எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, நவ.- 9 - பெட்ரோல் விலை உயர்வை கடுமையாக எதிர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது இந்த பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த விஷயத்தில் மம்தா பேனர்ஜி பல்டி அடித்துவிட்டார் என்றே சொல்லத் தோன்றுகிறது. மீண்டும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறுமாம் அந்த கட்சி. பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு வாரத்திற்கு ஒருமுறை உயர்த்தத் தொடங்கிவிட்டது. மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் எண்ணை நிறுவனங்களுக்கே இந்த அரசு வக்காலத்து வாங்கிப் பேசுகிறது. மேலும் விலை நிர்ணய உரிமையையும் அந்த நிறுவனங்களுக்கே தாரைவார்த்துவிட்டது மத்திய அரசு. இதனால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது. மக்கள் வாகனங்களை வைத்துக்கொள்ளவே பயப்படுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 1.80 உயர்த்தப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி, மத்திய அரசுக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறப்போவதாக மிரட்டினார். இதை அனைவரும் உண்மை என்றே நம்பினர். டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு முடிவைத் தெரிவிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்தது. அப்போது பிரதமரிடம் அவர்கள் இதுபற்றி விவாதித்தனர். தங்கள் கவலையையும் வெளிப்படுத்தினர். ஆனாலும் விலை உயர்வை திரும்பப் பெறுவது பற்றி அவர்களுக்கு பிரதமர் எந்த உறுதியும் அளிக்கவில்லையாம். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. அப்போது பெட்ரோல் விலை உயர்வுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் அவர்களது பாச்சா பலிக்கவில்லை. இதையடுத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நீடிப்போம் என்று கூறிவிட்டு அவர்கள் நழுவிக்கொண்டனர். இன்னொரு முறை இப்படி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று மிரட்டியதோடு திரிணாமுல் காங்கிரஸ் தனது பணியை முடித்துக்கொண்டது. அதாவது சமீபத்திய விலை உயர்வை அந்த கட்சி ஏற்றுக்கொண்டுவிட்டது. இதுகுறித்து பிரதமரை சந்தித்த பிறகு மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவருமான சுதிப் பந்தோபாத்தியாயா நிருபர்களிடம் கூறுகையில், பிரதமரிடம் எங்கள் உணர்வுகளை தெரிவித்தோம். கொல்கத்தாவில் நடந்த எங்கள் கட்சியின் எம்.பி.க்கள் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை அவரிடம் கொடுத்தோம் என்று கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், மீண்டும் இப்படியெல்லாம் முடிவெடுத்தால் அதாவது விலையை உயர்த்தினால் அதை சுலபமாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று பிரதமரிடம் கூறியதாக தெரிவித்தார். விலைக் குறைப்பு பற்றி பிரதமர் ஏதேனும் உறுதியளித்தாரா? என்று கேட்டபோது, அதற்கு பாதகமாக பதிலளித்தார் பந்தோபாத்தியாயா. முன்னதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் மம்தா பேனர்ஜி கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டால் நாங்கள் அரசில் இருக்க மாட்டோம், விலகிவிடுவோம் என்று அவர் கூறினாராம். ஆக இப்போதைக்கு அவர் விலை உயர்வை ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனால் மத்திய அரசு கவிழ்வதில் இருந்து தப்பிவிட்டது. மம்தா பேனர்ஜி என்றாலே பல்டிதானோ...?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Jan 2026- மதுரை கூடலழகர் பெருமாள் கனு உற்சவ பவனி.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் காலை கருட வாகனம், இரவு அனுமந்த வாகனம்.
- மதுரை செல்லத்தம்மன் விருசப சேவை.
-
இன்றைய நாள் எப்படி?
16 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
16 Jan 2026


