : அசாமில் பெற்றோருடன் அரசு ஊழியர்கள் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
லண்டனில் திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
07 Sep 2025லண்டன் : தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு
-
டி-20 கிரிக்கெட் போட்டி: கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை..!
07 Sep 2025ஹராரே : டி-20 கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவை முந்தி சிக்கந்தர் ராசா மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
-
பாக். கிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி
07 Sep 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தில் குண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார்.
-
போக்குவரத்து விதிமீறல்: அபராதம் செலுத்திய சித்தராமையா
07 Sep 2025பெங்களூரு : காரில் பயணித்த போது கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா 6 முறை சீட் பெல்ட் அணியாமல் விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் அபராதம் செலுத்தினார். 
-
செப்.28-ல் பி.சி.சி.ஐ. தலைவர் தேர்வு
07 Sep 2025இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) ஆண்டு பொதுக்கூட்டம் வரும் 28-ம் தேதி மும்பையில் நடைபெறுகிறது.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா? - விஜயபிரபாகரன் விளக்கம்
07 Sep 2025சென்னை : த.வெ.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் அறிவிப்போம் என்று தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினம் எதிரொலி: திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
07 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினம் காரணமாக நேற்று திருச்செந்தூரில் பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.