எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
முதலாவது பெண்கள் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் ஆடி வருகின்றன. நேற்று 2 ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்களே எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களம் புகுந்தது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உ.பி. தக்கவைத்து கொண்டது. அதேவேளையில் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக வலம் வந்த மும்பை சந்தித்த முதல் தோல்வி இது ஆகும்.
____________________
இந்திய கிரிக்கெட் வீரர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஜினி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவின் அழைப்பை ஏற்று இந்தப் போட்டியை நேரில் காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை வந்திருந்தார். அமோல் கலேவுடன் இணைந்து இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியை நடிகர் ரஜினிகாந்த் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் இந்திய அணி வீரர்களான குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள குல்தீப் யாதவ், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என கேப்ஷனிட்டுள்ளார். தொடர்ந்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவையும் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
________________
சிறப்பான ஆட்டம்: ராகுலுக்கு வெங்கடேஷ் பிரசாத் பாராட்டு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெற செய்தார் இந்திய வீரர் கே.எல்.ராகுல். அவரது இந்த மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பாராட்டியுள்ளார். இந்தப் போட்டிக்கு முன்னதாக கே.எல்.ராகுல் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறினார். அதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் அணியில் ஆடும் லெவனில் தனது இடத்தை அவர் இழந்திருந்தார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 91 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி இருந்தார் ராகுல். “ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் நிறைந்திருந்த சூழலில் அற்புதமான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார் ராகுல். அவரது தரமான ஆட்டம் இது. அவருக்கு துணையாக களத்தில் பேட் செய்தார் ஜடேஜா. இந்திய அணியின் சிறப்பான வெற்றி இது” என வெங்கடேஷ் பிரசாத் ட்வீட் செய்துள்ளார்.
________________
நாட்டு நாட்டு பாடலுக்கு ... வைப் செய்த விராட் கோலி
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருது வென்றது. இந்தப் பாடலின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலை எழுதிய பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆஸ்கர் விருதை பெற்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்தபோது விராட் கோலி, 'நாட்டு நாட்டு' பாடலின் நடன அசைவுகளை போட்டிருந்தார். ஸ்லிப் ஃபீல்டராக அவர் நின்றபோது இந்தப் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 75 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜா 45 ரன்களும், கேப்டன் பாண்டியா 25 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
________________
சிஎஸ்கே.வின் அடுத்த கேப்டன் கெய்க்வாட்: ரெய்னா நம்பிக்கை
41 வயதாகும் டோனி இந்த ஐபிஎல் தொடருடன் பெரும்பாலும் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு சிஎஸ்கே விளையாடப்போகும் கடைசி போட்டிக்கு முன்பாக இந்த அறிவிப்பை டோனி வெளியிட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அதேநேரத்தில் அவருக்கு அடுத்தபடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இளம் வீரரின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- டோனிக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார் என நம்புகிறேன். அவர் சிஎஸ்கே மற்றும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி இருக்கிறார். இளம் வீரர் என்பதால் அவருக்கு சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம். ருதுராஜ் உங்களின் சிஎஸ்கே கேப்டன் பொறுப்புக்கு என்னுயை வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா2 days 12 hours ago |
கோபி மஞ்சூரியன்![]() 5 days 11 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 2 days ago |
-
காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்
05 Jun 2023முத்தையா இயக்கத்தில் ஆர்யா சித்தி இத்னானி, ஆடுகளம் நரேன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி தற்போது வெளியாகி இருக்கும் படம் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்
-
மாமன்னன் இசை வெளியீட்டு விழா
05 Jun 2023மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 05-06-2023.
05 Jun 2023 -
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் : துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் உரை
05 Jun 2023ஊட்டி : நவீன காலத்துக்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
-
500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
05 Jun 2023சென்னை : 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
வீரன் விமர்சனம்
05 Jun 2023மரகத நாணயம் இயக்குனர் சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள படம் வீரன். கதை,
-
இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: பொறியியல் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு : வரும் 20-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இதுவரை 2.29 லட்சம் பேர் விண்ணப்பத்துள்ள நிலையில், மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
-
ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.
-
கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு 12-ம் தேதிக்கு தள்ளிவைப்பு : ஆலோசனைக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
05 Jun 2023சென்னை : கடுமையான வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11-ம் தேதி சேலம் பயணம் : ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
05 Jun 2023சேலம் : சேலம் மாவட்டத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், விழா ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்
-
பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது: குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பீகார் முதல்வர் நிதிஷ்
05 Jun 2023பாட்னா : பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக விளக்கமளித்த முதல்வர் நிதிஷ் குமார், பாலம் தவறாக வடிவமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது உ
-
சரத்குமார் நடிக்கும் போர் தொழில்
05 Jun 2023விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
-
ரெயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கிறோமா? - ஒடிசா அரசு விளக்கம்
05 Jun 2023புவனேஸ்வர் : பாலசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்கும் எந்த எண்ணமும் ஒடிசா அரசுக்கு இல்லை என்றும், மீட்பு நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முன்
-
தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
05 Jun 2023சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: தமிழர்கள் 6 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
05 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் பாதுகாப்பாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அந்த 6 பேரிடம் இதுவரை பேச முடியவில்லை.
-
துரிதம் விமர்சனம்
05 Jun 2023வெங்கடேசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் உள்ளிட்டோர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் துரிதம்.
-
பிரமாண்டமாக வெளியான ஸ்பைடர்-மேன்
05 Jun 2023இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் படம் மற்றும் ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம் SPIDER-MAN:ACROSS THE S
-
பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார்: பிரதமர் நரேந்திரமோடி இரங்கல்
05 Jun 2023மும்பை : பழம்பெரும் இந்தி நடிகை சுலோச்சனா லட்கர் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறோம்: ரணில் விக்ரமசிங்கே
05 Jun 2023கொழும்பு : இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது.
-
அமித்ஷாவுடன் மல்யுத்த வீராங்கனைகள் சந்திப்பு : பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
05 Jun 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
-
பாதுகாப்பு உபகரணங்களை இணைந்து தயாரிக்க இந்தியா, அமெரிக்கா ஒப்புதல்
05 Jun 2023புதுடெல்லி : பாதுகாப்பு உபகரண கூட்டு உற்பத்திக்கு இந்தியாவும், அமெரிக்காவும் ஒப்புதல் அளித்துள்ளன.
-
இந்த வாரம் வெளியாகும் டக்கர்
05 Jun 2023பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரிப்பில், கார்த்திக் ஜி கிரிஷ் எழுத்து இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம் ஜூன் 9 அன்று தமிழ
-
4-வது கட்டமாக தமிழக அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் ஜூன் 9-ல் மீண்டும் பேச்சுவார்த்தை
05 Jun 2023சென்னை : 4-வது கட்டமாக போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் தமிழக அரசு 9-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
-
கார் விபத்தில் மலையாள நடிகர் கொல்லம் சுதி பலி : திரையுலகினர் இரங்கல்
05 Jun 2023கொச்சி : மலையாள நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கொல்லம் சுதி நேற்று அதிகாலை நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
-
உன்னால் என்னால் விமர்சனம்
05 Jun 2023சோனியா அகர்வால், ராஜேஷ், ஆர். சுந்தர்ராஜன், ரவிமரியா, ஆகியோருடன் புதுமுகங்கள் ஜெகா , ஏ.