எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்தினர்.பிறந்த நாளை முனனிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினார்.
நல உதவிகள்
விஐடி பல்கலைக்கழகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஆர்.என்.பங்சன் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. வேலூர் பாரதியார் விவேகானந்தர் வஊசி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டாளர் முனைவர் பி.செந்தில் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து பேசுகையில் பிறந்த நாள் கானும் ஜி.வி.செல்வம் வேலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பாலாறு புதர்கள் வளர்ந்து மாசுபட்டு கிடந்ததை கவனத்தில் கொண்டு பசுமை பாலாறு என்ற திட்டத்தின் மூலமாக பாலாற்றை சுத்தம் செய்தார்.அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதோடு வேலூர் பசுமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமை வேலூர் என்ற திட்டத்தின் மூலமாக பல ஆயிரம் மரங்களை நட்டு பசுமையாக்கியள்ளார் என பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே ஜி.வி.செல்வத்தை வாழ்த்தி பேசுகையில் குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்டுள்ள இவர் குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.
இதில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று வாழ்த்தி பேசியதாவது:
இந்திய நாடு உலகில் அதிக இளைஞர் பலம் கொண்ட நாடாக விளங்கி வருகிறது அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதின் மூலம் இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறும்.நம்மிடையே பலமும் உள்ளது பலவீனமும் உள்ளது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆறிந்து பலவீனத்தை விலக்குவதற்கான முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி முடியும்.நமக்கு குடும்ப பொறுப்பு சமூக பொறுப்பு நாட்டு பொறுப்பு உள்ளது குடும்பம் மற்றும் சமூக பொறுப்பில் அக்கரை காட்டுவதின் மூலம் நாடு உயரும்.சமூகத்தில் நல்ல மணிதராக விளங்க வேண்டும் நல்ல மனிதருக்குரிய தகுதிகள் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலமாக திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். நம்மிடையே உழைப்பு குறைந்து வருகிறது சோம்பேறித்தனம் உள்ள நாடு முன்னேறமுடியாது. குறைந்த வேலை அதிக வருவாய் என்று நினைத்தால் அது குற்ற செயல்களில் தான் முடியும்.இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்று தர வேண்டும் அதோடு ஒழுக்கம் கட்டுபாடு நேரம் தவறாமை அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை மூலமாக அதன் கவுரவ தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் குழந்தை தொழிலாளர் நல பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள ஆடைகள், விளையாட்டு சாதனங்கள், நோட்டு புத்தகங்கள், குடிநீர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:
மனிதன் வாழ்வதற்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் அவசியம் அதனை கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு இந்த நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மணப்பான்மை வேண்டும்.நாம் வளர்ந்து விட்டால் போதாது சமுதாயமும் வளர வேண்டும் அதற்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.நமது நாடு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதின் மூலம் நமது நாடு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையை சேர்ந்த வே.சிவா ப.சேகர் ரொட்டேரியன் சீனிவாசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர் முடிவில் நாஷ்வா அமைப்பின் தலைவர் வி.கே.எஸ்.எம்.கனேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


