எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புவனேசுவரம் : இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணி அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி 2020 -ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. ஒலிம்பிக் ஆக்கி போட்டிக்கான இரண்டு தகுதி சுற்று ஆட்டங்கள் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் பிரிவில் நடந்த தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடியது. இவ்விரு அணிகளும் மீண்டும் சந்தித்தன. முதல் ஆட்டத்தை போன்றே இதிலும் இந்தியா சுலபமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த உள்ளூர் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த ஆட்டத்தில் 5 கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பிக்கில் கால்பதிக்க முடியும் என்ற வெறியுடன் ஆடிய அமெரிக்க வீராங்கனைகள் தொடக்கம் முதலே இந்திய கோல் எல்லையை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தனர். அதற்கு பலனும் கிடைத்தது. அமெரிக்க வீராங்கனைகள் அமந்தா மகடன் 5-வது நிமிடத்திலும், கேப்டன் கேத்லீன் ஷர்கே 14-வது நிமிடத்திலும், அலிசா பார்கெர் 20-வது நிமிடத்திலும், அமந்தா மகடன் மீண்டும் 28-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் போட்டனர்.
முதல் பாதி ஆட்டத்திற்குள் 4 கோல் வாங்கியதால் இந்திய வீராங்கனைகள் திகைத்து போனார்கள். இதே முன்னிலை நீடித்தால் ‘ஷூட்- அவுட்’ முறையில் தான் ஒலிம்பிக் வாய்ப்பு முடிவாகும் என்ற சூழல் காணப்பட்டதால் இந்திய வீராங்கனைகள் மிகுந்த நெருக்கடிக்கும், பதற்றத்துக்கும் ஆளாகினர். சில ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்புகளையும் கோட்டை விட்டனர். இந்த பரபரப்பான நிலையில் இந்திய அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஒரு கோல் (48-வது நிமிடம்) அடித்து நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.இறுதிகட்டத்தில் இந்திய அணியினர் தடுப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி மேற்கொண்டு கோல் எதுவும் வாங்காமல் பார்த்துக் கொண்டனர்.முடிவில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இருப்பினும் இரு ஆட்டங்களின் முடிவையும் கணக்கிட்டு கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி (6-5) அமெரிக்காவை வீழ்த்தி ஒலிம்பிக் அதிர்ஷ்டத்தை தட்டிச் சென்றது. 36 ஆண்டுகளுக்கு பிறகு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்ற இந்திய பெண்கள் அணி, மறுபடியும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.
ஆண்கள் பிரிவில், தகுதி சுற்றின் முதலாவது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை தோற்கடித்தது. இவ்விரு அணிகளும் மறுபடியும் இதே மைதானத்தில் கோதாவில் குதித்தன.ஆட்டம் தொடங்கிய 25-வது வினாடியிலேயே ரஷிய வீரர் அலெக்சி சோபோலெவ்ஸ்கி கோல் போட்டு அதிர்ச்சி அளித்தார். இதன் பின்னர் சுதாரித்துக் கொண்ட இந்திய வீரர்கள் அலைஅலையாக முற்றுகையிட்டு கோல்மழை பொழிந்து ரஷியாவை நிலைகுலைய வைத்தனர். முதல் நிமிடம் மட்டுமே ரஷியாவுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும். அதன் பிறகு ஆட்டம் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. லலித் உபத்யாய் (17-வது நிமிடம்), ஆகாஷ் தீப்சிங் (23, 29-வது நிமிடம்), நீலகண்ட ஷர்மா (47-வது நிமிடம்), ரூபிந்தர் பால் சிங் (48, 59), அமித் ரோஹிதாஸ் (60-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினர். முடிவில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை ஊதித்தள்ளியது. இரண்டு ஆட்டங்களின் முடிவின் அடிப்படையில் இந்திய ஆண்கள் அணி 11-3 என்ற கோல் வித்தியாசத்தில் ரஷியாவை வெளியேற்றி 21-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.