முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பெருங்காயம் எங்கு விளைகிறது தெரியுமா?

ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைதான் பெருங்காய இறக்குமதிக்கு இந்தியா நம்பியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு 100 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக பெருங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது. பெருங்காயம் இந்தியாவுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிடாத பல இந்துக்கள் மற்றும் பௌத்தர்களுக்கு, பெருங்காய வாசனை அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது."உணவுகளின் கடவுள்" என்று பாரசீக மக்கள் இதனை ஒருகாலத்தில் குறிப்பிட்டாலும், தற்போது இந்தியாவை தவிர வெளிநாடுகளில் இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. ஒரு சில நாடுகளில் பெருங்காயம் மருத்துவ காரணங்களுக்காகவும், பூச்சிக்கொள்ளியாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், உலகில் 40 சதவீத பெருங்காயம், இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆஃப்கானிஸ்தானில் இருந்து கிபி 600ல் பெருங்காயம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம்  என்கின்றனர். இந்திய தட்ப வெப்பநிலை பெருங்காய விளைச்சலுக்கு ஏற்றதில்லை.

முத்தம் தவிர்க்கவும்...

குழந்தைகளை முத்தமிடக்கூடாது என்று கூறக்கேட்டிருப்போம். அதற்கு காரணம் உள்ளது. குழந்தைகளை இதழ்களில் முத்தமிடும் போது, 85 சதவீதம் பாக்டீரியாக்கள் இதழ் மற்றும் வாய் மூலமாக பரவி குழந்தையின் நலனை பாதிக்கிறது. பிறந்த 3 மாதங்களில் குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் தவிர்ப்பது நல்லது.

1200 ஆண்டுகள் பழமையான மம்மி உடல் தோண்டி எடுப்பு

பெரு நாட்டில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால், 800 முதல் 1,200 ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்ட மிகவும் பக்குவமாகப் பதப்படுத்தப்பட்ட ஒரு மம்மி உடல் நாட்டின் தலைநகரான லிமாவிற்கு அருகில் உள்ள இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதில் வினோதம் என்னவென்றால், இந்த மம்மி இன் உடல் முழுவதும் கயிறுகளால் இறுக்கி கட்டப்பட்டுள்ளது. அதன் முகத்தை அந்த மம்மி அதன் கைகளால் மூடியுள்ளது. இது தெற்கு பெருவியன் இறுதிச் சடங்கு முறை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.சான் மார்கோஸின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்துள்ளனர். இது 15 ஆம் நூற்றாண்டில் பெருவின் சிறந்த அறியப்பட்ட மச்சு பிச்சு கோட்டையை நிறுவிய இன்கா நாகரிகத்திற்கு முந்தையது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

15 ஆண்டுகளாக மலையை குடைந்து சாலை அமைத்த மக்கள்

மலைச்சாலைகள் எப்போதும் நம்மை மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்துபவைதான். ஆனால் அதே நேரத்தில் மிக அபாயகரமான இடங்களில் கூட வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளை கண்டால் யாருக்கும் லேசாக ஜெர்க் ஆகும் தானே.. ஆனால் சீனாவில் உள்ள சாங்சி மாகாணத்தில் உள்ள Shenlongwan என்ற பகுதிக்குச் செல்லும் மலைச்சாலை சற்றே வித்தியாசமானது. அது என்ன என்கிறீர்களா.. 1526 மீட்டர் நீளமே கொண்ட இந்த மலைச் சாலையை அப்பகுதி கிராம மக்களே சேர்ந்து சுமார் 15 ஆண்டுகளாக மலையை குடைந்து உருவாக்கியுள்ளனர். கடந்த 1985 இல் தொடங்கிய பணிகள், இதன் இறுதி கட்ட பணிகள் கடந்த 2000 இல்தான் முடிவடைந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தப்ப முடியாது

கூகுள் இணையதளத்தில் இன்காக்னிடோ எனப்படும் தனிப்பட்ட தேடுதளத்தைப் நாம் பயன்படுத்தினாலும், அதில் உங்களை பார்த்து கண் சிமிட்டுவதைப் போல, புருவம் நெரிப்பதைப் சில பாவனைகள் தோன்றும். இதற்கு கூகுள் உங்களை தொடர்ந்து வேவு பார்த்து கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். இது தெரியாமல், ஆபாசப் படங்களை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க வேண்டாம் நண்பர்களே.

டாடா ஏர்லைன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா

தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளது. அது அனைவருக்கும் தெரிந்த செய்தி.. தெரியாத செய்தி என்ன தெரியுமா.. இந்தியாவில் முதன் முதலில் விமான  போக்குவரத்தை இயக்கியது டாடா தான். அதன் நிறுவனர் Jehangir Ratanji Dadabhoy (JRD) Tata 1932 இல் அதை நிறுவனார். அப்போது அது டாடா ஏர்லைன்ஸ் என அழைக்கப்பட்டது. டாடா ஏர்லைன்ஸ் அப்போது உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே இயக்கி வந்தது. பின்னர் 1946 ஆல் அது ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. அப்போது அது 'மகாராஜா; சின்னத்தை கொண்டதாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. 1948 இல், ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவுக்கு விமான சேவைகளை தொடங்கியது. தனியார்-பொது துறை பங்களிப்புடன் சர்வதேச சேவைகள் இயக்கப்பட்டன. அரசு வசம் 49 சதம் பங்குகளும், டாடா வசம் 25 சதவீத பங்குகளும் இருந்தன. 1953 இல் எர் இந்தியாவை முழுக்க தேசியமயமாக்கி நேரு அறிவித்தார். இதற்கு டாடா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இந்நிலையில் தற்போது கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பின்னர் ஏர் இந்தியா விமானம் டாடா வசமே திரும்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago