எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகர்கோவில், ஜூன்.16 - குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள செம்பங்கரையைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி ருக்மணி (வயது 27). கர்ப்பிணியான இவரை உறவினர்கள் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்த்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சைக்கு சென்ற இவருக்கு டாக்டர்கள் பிரசவ ஆபரேசன் செய்தனர். அப்போது அவரது உடல்நிலை மோசமானதால் ஆபரேசன் தியேட்டரில் இவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ருக்குமணியின் உடல்நிலை மோசமானது. உடனே டாக்டர்கள் ருக்குமணிக்கு கொடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் சிலிண்டரை சோதித்தனர். அப்போது தான் அது ஆக்சிஜன் சிலிண்டர் இல்லை என்பதும், நைட்ரஸ் ஆக்சைடு இருந்த சிலிண்டர் என்பது தெரியவந்தது. உடனே டாக்டர்கள் அந்த சிலிண்டரை மாற்றி விட்டு மீண்டும் ஆக்சிஜன் சிலிண்டரை கொடுத்தனர். அதற்குள் ருக்குமணியின் உடல்நிலை கவலைக்கிடமாகி அவர் கோமா நிலைக்கு சென்று விட்டார்.
இதை தொடர்ந்து ருக்குமணி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் கோமா நிலையில் இருந்து அவர் மீளவில்லை.
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி ருக்குமணியின் உறவினர்கள் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தனர். அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இதுவரை யாரால் தவறு நடந்தது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் பிரச்சனை மேலும் அதிகரித்தது.
இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு சிலிண்டர்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தை அழைத்து விசாரித்தனர். அங்கிருந்த ஊழியர்கள் தான் சிலிண்டரை மாற்றி இருக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் கியாஸ் சப்ளை செய்யும் நிறுவனத்தினரோ இதை மறுத்தனர். அவர்கள் கூறும் போது இரண்டு சிலிண்டர்களுமே வேறு வேறு கலரில் இருக்கும். சிலிண்டரின் மீதும் என்ன கியாஸ்? என்பது பற்றிய குறிப்பு இருக்கும். அப்படி இருக்கையில் ஆஸ்பத்திரி ஊழியர்களே சிலிண்டரை தவறுதலாக மாற்றி இருக்க வேண்டும் என்றனர். இரு தரப்பிலும் மாறிமாறி புகார் கூறியதால் இதில் யார் தவறு செய்தார்கள் என்பது பற்றி கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதயை கலெக்டர் ராஜேந்திர ரத்னூ உத்தரவின் பேரில் மருத்துவகுழு மற்றும் காவல்துறையினர் பேரில் மருத்துவகுழு மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை அறிக்கையின் விவரம் மருத்துவ உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ருக்மணிக்கு ஆபரேஷன் நடத்திய குழுவில் இருந்த டாக்டர்கள் முத்து செண்பகம், எட்வர்டு ஜான்சன், மகேஸ்வரி, மருந்தாளுனர்கள் சிவகலை, எசிடோர், சண்முகசுந்தர நாயகி, நர்சுகள் அனிதா, விஜயகுமாரி ஆகிய 8 பேருக்கும் மெமோ அளித்தனர். இந்த நிலையில் அந்த 8 பேரையும் சஸ்பெண்டு செய்து மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்பு
12 Jan 2026சென்னை, தமிழகத்தில் பெண்களுக்காக வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மர்மநபர்களால் ஒருவர் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Jan 2026சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில் ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொ
-
கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை பயன்படுத்த ஐகோர்ட் இடைக்கால தடை
12 Jan 2026சென்னை, நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா...? டாக்டர் ராமதாஸ் பதில்
12 Jan 2026சென்னை, சென்னையில் பா.ம.க.
-
மத்திய அரசை கண்டித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
12 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தினார்.
-
45 சவரன் நகையைக் கண்டெடுத்து ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு ரூ. 1 லட்சம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
12 Jan 2026சென்னை, தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த 45 சவரன் தங்க நகைகளை, காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
-
பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்களுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
12 Jan 2026மதுரை, பாலமேட்டில் வருகிற 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது.
-
போராட்டத்தின் போது கைதான ஆசிரியர்களை உடனே விடுவிக்க அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Jan 2026சென்னை, போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
கூட்டணி ஆட்சி விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், ராகுல் முடிவு செய்வார்கள்: செல்வப்பெருந்தகை
12 Jan 2026சென்னை, ஆட்சியில் பங்கு இல்லை என்பது ஐ.பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை ஆட்சியில் பங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் க
-
பாதையைவிட்டு விலகியது பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இஸ்ரோ தலைவர் தகவல்
12 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் திட்டமிடப்பட்ட பாதையைவிட்டு விலகியதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அறிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் படக்குழு அப்பீல்
12 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் சென்சார் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் படக்குழு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம். செளரி திருமஞ்சன சேவை, மூக்குத்தி சேவை
- மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
12 Jan 2026


