எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஜியாபாத், மூழ்கும் படகில் சமாஜ்வாடி கட்சி உள்ளது. அகிலேஷ் யாதவ் ஆட்சியில் உத்திரப்பிரதேசம் சீரழிந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கி பேசினார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி காஜியாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மூழ்கும் படகில் சமாஜ்வாடி:
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இளம் தலைவரான அகிலேஷ் ஆட்சி வந்ததால் மாநிலத்தில் வளர்ச்சிக்காக பாடுபடுவார். மாநிலம் வளர்ச்சி அடையும் என்று நினைத்தேன். ஆனால் கடந்த 5 ஆண்டுகால அவரின் ஆட்சியில் உத்திரப்பிரதேசம் சீரழிந்துவிட்டது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பெண்கள் தனியாக தெருவில் நடந்து செல்ல முடியவில்லை. பள்ளி மாணவிகள் பயத்தோடு கல்வி நிலையங்களுக்கு சென்று வருகிறார்கள்.
கிரிமனல்களுக்கு அடைக்கலம்:
மாநிலத்தில் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துவிட்டன. கிரிமினல்களுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் அடைக்கலமும் புகழிடமும் கொடுத்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டு காலத்தில் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான கிரிமினல் குற்றங்கள் நடந்துள்ளன. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகுட்டுவார்கள். மத்தியில் உள்ள எங்கள் ஆட்சி சரியா அல்லது இல்லையை என்பதை வரும் 2019-ம் ஆண்டு தெரிவிப்பார்கள். ஏழை விவசாயிகளின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றிபெற்றால் பறிக்கப்பட்ட ஏழைகளின் நிலங்கள் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
தணிக்கைக்கு மறுப்பு:
மாநிலத்தில் நடந்துள்ள வரவு செலவு கணக்குகள் குறித்து மத்திய தணிக்கைக்குழுவும் பொது கணக்குக்குழுவும் தணிக்கை செய்வது வழக்கம். கணக்கு தணிக்கைக்கு அகிலேஷ் மறுத்துவிட்டார். மாநிலத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது. வேலைக்காக பட்டதாரிகள் பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. கடந்த 14 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தற்போது நடக்கும் தேர்தலானது புதிய அரசும் புதிய முதல்வரும் வர வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதாவது பாரதிய ஜனதாவை வெற்றிபெறச்செய்ய வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


