எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், பிப்.21 - வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை மக்கள் விரட்டியடிக்க வேண்டுமென திண்டுக்கல்லில் நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டணிக்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் இரா.விசுவநாதன் ஆவேசமாகப் பேசினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உத்தவரின் பேரில் தமிழகம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து அ.தி.மு.க. வினர் தெருமுனைப் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா.விசுவநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்து பேசுகையில், உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழல் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரான ராசா பதவி விலக வேண்டுமென அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் எதிரொலியாக அவர் பதவி விலக நேரிட்டது. அதனையடுத்து அவரைக் கைது செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டுமென மாநிலம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதன் பலனாக அவர் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழலால் பலனடைந்தவர்களையும், பயன் பெற்றவர்களையும் கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். இது நிச்சயமாக வெற்றி பெறும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டும் குற்றவாளியல்ல. அவரோடு மட்டும் நடவடிக்கை நின்று விடக்கூடாது. ஏனெனில் கருணாநிதி குடும்பத்தினர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர்களை ஏன் கைது செய்யவில்லை.
டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய கம்பெனிகளும் இந்த ஊழலில் பங்கு பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு உள்ளதால் இந்த ஊழலில் மத்திய அரசுக்கும் பங்கு உள்ளதோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கருணாநிதியின் குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வருவதைப் பார்த்து அக்கட்சியின் கீழ் மட்ட தொண்டர்களும் தங்களது பங்கிற்கு மணல் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் தமிழகத்தில் தி.மு.க. ஆளப்போவது இதுவே கடைசி முறை என்பது அவர்களுக்கே தெரிந்த விஷயமாகும். வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணியை விரட்டியடித்து விட்டு ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியமைய அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் சி.சீனிவாசன், நகரச் செயலாளர் ராமுத்தேவர், பேரவை செயலாளர் பாரதிமுருகன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.டி.செல்லச்சாமி, மாவட்ட பொருளாளர் குமாரசாமி, தொகுதி செயலாளர் மருதராஜ், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திவான்பாட்ஷா, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபால், தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், இளைஞரணி செயலாளர் சரவணன், பாசறை செயலாளர் ஆனந்தகுமார், கவுன்சிலர்கள் பழக்கடை நாகராஜ், மோகன், பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மா.கம்யூ மாவட்டச் செயலாளர் பாண்டி, நகரச் செயலாளர் கல்யாணசுந்தரம், ம.தி.மு.க. மாநில இளைஞரணி அமைப்பாளர் அழகுசுந்தரம், நகரச் செயலாளர் பரசுராமன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் சந்தானம், மாவட்டச் செயலாளர் பேட்ரிக் சகாயநாத் உட்பட அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
-
கடந்த ஆண்டில் மட்டும் திருப்பதி கோவிலில் 13.52 கோடி லட்டுகள் விற்பனை
01 Jan 2026திருப்பதி, 2025-ஆம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.
-
அணுசக்தி நிலையங்களின் பட்டியல்: இந்தியா-பாகிஸ்தான் தொடர்ந்து 35 - வது ஆண்டாக பரிமாற்றம்
01 Jan 2026புதுடெல்லி, இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தம் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன.தொடர்ந்து 35-வது ஆண்டாக பரஸ்பரம் பட்டியல் பகி
-
கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதி
01 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி உறுதிப்பட தெரிவித்துள்ளார்.



