எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பன்னாட்டு மருந்துகளின் கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலியாகி விட்டார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்,
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கில மருத்துவம் தோன்றி நூற்றி அம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. தமிழ்மருத்துவம் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, தமிழ்மருத்துவம், இன்றைக்கும் பூண்டு.சீரகம், வெங்காயம் மிளகு போன்றவற்றை உணவில் எடுத்துக்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. ஏடிஎஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அருந்தலாம், அதை 15 ஆண்டுகளுக்கு முன்னரே தேவசகாயம் என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். நிலவேம்பு கஷாயத்தை பற்றி மக்களை குழப்புகிற செயலில் யாரும் இறங்க வேண்டாம். திமுக ஆட்சியில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டபோது, நிலவேம்பு கஷாயம் தான் வழங்கப்பட்டது. அப்போது கமல் சென்னையில் தானே இருந்தார். அப்போது ஏன் எதுவும் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் எது செய்தாலும் குற்றமாக கருதி கொண்டு பேசுகிறார். பன்னாட்டு மருந்துகளின் வியாபாரம் படுத்து விட்டதால் அந்த நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. அதற்கான செய்திகளை பரப்ப திட்டமிட்டு வருகின்றன. அதற்கு கமலஹாசன் அடிமையாகி விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. டெங்கு ஓழிப்பை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக மாற்றி போர்க்கால நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் உற்பத்தி செய்யும் கொசுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுப்படுத்தப்படும்.
டெங்கு விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திமுக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நடவடிக்கைகள் குறித்து பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் திமுக ஆக்கப்பூர்வமான பணியை செய்யவில்லை.
அரசு கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக கருதினால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அதில் எந்த தயக்கமும் காட்டாது. அம்மாவின் அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும், அதில் எந்த மாறுபாடும் இல்லை. அரசு கட்டிடங்கள் தரம் குறைந்திருப்பதாக கருதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட கட்டிடங்களை தமிழக அரசு இடிப்பதற்கும் தயங்காது.
டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பது, கமிஷன் அடிப்பதற்கு தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார், கமிஷன் கொள்ளை என்பதெல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த தீர்ப்பு வரும் 25-ம் தேதி வரவிருக்கிறது. இந்தியாவே தமிழ்நாட்டை எள்ளிநகையாடும் வகையில் நடந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழ்நாட்டையே தலைக்குனிய வைத்தவர்கள் கமிஷன் கொள்ளை என்றெல்லாம் பேசலாமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் இமாலய சாதனை படைத்தவர்கள், விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்தவர்கள், சர்க்கரை, பூச்சி மருந்தில் ஊழல் புரிந்தவர்கள் திமுகவினர், உலகிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் ஆட்சி திமுக ஆட்சி தான்,. எனவே ஸ்டாலினுக்கு அதை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
உள்ளாட்சித்தேர்தல் நடத்தவிடாமல் இடைக்கால தடையாணை பெற்றவர்கள் திமுகவினர் தான், நாங்கள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த தயாராக இருந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணைக்கு அடிப்படை காரணகர்த்தாவே திமுக தான். கருணாநிதியே மீண்டும் எழுந்து வந்தாலும் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அசைத்து பார்க்கக்கூட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
இங்கி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி முகமது சிராஜ் அசத்தல்
04 Jul 2025பர்மிங்காம் : 2-வது டெஸ்ட் போட்டியில், அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் கைப்பற்றி சிராஜ் அசத்தினார்.
587 ரன்கள் குவிப்பு...
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டால