எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அட்டை வைத்திருப்பவர்கள் இந்த திட்டத்தின் பயன்களை முழுமையாக அறியாமல் விண்ணப்பிக்காமல் இருப்பதால், இது குறித்து வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தந்து அவர்கள் இந்த திட்டத்தில் அனைத்து பயன்களையும் பெற வழி செய்ய வேண்டும் என கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவுறுத்தினார்.
மகளிர் விவசாயிகள்
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜ கண்டிகை பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, நிர்வாகிகள் சி.எம்.ஆர்.முரளி, ரமேஷ்குமார், எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோஜ், திருப்பதி முன்னிலை வகித்தனர்.
கோட்டாட்சியர் முத்துசாமி வரவேற்றார். நிகழ்வில் வருவாய் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை, தோட்டக்கலை , வேளாண்மை துறை, மக்கள் செய்தி தொடர்பு துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம், தேசிய காசநோய் தடுப்பு திட்டம், சுகாதார துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், சித்த மருத்துவம், கல்வி துறை, கால்நடை பராமரிப்பு துறை, மகளிர் விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட துறை சார்ந்த கண்காட்சிகள் அமைக்கப்பட்டதை ஆட்சியர் பார்வையிட்டதோடு முகாமில் அதிகாரிகள் துறை சார்ந்த அரசு திட்டங்களையும் மக்கள் இத்திட்டங்களில் இருந்து பயன் பெறும் முறை குறித்தும் எடுத்துரைத்தனர்.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் பேசுகையில் சித்தராஜகண்டிகை, சிறுபுழல்பேட்டை, புது கும்மிடிப்பூண்டி, பாத்தபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகள் சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இருப்பதால் இங்குள்ள தொழிற்சாலைகளால் காற்று மாசு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவும், சிப்காட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் அதிக அளவு வட இந்தியர்களே வேலை செய்து வரும் நிலையில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாதம் ஓரு முறை மாவட்டத்தில் ஒரு பகுதியிலும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுவதோடு, அந்தந்த வட்டத்தில் 2011ஆம் ஆண்டு முதல் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் நடத்தப்படுகிறது என்றும், மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் டெங்கு காய்ச்சல் வெகுவாக தடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் தேவையற்ற பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை வைத்துக் கொள்ள கூடாதென்றும், மாவட்டத்தில் இது வரை சுகாதார சீர்கேட்டுடன் டெங்கு பரவும் வகையில் வீடுகளை வைத்திருந்த 2900 பேரிடம் இருந்து 12லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து பேசியவர் திருவள்ளூர் மாவட்டத்தை பிப்ரவரி-2018க்குள் 100 சதவீத தனிநபர் இல்ல கழிவறையை பயன்படுத்துவோர் உள்ள மாவட்டமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும்,பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இந்த திட்டத்தின் பயன்கள் குறித்து முழுமையாக தெரியாத சூழலில் இது குறித்து வருவாய் துறையினர் மக்களுக்கு தெரிவித்து அவர்கள் திட்டத்தின் பயன்களை பெற வழிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் 286 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்கள்,100 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், விதவை உதவித் தொகைக்கான ஆணைகளும், 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளும், 50க்கும் மேற்பட்டோருக்கு வேளாண் துறை மூலம் மரக்கன்றுகள், விவசாய பொருள்கள், விவசாய கருவிகள் வழங்கப்பட்டது.
மேலும் முகாமில் சுகாதார துறை சார்பாக பொது மருத்துவ சிகிச்சை, கண் பரிசோதனை, சக்கரை, ரத்த அழுத்த பரிசோதனை நடத்தப்பட்டது. மக்கள் தொடர்பு முகாமின் முடிவில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால் நன்றி கூறினார். இந்த முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலர் நாராயணன், வேளாண் துறை உதவி இயக்குனர் தேவேந்திர சிங் பரிதார், வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயமாக கிடைக்கும் : சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jul 2025கடலூர் : தமிழகம் ஓரணியில் இருக்கும் போது டெல்லி அணியின் எந்த காவி திட்டமும் இங்கே பலிக்காது என சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
இன்று நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jul 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்க
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
100 கோடி மக்களுக்கு முன்மாதிரி: சுபான்ஷூ சுக்லாவை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி
15 Jul 2025புதுடில்லி : விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பூமிக்கு திரும்பிய இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன் என பிரதமர் மோடி கூறி
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Jul 2025லண்டன் : இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப் பட்டுள்ளது.
முன்னிலை...
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.