எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் போடிநாயக்கனூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்கழக செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.டி.கணேசன், சற்குணம், முன்னாள் நகர்மன்ற தலைவர் பழனிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர அவைத்தலைவர் கனல்காந்தி வரவேற்றார். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கழக கொள்கைபரப்பு துணை செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான வைகைசெல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வைகை செல்வன் அவர்கள் பேசும்போது, நமது கழகத்தின் பல்வேறு போராட்டத்தின் விளைவாக தான் காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடிந்தது. அதன் வெற்றி விழாவை நாம்தான் கொண்டாட வேண்டும். காவிரி பிரச்னை மட்டுமல்ல, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியது, ஜல்லிக்கட்டு பிரச்னையை தீர்த்தது, ஸ்டெர்லைட் ஆலையை மூடியது, முல்லை பெரியார் அணையில் நீர்தேக்க அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக சட்டபோராட்டம் நடத்தி உயர்த்தியது, தற்போது 19 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தல் என பல்வேறு திட்டங்களை, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை கொண்டு வந்தது, செயல்படுத்தியது கழக அரசு மட்டுமே. அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 280 ஏக்கர் நிலத்தை தாரைவார்த்தது, 1974ல் காவிரி நதிநீர் ஒப்பந்ததை புதுப்பிக்காதது என தமிழகத்திற்கு திமுக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.கே நகர் தேர்தலில் டி.டி.வி தினகரன் ஜெயிக்கவில்லை. 20 ரூபாய் நோட்டு ஜெயித்திருக்கிறது. தற்போது ஆர்.கே நகருக்குள் தினகரன் செல்ல முடியவில்லை. ஏனென்றால் 20 ரூபாய் நோட்டை காட்டி பத்தாயிரம் எங்கே என்று கேட்கின்றனர். ஆர்.கே நகர் தொகுதி மக்களுக்கு தினகரன் கடன்காரனாக இருக்கிறார். அவரை நம்பி போன தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களையும் நீங்கள் அனைவரும் அமைச்சர்கள் என்று கூறி அவர்களின் பிழைப்பை கெடுத்திருக்கிறார்.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்னையில் சமூக விரோதிகள் ஊடுருவியதே கலவரத்திற்கு காரணம் என்ற உண்மையை ரஜினிகாந்த் சொன்னார். கலவரத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக கழக அரசு அறிவித்திருக்கிறது. அதிமுக என்பது ஒரு எளிய கட்சி, தொண்டர்களின் கட்சி. இங்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு உயர்வு நிச்சயம். அதனால் தான் கழகம் சுமார் 28 ஆண்டுகாலமாக தமிழக மக்கள் ஆட்சியில் அமர வைத்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016 தேர்தலின்போது தனது உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் 234 தொகுதிகளுக்கும் சென்று தமிழக மக்களிடம் கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை எடுத்துக்கூறி தனித்து நின்று அமோக வெற்றி பெற்று 32 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனையை செய்தார். அப்படிப்பட்ட தொண்டர்கள் பலமிக்க கட்சியை தினகரனும் அவருடைய குடும்பத்தினரும் ஒன்றும் அசைத்துவிட முடியாது.
தமிழக அரசியல் களத்தில் வெற்றிடம் என்ற மாயையை நம்பி முதியோர் பென்சன் வாங்குகின்ற வயதில் பரட்டையும், சப்பாணியும் கட்சி ஆரம்பித்துள்ளனர். தனது மனைவியிடமே கடன் வைத்துள்ள கமல், ரஜினி மனைவி நடத்திய ஆஸ்ரமம் பள்ளிக்கு வாடகை கொடுக்கவில்லை. இவர்கள் பொதுவாழ்க்கையில் எப்படி நல்லவர்களாக இருப்பார்கள். எத்தனையோ நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர். எம்.ஜி.ஆர் அவர்களே எனது வாரிசு என்ற பாக்கியராஜ், நடிகர் சிவாஜி உள்ளிட்டோர் கட்சி ஆரம்பித்தனர். ஆனால் அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை. மக்களால் போற்றப்பட்ட ம.பொ.சி கூட அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மிகப்பெரும் தலைவராக உருவெடுத்தார். அதற்கு காரணம் நடிகராக இருந்ததால் மக்களிடம் அறிமுகம் கிடைத்தது. நல்லவனாக இருந்ததால் முதல்வராக முடிந்தது என அவரே கூறியுள்ளார் என்றார். அரசியலில் சாதித்து காட்டியவர் புரட்சித்தலைவர். அவர் வழி வந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதை சரியான பாதையில் கொண்டு சென்றதால் நமது கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களை பெற்றது. இப்படி நமது கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் எளிய தொண்டனையும் சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் பல்வேறு பதவிகளில் அமர்த்தி அழகு பார்ப்பது தான். ஆனால் திமுகவில் மேல்மட்ட தலைவர்கள் ஒவ்வொருவரும் குறுநில மன்னர்களாக உள்ளனர். அவர்களை, அவர்களின் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வந்துவிட முடியாது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தின் நலனிற்காக பல்வேறு முடிவுகளை உடனடியாக எடுக்க கூடியவர். காவிரியில் தமிழகத்திற்குரிய தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக தயவில் மத்தியில் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த வாஜ்பாயிடம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கோரிக்கை வைத்தார். அதற்கு யோசித்த வாஜ்பாய் அரசை தூக்கி எறிந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வருகின்ற ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இருவரும் அமைதியான தலைவர்கள். ஆனால் அவர்களிடம் உரசிப்பார்த்தால் அதன் விளைவுகளை அனுபவிக்கதான் வேண்டும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இடைவிடாத முயற்சி மற்றும் போராட்டத்தாலும், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் மத்திய அரசிற்கு கொடுத்த அழுத்தத்தாலும் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. ஆணையம் டெல்லியில் இயங்கும் ஆணையத்திற்கான உறுப்பினர்களை கர்நாடக அரசு நியமிக்க மறுத்தபோது மத்திய அரசே நியமித்துள்ளது. எனவே நமக்கு தற்போது காவிரியில் 177.25 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் என்றார்.
இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
ரசிகர்களுக்கு நன்றி சொன்ன '3 BHK' படக்குழு
16 Jul 2025சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள '3 BHK' திரைப்படம் ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
'தேசிங்குராஜா-2' திரைவிமர்சனம்
16 Jul 2025காவல் ஆணையராக இருக்கும் விமல், குற்றவாளிகளுக்கு துணை போவதோடு காவல்துறைக்கே களங்கமாக இருக்கிறார். அவரது நண்பரான ரவுடி ஜனா, அமைச்சர் மகனை கொல்லப்போவதாக சவால் விடுகிறார்.
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கியது தமிழக அரசு
16 Jul 2025சென்னை, கட்டிடங்களுக்கு சீல் வைக்க ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுளளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்க