உலகளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை பூர்த்திசெய்யும் விதமாக புது புது வசதிகளை வெளியீட்டு வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய தகவலை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய தகவலை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட உரையாடலிலும், குழு உரையாடலிலும் அனுப்பிய தகவல்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. வெளியான செய்தியின்படி, இந்த புதிய அப்டேட் வசதி வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
ஆரஞ்சுப் பழத்தை 'கமலா பழம்' என்றும் அழைப்பதுண்டு. இதில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன. நோய்ப் படுக்கையில் இருக்கும்போது நோயாளிகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கச் சொல்வார்கள். இது உடல் சோர்வை நீக்கும். தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அருமையான உணவு. அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும்போது ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் உடன் பேதி நின்று நல்ல குணம் கிடைக்கும். இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் தூங்கச் செல்லும்முன் நூறு மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.
ரஃப்ரீ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய மாடல் ஸ்மார்ட் போனை சோப்பு போட்டு கழுவி சுத்தப்படுத்தலாம். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோசெரா என்ற நிறுவனம் இந்த புதிய வகை ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. சூடான தண்ணீரில் கூட ஸ்மார்ட் போனை சுத்தபடுத்தலாம். இந்த மொபைல் நௌவ்கட் இயங்கு தளத்தில் இயங்கும்.
அதிக எடை கொண்ட ரயிலைத் தண்டவாளங்கள் தாங்குகின்றன. அவற்றை, அடிக்கட்டைகள் தாங்குகின்றன. முன்பெல்லாம் மரத்தால் ஆன அடிக்கட்டைகள் பயன்படுத்தப் பட்டன. தற்போது கான்கிரீட்டால் செய்யப்பட்ட அடிக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லும்போது நிலைப்புத்தன்மையை உண்டாக்குவதற்காக, சரளைக் கற்களை நிரப்பி வைக்கிறார்கள். உருண்டையான அல்லது வழவழப்பான கற்கள் என்றால், ரயிலின் வேகத்தால் ஏற்படும் அதிர்வில் உருண்டு ஓடிவிடும். மாறாக கூர்மையான விளிம்புகளுடைய சரளைக் கற்கள், ஒன்றோடு ஒன்று நெருக்கமாகப் பிணைத்துக்கொள்கின்றன. இதனால் நிலைப்புத்தன்மை நன்றாகக் கிடைக்கிறது. ரயில் செல்லும்போது சரளைக் கற்களும் உருண்டு ஓடுவதில்லை. சரளைக் கற்களுக்கு மேல் சற்று உயரமாகத் தண்டவாளம் அமைக்கப்படுவதால், மண் மூடும் வாய்ப்பும் இல்லை. மழையால் தண்ணீரும் தேங்குவதில்லை. செடி, கொடிகளும் முளைப்பதில்லை. அதனால்தான் தண்டவாளத்தில் சரளைக் கற்களைப் போடப்படுகின்றன.
வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்யவோ, எடிட் செய்யவோ முடியாது. இது குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும். டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். விரைவில் வாட்ஸ்ஆப்பில் இந்த ஆப்ஷன்ஸ்கள் இணையும்.
உலகில் மிக உயரமான சிலை எங்கிருக்கிறது தெரியுமா.. இந்தியாவில்தான். குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலையாகும். 182 மீட்டர் அதாவது 597 அடி உயரம் கொண்ட இந்த சிலை சீனாவில் உள்ள புத்தர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை ஆகியவற்றை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. 2 ஆவதாக சீனாவில் உள்ள ஸ்பிரிங் கோயிலில் உள்ள புத்தர் சிலை 128 மீட்டர் உயரமும், 3 ஆவதாக சீனாவில் நன்சானில் உள்ள 108 மீட்டர் உயரம் கொண்ட மற்றொரு புத்தர் சிலையும் 3 ஆவது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்காவின் 93 மீட்டர் உயரம் கொண்ட சுதந்திர தேவி சிலைக்கு 4 ஆவது இடமே கிடைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
முதல் முறையாக பார்சல்களை அனுப்ப தனி ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
20 Nov 2025சென்னை: பார்சல்களை அனுப்ப தனி ரயில் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு: விண்ணப்பப்பதிவு அறிவிப்பு திடீர் ‘வாபஸ்'
