எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பன்னாட்டு மருந்துகளின் கம்பெனிகளின் தூண்டுதலுக்கு பலியாகி விட்டார் என்று நடிகர் கமல்ஹாசன் மீது அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்,
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆங்கில மருத்துவம் தோன்றி நூற்றி அம்பது ஆண்டுகள் தான் ஆகிறது. தமிழ்மருத்துவம் என்பது கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது, தமிழ்மருத்துவம், இன்றைக்கும் பூண்டு.சீரகம், வெங்காயம் மிளகு போன்றவற்றை உணவில் எடுத்துக்கொண்டால் எந்த நோயும் நம்மை அண்டாது. ஏடிஎஸ் கொசுக்களால் தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு நிலவேம்பு கசாயம் அருந்தலாம், அதை 15 ஆண்டுகளுக்கு முன்னரே தேவசகாயம் என்ற மருத்துவர் கண்டுபிடித்துள்ளார். நிலவேம்பு கஷாயத்தை பற்றி மக்களை குழப்புகிற செயலில் யாரும் இறங்க வேண்டாம். திமுக ஆட்சியில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு ஏற்பட்டபோது, நிலவேம்பு கஷாயம் தான் வழங்கப்பட்டது. அப்போது கமல் சென்னையில் தானே இருந்தார். அப்போது ஏன் எதுவும் பேசவில்லை. அதிமுக ஆட்சியில் எது செய்தாலும் குற்றமாக கருதி கொண்டு பேசுகிறார். பன்னாட்டு மருந்துகளின் வியாபாரம் படுத்து விட்டதால் அந்த நிறுவனங்கள் தங்களது வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள முயன்று வருகின்றன. அதற்கான செய்திகளை பரப்ப திட்டமிட்டு வருகின்றன. அதற்கு கமலஹாசன் அடிமையாகி விட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது
டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அரசு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்தவர்கள் குறித்த புள்ளிவிபரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை. டெங்கு ஓழிப்பை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து மக்கள் இயக்கமாக மாற்றி போர்க்கால நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் உற்பத்தி செய்யும் கொசுக்களை ஒழிக்க மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுப்படுத்தப்படும்.
டெங்கு விவகாரத்தில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திமுக மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. அரசு நடவடிக்கைகள் குறித்து பொய்ப்பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் திமுக ஆக்கப்பூர்வமான பணியை செய்யவில்லை.
அரசு கட்டிடங்கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டிருப்பதாக கருதினால் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. அதில் எந்த தயக்கமும் காட்டாது. அம்மாவின் அரசு முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளும், அதில் எந்த மாறுபாடும் இல்லை. அரசு கட்டிடங்கள் தரம் குறைந்திருப்பதாக கருதப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படிப்பட்ட கட்டிடங்களை தமிழக அரசு இடிப்பதற்கும் தயங்காது.
டெங்குவை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டிருப்பது, கமிஷன் அடிப்பதற்கு தான் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார், கமிஷன் கொள்ளை என்பதெல்லாம் திமுக ஆட்சியில் தான் நடந்தது. 1 லட்சத்து 80 ஆயிரம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த தீர்ப்பு வரும் 25-ம் தேதி வரவிருக்கிறது. இந்தியாவே தமிழ்நாட்டை எள்ளிநகையாடும் வகையில் நடந்தது ஸ்பெக்ட்ரம் ஊழல் தமிழ்நாட்டையே தலைக்குனிய வைத்தவர்கள் கமிஷன் கொள்ளை என்றெல்லாம் பேசலாமா? ஸ்பெக்ட்ரம் ஊழலில் இமாலய சாதனை படைத்தவர்கள், விஞ்ஞான ரீதியில் ஊழல் புரிந்தவர்கள், சர்க்கரை, பூச்சி மருந்தில் ஊழல் புரிந்தவர்கள் திமுகவினர், உலகிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட முதல் ஆட்சி திமுக ஆட்சி தான்,. எனவே ஸ்டாலினுக்கு அதை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.
உள்ளாட்சித்தேர்தல் நடத்தவிடாமல் இடைக்கால தடையாணை பெற்றவர்கள் திமுகவினர் தான், நாங்கள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த தயாராக இருந்த போது அதற்கு முட்டுக்கட்டை போட்டது திமுக. நீதிமன்றத்தில் இடைக்கால தடையாணைக்கு அடிப்படை காரணகர்த்தாவே திமுக தான். கருணாநிதியே மீண்டும் எழுந்து வந்தாலும் அதிமுக ஆட்சியையும் கட்சியையும் அசைத்து பார்க்கக்கூட முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025