முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எல்.இ.டி ஸ்டிக்

மரத்தாலான ஸ்டிக் ஒன்றில் எல்.இ.டி கதிர்களை உமிழும் விளக்குகளைப் பொருத்தி காற்றில் படம் வரையும் அதிசயத்தை டிஐஒய் நெட்வொர்க் எனும் நிறுவனம். இந்தக் கருவிக்கு பிக்செல் ஸ்டிக் என்று பெயரிட்டுள்ளனர். பார்ப்பதற்கு மேஜிக் போல தெரிந்தாலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இது சாத்தியமாகியுள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய பசுக்களுக்கு சிறப்பு விஆர் கண்ணாடிகள்

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய கால கட்டத்தில் கன்னாபின்னாவென தறிகெட்டு போய் கொண்டிருக்கிறது. எதெதற்கு கருவிகள் வரும் அது எப்படி வரும் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சகலும் சாதனம் மயம் என்றாகி விட்டது. அண்மையில் பசு மாடுகள் அதிக பாலை தர வேண்டும் என்பதற்காக வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த İzzet Koçak என்ற விவசாயிதான் இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். எங்களிடம் உள்ள பசுக்களில் 2 பசுக்களை தேர்வு செய்து அவற்றுக்கு விஆர் கண்ணாடிகளை அணிவித்தோம். அதில் பசுமையான சூழலை படம் பிடித்து காட்டினோம். தற்போது அவை கூடுதலாக 27 லிட்டர் பால் கறக்கின்றன என்கிறார். என்ன கொடும சார் இது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் கலி காலம் சாரி..டிஜிட்டல் காலம்.

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

புற்றுநோயை கண்டுபிடிக்க ...

உயிர் கொல்லி நோயான புற்று நோய்க்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 5 லட்சம் பேர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகினர். புற்று நோயை மிக எளிதான பரிசோதனை மூலம் கண்டறியும் முறையாக, சீன விஞ்ஞானிகள் ஒரு துளி ரத்தம் மூலம் புற்று நோயை கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளனர். மனித உடலில் புற்று நோய் இருப்பதை ‘ஹீட் ஷாக் புரோட்டீன்’ (எச்.எஸ்.பி.’) எனப்படும் எச்.எஸ்.பி.90ஏ புரோட்டீன் மூலம் கண்டுபிடிக்க முடியும். இது மனித உடலில் இருந்து எடுக்கப்பட்டு பின்னர் அதை ரத்தத்துடன் கலந்து பரிசோதிக்கப்படுகிறது. தற்போது இது சீனா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் மூலம் விஞ்ஞானிகளின் 24 ஆண்டு கால ஆய்வு வெற்றி பெற்றுள்ளது.

மனமும் மருந்தும்

இன்றைய சூழலலில், ஸ்ட்ரெஸில் இருந்து விடுபட மாத்திரைகள் எடுத்துக் கொள்வோர், பாலியல் பக்க விளைவுகளை சந்திக்கக்கூடம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மன அழுத்த மருந்துகள் எடுத்துக் கொள்வோருக்கு `எதிர்பாலரை பார்த்தாலே ‘பத்திக்கும்’ அடிப்படை வேதியியல் மாற்றம் கூட உண்டாவதில்லை’ என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

உண்ண வேண்டாம்

மார்பக புற்றுநோய் பாதிக்கபட்டவர்கள் கிரில்டு சிக்கன் போன்ற வாட்டிய இறைச்சியை உட்கொள்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதாம்.மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் வாட்டிய இறைச்சி உட்கொள்ளாதவர்களை விட அந்த இறைச்சியை உட் கொள்பவர்களின் இறப்பு விகிதம் அதிகம் என அந்த ஆய்வு எச்சரிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago