முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபையிலும் நிறைவேறியது

ஞாயிற்றுக்கிழமை, 20 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற மேலவையில் எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்புக்கிடையே, வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றப்பட்டன.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 11 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் பா.ஜ.க. அரசு திட்டமிட்டிருந்தது.

இதில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின்  விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் இரண்டு மசோதாக்கள் கடந்த 17-ம் தேதி மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாபில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் வரும் 25-ம் தேதி பஞ்சாப் பந்துக்கு அழைப்பு  விடுத்துள்ளன.

இதற்கிடையே, விவசாய மசோதாக்களை மாநிலங்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியினர்,மசோதாக்களை பாராளுமன்ற நிலை குழு மற்றும்  தேர்வு குழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இருப்பினும், மசோதா குறித்து விவாதிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியின் தொடர் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். குறிப்பாக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரியன், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மீது மசோதா நகலை கிழித்து எரிந்தார். மேலும், பல்வேறு எம்.பிக்கள் மசோதா நகலை கிழித்து எரிந்தனர்.

மசோதாவிற்கு எதிராக அவை  தலைவரை முற்றுகையிட எம்.பிக்கள் முயற்சி செய்தபோது, அவை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மேசையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது. இப்படியாக, தொடர்ந்து,  அமளியில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டதால், மசோதா மீது வாக்கு எதுவும் நடத்தப்படாமல் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது

இதன் பின்னர் அவை மீண்டும் கூடியது.  வேளாண் மசோதாக்கள் பற்றி விவாதங்கள் நடைபெற்றன.  இந்த விவாதத்தின் பொழுது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தெரீக் ஓ பிரையன் அவையின் மைய பகுதிக்கு வந்து, அவை துணை தலைவர் ஹரிவன்ஷிடம், அவைக்கான விதி புத்தகம் ஒன்றை எடுத்து காண்பித்து பேசினார். 

அவரை தொடர்ந்து அவையில் இருந்த மற்ற உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்தனர்.  அவர்கள் அனைவரையும் இருக்கைகளில் அமரும்படி துணை தலைவர் ஹரிவன்ஷ் கேட்டு கொண்டார்.  எனினும் உறுப்பினர்கள் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர். 

இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது.  இவற்றில் அந்த மசோதாக்கள் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கிடையே உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.  இதனை தொடர்ந்து மேலவை இன்று காலை 9 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து