முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

களையெடுக்கும் ரோபோ

தோட்டங்களில் வளரும் களைகளை கொல்லக்கூடிய புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டெர்டில் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ முற்றிலும் சூரிய மின்சக்தியில் செயற்படக்கூடியது. இதை பயன்படுத்தி களைகளை கொல்ல முடிவதால் எதிர்காலத்தில் கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என இதை வடிவமைத்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்துமாவுக்கு ...

கணேச முத்திரை உடலில் உள்ள 6 ஆதார சக்கரங்களில், நான்காவது சக்கரமான அனாகத்தை தூண்டவல்லது. மேலும் இதயத்தைப் பலப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைத்து, நம்பிக்கை தரும். மூச்சை சீராக்கி, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும்படி செய்து, ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்தும். தினமும் காலை, மாலை 15 நிமிடம் செய்தால் மிகுந்த பயன்.

உலகின் 100 % காகிதமில்லாத டிஜிட்டல் அரசாக துபாய் மாற்றம்

உலகில் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசாக துபாய் மாறி உள்ளது என அதன் இளவரசர் அறிவித்துள்ளார். மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் அதன் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷித் அல் மக்தோம், நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்நிலையில் துபாய் அரசு துறைகளில் காகித பயன்பாட்டிற்கு முடிவு கட்டும் வகையில் அதிரடி நடவடிக்கை ஒன்றை அவர் தற்போது எடுத்துள்ளார். இதுகுறித்து பட்டத்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: துபாய் அரசின்கீழ் உள்ள 45 துறைகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. இனி இந்த துறைகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படாது. இதனால் ஒரு ஆண்டுக்கு 2,650 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சமாகும். இந்த நடவடிக்கையால் 100 சதவீதம் காகிதமில்லாத டிஜிட்டல் மயமாக்கப்பட்ட முதல் அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட பல நாடுகள் காகிதமில்லா அரசாங்கத்தை கட்டமைக்க, திட்டங்களை வகுத்து வந்தாலும் பல்வேறு காரணங்களால் அதை செயல்படுத்த முடியாமல் உள்ளன.

100 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பேர் வசிக்கும் அதிசய சிற்றூர்

இத்தாலியில் உள்ள சுமார் 1765 பேர் வசிக்கும் சிற்றூர் ஒன்றில் 10 க்கும் மேற்பட்டோர் தங்களது 100 ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். இத்தாலியில் உள்ள சர்தினியா என்ற தீவில் அமைந்துள்ள பெர்தாஸ்தேபோகு (Perdasdefogu) என்ற சிற்றூர்தான் அந்த பெருமைக்குரிய இடமாகும்.உலகில் 100 வயதுக்கு மேற்பட்டோர் அதிகம் பேர் வசிக்கும் 5 இடங்களில் சர்தினியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு 1 லட்சம் குடியிருப்பு வாசிகளில் சுமார் 33.6 சதவீதம் பேர் 100 வயதுக்கும் மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு இந்த ஊர் கின்னஸில் இடம் பெற்றது. மெலிஸ் என்பவரின் குடும்பம் கடந்த 9 தலைமுறையாக இதே ஊரில் வசித்து வருகின்றனர் என்ற சாதனையுடன் அது கின்னஸ் சாதனை படைக்கப் பெற்றது.  கன்சோலடா மெலிஸ் என்பவரின் வம்சாவளியினர்தான் இந்த ஊரின் மிகவும் மூத்த குடும்ப வம்சாவளியினர் ஆவர். அவர் தனது 105 ஆவது வயதில் கடந்த 2015 இல் காலமானார். இந்த ஊரை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சுத்தமான காற்று, மாசில்லாத சுற்றுச்சூழல், ஆரோக்கியமான உணவு உள்ளிட்டவைதான் இங்கு வாழ்பவர்கள் அதிக ஆண்டுகள் உயிருடன் இருப்பதற்கு காரணம் என்பதை கண்டறிந்தனர். தற்போது 10க்கும் மேற்போட்டோர் இவ்வூரில் சென்சுரி அடித்துள்ளனர். கேட்கவே பொறாமையாக இருக்கு அல்லவா..

புதிய தகவல்

மேற்குவங்கத்தை சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், தேசிய கீதத்தை எழுதியுள்ளார்.அவரது மற்றொரு பாடல் நமக்கு அருகாமையில் உள்ள வங்க தேசத்தின் தேசியப்பாடலாக உள்ளது. இரு நாடுகளுக்கு தேசிய கீதம் இயற்றிய பெருமைப்பெற்ற ஒரே உலக கவிஞர் நமது ரவீந்திர நாத் தாகூர்தான்.

முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago