எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் நிபந்தனையாகும். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசித்தனர். இதைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு பரபரப்பான சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் 2-வது முறையாக நேற்று காலை 10 மணிக்கு கூடியது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் அனுஷ்டித்தனர். அதன் பிறகு மறைந்த தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பிறகு கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர்.
செயற்குழு கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து கட்சி விதிகளில் திருத்தம் செய்யும் சிறப்பு தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்வு செய்யும் விதிகளை மாற்றம் செய்யும் வகையில் அந்த சிறப்பு தீர்மானம் அமைந்து இருந்தது. சிறப்பு தீர்மானம் உட்பட பல முக்கிய தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சிறப்பு தீர்மானம் அ.தி.மு.க செயற்குழுவில் கொண்டு வரப்பட்டது. கழக அடிப்படை உறுப்பினர்களின் கோரிக்கையை ஆய்வு செய்து, கழக செயற்குழுவின் அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, கழக சட்ட திட்ட விதிகளில் பின்வரும் திருத்தங்கள் செய்ய முன்மொழியப்பட்டது.
சிறப்பு தீர்மானம் விவரம்:
1. முன்பு இருந்த விதி
அ.தி.மு.கவில் முன்னர் இருந்த விதியின்படி பொதுக்குழு உறுப்பினர்களே கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.
திருத்தப்பட்ட விதி
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். (கழக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு 2 திருத்தி அமைக்கப்படுகிறது).
2. முன்பு இருந்த விதி
அ.தி.மு.கவின் அனைத்து சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும், நீக்கவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும்.
திருத்தப்பட்ட விதி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதியை, பொதுக்குழுவால் மாற்ற முடியாது. (கழக சட்ட திட்ட விதி 43 திருத்தி அமைக்கப்படுகிறது).
3. முன்பு இருந்த விதி
அ.தி.மு.கவின் சட்டவிதிகளை தளர்ந்து அதிகாரம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் மற்றும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு
திருத்தப்பட்ட விதி
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் (single vote) அடிப்படையில் இணைந்தே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியில் தளர்வை ஏற்படுத்துவதற்கோ, விலக்கு அளிப்பதற்கோ ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை. (கழக சட்ட திட்ட விதி 45 திருத்தி அமைக்கப்படுகிறது).
சிறப்பு தீர்மானத்தை கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், பொன்னையன், தமிழ்மகன் உசேன், தனபால் ஆகியோர் முன்மொழிந்தனர். அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்தனர். அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற சட்ட திருத்தத்திற்கு கழகப் செயற்க்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஒப்புதல் அளித்தனர்.
பிற தீர்மானங்கள் விவரம்:
1. எம்.ஜி.ஆர். கண்ட மகத்தான மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களை நாடு, நகரமெங்கும்; பட்டி, தொட்டியெங்கும் எழுச்சியுடன் கொண்டாட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு அழைப்பு.
2. நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 66 இடங்களையும், கழக கூட்டணிக் கட்சிகள் 9 இடங்களையும், ஆக மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெறும் வகையில் உழைத்திட்ட, கழக முன்னணியினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் பாராட்டுக்கள்; கழகத்தோடு இணைந்து தேர்தல் பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கும், தோழமை கட்சியினருக்கும், இயன்ற வகைகளில் எல்லாம் உடன் உழைத்த, உதவிய பல்வேறு இயக்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
3. நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் தி.மு.க-வின் நேர்மையற்ற பிரச்சார முறைகளுக்குக் கண்டனம்.
4. தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் என்பதை கால அட்டவணை மூலம் உடனடியாகத் தெரிவிக்க வற்புறுத்தியும்; அவ்வாறு தெரிவிக்காவிடில் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை.
5. தி.மு.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல், தமிழ் நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றச் செயல்கள்; கொலை, கொள்ளைகள்; வழிப்பறி சம்பவங்கள்; போலீசாருக்கே பாதுகாப்பற்ற நிலை; வணிகர்கள் மீதான தாக்குதல்கள்; பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் உள்ளிட்ட அச்சமூட்டும் அடாவடி செயல்களை அறவே ஒழிக்க தி.மு.க அரசு முன்வர வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோல்வி அடைந்திருக்கும் தி.மு.க அரசுக்குக் கண்டனம்.
6. மழை, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகளுக்கும்; மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கும், உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட தி.மு.க அரசை வலியுறுத்தல். மழை வெள்ள பாதிப்புகளை முன் ஏற்பாடுகள் மூலம் தடுக்கத் தவறிய தி.மு.க அரசுக்குக் கண்டனம்.
7. விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் கடுமையாக உழைக்கவும்; தி.மு.க-வின் முறைகேடுகளைத் தடுக்கத் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தல்.
8. அ.தி.மு.கவை கட்டிக் காத்து, ஒற்றுமை பேணி, எதிர்கால தேர்தல்களில் மாபெரும் வெற்றிபெற, கழக முன்னோடிகளின் கரங்களை வலுப்படுத்துவோம்.
9. நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டும், பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றியும் வெற்றி பெற்றிருக்கும் தி.மு.க-வுக்குக் கண்டனம்.
10. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட கழக உடன்பிறப்புகளுக்கு அன்பு வேண்டுகோள்.
11. மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு, மக்களின் துயர் துடைக்க தி.மு.க அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தல். ஆகிய தீர்மானங்கள் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்தால் நிறைவேற்றப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: வரும் 2-ம் தேதி அனைத்து கட்சிக்கூட்டம்
29 Oct 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வரும் 2-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.


