எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்தும் பொருட்டு கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் சமூகநலத்துறை மூலம் சிறப்பாக செயல்படுத்தப்படும் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் பொருட்டு 26.12.2017 இன்று சமூகநலத் துறை இயக்குநர் வே. அமுதவல்லி கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அலுவலர்களுடன் திட்டம் தொடர்பாக கலந்தாலோசித்தார்.
ஆய்வு கூட்டம்
மேலும் அங்கு சிகிச்சை பெறும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்பிணி பெண்களிடம் பெண் குழந்தையின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் அங்கு அமைக்கப்பட்ட திட்டம் குறித்தான விளம்பர பதகைகள் மற்றும் சுவரோவியங்களை பார்வையிட்டனர்.மேலும், கடலூர் மாவட்ட அரசு சேவை இல்லம் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பயிலும் பெண் குழந்தைகள், அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள், கடலூர் நகர்புற காந்தி நகர் அங்கன்வாடி மையத்தில் பயன்பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உச்சிமேடு கிராமத்தில் உள்ள சுய உதவி குழுக்கள் மற்றும் அங்குள்ள பெண் குழந்தைகளை சந்தித்து கலந்தாலோசித்ததுடன் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பெண்குழந்தைகளை பாதுகாப்பதற்கு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், கர்ப்பிணி (ம) பாலூட்டும் தாய்மார்கள் அவர்களது குடும்ப உறவினர்கள் பலருடனும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வும் ஆலோசனையும் நடத்தப்பட்டது.பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, , முன்னிலையில் பெண் குழந்தைகளைக் காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை செயல்படுத்தும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடன் மேற்படி திட்டம் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் சிறப்பாக செயல்படுத்த எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சமூக நலத்துறை இயக்குநர் வே.அமுதவல்லி, ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிகழ்வின்போது குழந்தைகள் நல இணை இயக்குநர் நந்திதா , மாவட்ட திட்ட அலுவலர் (விழுப்புரம்) அன்பழகி, கடலூர் மாவட்ட சமூகநல அலுவலர் பூங்குழலி, மற்றும் கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் பழனி, இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) டாக்டர்.எஸ்.மாதவி, துணை இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் ஜவஹர்லால் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


