எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப். - 6 - நேர்மையாக செயல்படும் அதிகாரிகள் பயப்படத்தேவையில்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பக்கபலமாக இருக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் ஏற்பாடுகள் குறித்து நாங்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு செய்துள்ளோம். வீடு தோறும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் nullத் சிலிப் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்குள் இந்த பணி முடிந்து விடும். இதன்பிறகும் பூத் ஸ்லிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தால் தேர்தலுக்கு முன்னதாக மற்றொரு நாளில் கொடுக்கப்படும்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களில் இதுவரை 66 ஆயிரத்து 231 பேர் தபால் ஓட்டுக்கள் போட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளில் நாம் செல்வதற்கு முன்பே வேறு யாரும் சென்று கள்ள ஓட்டு போட்டு விட்டால் வாக்காளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தேர்தல் அதிகாரியிடம் அடையாள அட்டையை காட்டி வாக்காளர்கள் டெண்டர்டு ஓட்டு எனப்படும் தங்கள் வாக்கு உரிமையை பதிவு செய்யலாம். இதற்காக வாக்குச் சாவடிகளில் ஓட்டுச் சீட்டும் வைக்கப்பட்டு இருக்கும். கள்ள ஓட்டு போடப்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
வாக்குப்பதிவை கண்காணிக்க 10 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வெப்காமிரா மூலம் வாக்குச் சாவடிக்குள் வரும் அனைவரும் கண்காணிக்கப்படுவார்கள். சுமார் 5 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வீடியோ மூலம் ஓட்டுப்பதிவு பதிவு செய்யப்படும். கள்ள ஓட்டு போட்டது தெரியவந்தால், உடனடியாக இந்த வெப்கேமராவில் பதிவானதை வைத்து யார் கள்ள ஓட்டு போட்டது என்று கண்டுபிடித்து விடலாம். எனவே, வாக்காளர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால் கள்ள ஓட்டு போட முயற்சிக்காதீர்கள்.
தேர்தல் பாதுகாப்புக்காக ஏற்கனவே வெளி மாநிலங்களில் இருந்து போலீசார் வந்துள்ளனர். கூடுதலாக மேலும் சில கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர்.
நேற்று முன்தினம் வரை (3ம் தேதி) நடந்த வாகன சோதனைகளில் ரூ.22 கோடியே 68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 10 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் டீ கடையில் ரூ. 40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 7 லட்சம் கைப்பற்றப்பட்டது. மதுரையில் ரூ. 19 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை மக்களே கைப்பற்றி போலீசாரிடம் கொடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ராமலிங்கம் என்பவரிடம் ரூ.8 லட்சம் கைப்பற்றப்பட்டது. தி.மு.க.வைச் சேர்ந்த இவர் அரிமலம் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார்.
திருச்சி பொன்னகரில் நேற்று(நேற்று முன்தினம்) ஆம்னி பஸ்சில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 5 கோடியே 11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி ஆர்.டி.ஓ. சங்கீதாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் உடனடியாக விரைந்து சென்று நடவடிக்கை எடுத்ததில் இந்த பணம் கைப்பற்றப்பட்டது. ஒரு பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மேல் பகுதியில் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது பற்றி எம்.ஜே. டிராவல்ஸ் பஸ் உரிமையாளரிடம் விசாரணை நடக்கிறது.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இதனைத்தொடர்ந்து நிருபர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு பிரவீன்குமார் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடப்பதாக முதலமைச்சர் கருணாநிதி தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டுகிறாரே?
பதில்: நாங்கள் சட்டப்படி, விதிமுறைப்படி தான் செயல் படுகிறோம்.
கேள்வி: மதுரை தாசில்தார் தாக்கப்பட்ட சம்பவத்தில் கலெக்டர் வற்புறுத்தலின்பேரில் புகார் கொடுத்ததாக தாசில்தார் கூறி உள்ளாரே?
பதில்: அவரது கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். எது உண்மையோ அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் சரியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கு எங்களது ஆதரவு இருக்கும்.
கேள்வி: நேர்மையான அதிகாரிகளை மிரட்டும் சம்பவம் மதுரையில் அதிகமாக காணப்படுகிறதே?
பதில்:நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் மிரட்டலுக்கு பயப்படத்தேவையில்லை. அவர்களுக்கு தேர்தல் ஆணையம் எப்போதுமே பக்கபலமாக இருக்கும்.
கேள்வி: மதுரைக்கு கூடுதல் தேர்தல் பார்வையாளர்கள் அனுப்பப்படுவார்களா?
பதில்: தேவைப்பட்டால் அனுப்புவோம்.
கேள்வி: மத்திய அமைச்சர் அழகிரி மீது என்ன நடவடிக்கை இருக்கும்?
பதில்: அவர்மீது என்ன கேஸ் வருகிறதோ, அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், தேர்தல் விதி மீறல் தொடர்பாக எங்களுக்கு கால் சென்டர் மூலம் 1,400 புகார்கள் வந்துள்ளது. விதிகளை மீறியதாக 55 ஆயிரத்து 341 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்காக தனி பூத்துகள் அமைக்கப்படும். அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சென்று வாக்களிக்க ரேம்ப் அமைக்கப்படும். பார்வையற்றோருக்கு என பிரெய்லி முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். பேட்டியின்போது துணை தேர்தல் அதிகாரி அமுதா உடனிருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
1040-வது சதய விழா: மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
01 Nov 2025சென்னை : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு மாமன்னர் ராஜராஜ சோழன் புகழ் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: திண்டுக்கல் சீனிவாசன்
01 Nov 2025மதுரை : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் சாலைகள், மேம்பாலங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
01 Nov 2025சென்னை : நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1248.24 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 10 சாலைகள் மற்றும் 2 சாலை மேம்பாலங்களை தமிழ்நாடு முதல்வர
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன், பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.
-
திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு 3,740 கோவில்களில் கும்பாபிஷேகம் : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்
01 Nov 2025சென்னை : பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்தார் மன்னர் சார்லஸ் : வீட்டை காலி செய்யவும் உத்தரவு
01 Nov 2025லண்டன் : பாலியல் புகாரில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூ அரச பட்டங்கள் பறிக்கப்பட்டதையடுத்து வீட்டை காலி செய்ய சார்லஸ் உத்தரவிட்டார்.