20 Nov 2025சென்னை: சிறப்பு ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பப்பதிவு வாபஸ் ஆனது.
-
ரூ.823 கோடிமதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது அமெரிக்கா
20 Nov 2025நியூயார்க்: டாங்கி எதிர்ப்பு ஏவுகண, பீரங்கி குண்டுகள் இந்தியாவுக்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்படும் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஏலம் போன ஓவியம்
20 Nov 2025வாஷிங்டேன்: அமெரிக்காவில் ரூ.2 ஆயிரம் கோடிக்கு ஓவியம் ஏலம் போனது.
-
மாணவி கொலை வழக்கு: வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
20 Nov 2025ராமநாதபுரம்: மாணவி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்துள்ளது.
-
நியூயார்க் மேயரை இன்று சந்திக்கிறோர் ட்ரம்ப்
20 Nov 2025நியூயார்க்: நியூயார்க் மேயர் மம்தானியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்கிறார்.
-
ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
20 Nov 2025ஐதராபாத்: ஐதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-11-2025.
20 Nov 2025 -
பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி: பிரசாந்த் கிஷோர் மவுன விரதம்
20 Nov 2025டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் நேற்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டார்.
-
தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை: பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு
20 Nov 2025சென்னை, தயாநிதி மாறனுக்கு நாவடக்கம் தேவை என்று பா.ம.க. செய்தி தொடர்பாளர் கே.பாலு கூறினார்.
-
ஜி-20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று தென்ஆப்பிரிக்கா பயணம்
20 Nov 2025புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயம்
20 Nov 2025சென்னை, திராவிட வெற்றிக் கழகம் என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை மல்லை சத்யா தொடங்கினார்.
-
தூய்மை பணியாளர்களை இழிவுபடுத்துவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசு தூய்மை பணியாளர்களை தொடர்ந்து இழிவு படுத்திவருவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராஜபாளையம் அருகே கோவில் காவலாளிகள் கொலை வழக்கில் கைதானவர்கள் மருத்துவமனையில் அனுமதி
20 Nov 2025விருதுநகர்: ராஜபாளையம் அருக கோவில் காவலாளிகள் கொலையில் கைதான வாலிபர்களுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
-
அதிக ஆண்டுகள் முதல்வர் பதவி: டாப் 10-ல் 8-வது இடத்திற்கு முன்னேறினார் நிதிஷ்குமார்
20 Nov 2025பாட்னா, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் டாப் 10-ல் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
-
அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் சவுதி அரேபியா அறிவிப்பு
20 Nov 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்
20 Nov 2025சென்னை: தி.மு.க. அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம்: முதல்வர்
20 Nov 2025சென்னை: ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் - 2 பேரிடம் விசாரணை
20 Nov 2025திண்டுக்கல், திண்டுக்கல்லில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்து 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
இந்திய வீரர்களுக்கு வரவேற்பு
20 Nov 2025இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடைபெற்றது.
-
சென்னை-ஆந்திரா இடையே சிறப்பு ரயில்
20 Nov 2025சென்னை: சென்னை - ஆந்திரா இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
சென்னையில் பராமரிப்பு பணி: 49 மின்சார ரயில் சேவைகள் ரத்து
20 Nov 2025சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் 49 மின்சார ரயில் சேவை, சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டன.
-
மசோதா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு
20 Nov 2025புதுடெல்லி, மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும விவசாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தி.மு.க. வரவேற்பு அளித்துள்ளது.
-
வரலாற்றில் முதல்முறை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இரு பூர்வகுடி வீரர்களுக்கு இடம்
20 Nov 2025மெல்போர்ன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியில் இரு பூர்வக்குடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
ஒரு ரூபாய் நாணயத்துடன் வைரலாகும் பிரதமர் நரேந்திர மோடியின் க்கடிகாரம்
20 Nov 2025கோவை: ஒரு ரூபாய் நாணயத்துடன் பிரதமர் மோடியின் கைக்கடிகாரம் வைரலாகிறது.


