முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு: 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றது

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
Adenum 2023 05 27

Source: provided

சென்னை : புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக 20 பேர் கொண்ட ஆதீனம் குழு சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளது. 

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய பாராளுமன்றம் ரூ. 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும். 

இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று 28-ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து புது பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றுள்ளது. புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரதமரிடம் செங்கோலை ஆதீனம் குழு பரிசாக வழங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து