Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

3500 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மியை டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்த விஞ்ஞானிகள்

உலக அதிசயங்களில் எகிப்து நாட்டில் உள்ள பிரமிடும் அதில் வைக்கப்பட்டுள்ள மம்மிகளும் மக்களை எப்போதும் வியப்பில் ஆழ்த்தி வருபவை.  மம்மிக்களை ஆய்வு செய்யும்போது பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக 3500 ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு கண்டடைந்தனர் என்பது விளங்காத மர்மமாகவே உள்ளது. இதனால் மம்மிக்களை ஆய்வு செய்யும் போது அவற்றை திறப்பதால் பாதுகாக்கப்பட்ட உடல்கள் தற்போது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மம்மிக்களை திறக்காமலேயே அவற்றை டிஜிட்டல் தொழில் நுட்ப முறையில் ஆய்வு செய்யும் பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து  பிரமிடிலிருந்து கடந்த 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட அமேன்ஹோடெப் என்ற மன்னரின் மம்மியை டிஜிட்டல்  முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பல்வேறு அதிசய தகவல்கள் வெளியாகின. அவர் இறக்கும் போது அவருக்கு வயது 35.  சுமார் 5 அடி உயரம் கொண்ட அந்த மன்னரின் பற்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்துள்ளன.  உடலை சுற்றியிருந்த துணிக்குள் மன்னருக்கு தங்கத்தாலான ஆடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. உடலில் காயங்கள் இல்லாததால் அவரது மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தெரியவில்லை. இவர் கிமு 1525 முதல் 1504 வரை 21 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். இதனால் இவர் மிகவும் இள வயதிலேயே முடி சூடி இருக்கலாம். இன்றைக்கு மருத்துவம் தொழில் மிகப் பெரிய அளவில் வளர்ந்துள்ள போதிலும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலை பதப்படுத்தும் தொழில் நுட்பத்தை எகிப்தியர்கள் எவ்வாறு தெரிந்து வைத்துள்ளனர் என்பது புரியாத மர்மமாகவே உள்ளது.

முதன் முதலில் விமானத்தை கண்டு பிடித்தவர் இந்தியரா- ஆச்சரிய தகவல்

உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் தெரியும் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள்தான் என்று. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது. ஆனால் யாருக்கும் தெரியாது அவருக்கு முன்பே 1895 லேயே இந்தியர் ஒருவர் விமானத்தை கண்டு பிடித்து, அதை பறக்கவும் விட்டுள்ளார். ஆனால் அங்கீகாரம் பெறாத அந்த மேதையின் பெயர் ஷிவ்கார் பாபுஜி தல்படே. மும்பையில் 1864 இல் பிறந்த அவர், அப்போதே சமஸ்கிருத இலக்கியங்களில் வித்தகராக விளங்கினார். அவர் ஆள் இல்லாத விமானத்தை மும்பையில் உள்ள சவ்பாத்தி பீச்சில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பறக்க விட்டுள்ளார். சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள விமானங்கள் குறித்து பண்டைய சாஸ்திரங்களை கற்று அதே போன்ற ஒரு விமானத்தை இவர் உருவாக்கியுள்ளார். மூங்கில் வடிவிலான அது பாதரசம் அல்லது யூரியா மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் பரோடா மன்னர் சகஜியா கெய்க்வாட், மகாதேவ் கோவிந்த ஆரோன் ராய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவரது விமானம் சுமார் 1500 அடி வரை பறந்து சென்று சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனால் அவரது முயற்சிக்கு அப்போதைய ஆங்கிலேய அரசு முட்டுக்கட்டை போட்டது. பாதரசத்தை வைத்து வெடி பொருள் தயாரித்ததாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர் விடுதலை ஆகி வெளியில் வந்த போது ரைட் சகோதரர்களின் விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.

பெண்களுக்கு மட்டும்

ஏரோபிக்ஸ், பளு தூக்குதல், கார்டியோ மற்றும் உடலை நீட்டி வளைத்து செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்றவை பெண்களுக்கு மிகவும் ஏற்ற உடற்பயிற்சிகளாகும். இந்த உடற்பயிற்சிகள் பெண்களுக்கு வலிமையையும், வளைந்து கொடுக்கும் தன்மையையும் கொடுக்கின்றன. மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன.

இணைய அடிமை

இந்தியாவில் சுமார் 90% இளைஞர்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்களாம். இதன்மூலம் சமூக வலைதளங்களுக்கு அடிமையானவர்கள், வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாகவே தூங்க செல்கின்றனர். இதன்மூலம் தூக்க குறைபாடு, மன அழுத்தம், சோர்வு போன்ற நோய்களுக்கு ஆளாவதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இங்கிலாந்துக்கு முதலிடம்

பிறந்தது முதல் 3 மாதங்களில் நீண்ட நேரம் அழுது அடம் பிடித்து தொந்தரவு செய்யும் குழந்தைகள் குறித்த ஆய்வில் உலக நாடுகளின் குழந்தைகள் இடம் பெற்றனர். இதில், இங்கிலாந்து குழந்தைகள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரமும், வாரத்தில் குறைந்தது 3 நாட்களும் அழுகின்றன. கனடா, இத்தாலியிலும் இதேநிலைதான்.

3-டி பிரிண்ட் பாலம்

உலகில் முதன்முதலாக நெதர்லாந்தில் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது. அது ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லாரிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago