முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவயானி விவகாரம்: அமெரிக்க உயர் அதிகாரிகள் ஒப்புதல்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன.13 - தேவயானியை கைது செய்ததால் இந்தியாவுடனான நட்புறவு பாதிக்கப்பட்டு விட்டதை ழுழுமையைக உணர்ந்து கொண்டுள்ள அமெரிக்க உயரதிகாரிகள் தேவயானி விவகாரத்தை முட்டாள்தனமாக கையாண்டுவிட்டோம் என்று   ஒப்புதல் அளித்துள்ளனர்.  

விசா மோசடி வழக்கில் கைதான தேவயானி அமெரிக்காவிலிருந்து, இந்தியாவுக்குத் திரும்பினார். இதன்மூலம் தேவயானி விவகாரத்தால் கடந்த சில நாள்களாக இந்தியாவுடனான உறவில் இநலவிய பதற்றஓரளழு தணிந்து விட்டதாக கருதத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து இந்தியாவுடனான நட்புற வைப் புதுப்பித்துக்க தற்போது அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நிருபர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜெய் கார்னே அமெரிக்கா_ இந்தியா இடையே பரவலான மற்றும் ஆ ழ்ந்த நட்புறவு இருப்பதாகவும், இந்தத் தனிப்பட்ட விவகாரத்தால் இருநாடுகள் இடையே உள்ள நெருங்கிய நட்புறவில் பாதிப்பு ஏற்படாது என்றார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர் பாளர் ஜென்_சாகி கூறுகையில் இந்தியா_அமெரிக்கா இடையே இது சவாலான கட்டமாகும். தேவயானி நாடு திரும்பிவிட்டதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இரு நாடுகள் இடையே நல்லுறவைப் புதுப்பிக்க இந்தியாதான் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

இதேபோல் அமெரிக்க அதிகாரிகள் பலரும் அமெரிக்கா இந்த விவகாரத்தை முட்டாள்தனமாகக் கையாண்டு விட்டதாக கருதுகின்றனர். இந்தியா_ அமெரிக்கா இடையிலான நட்புற+வைப் புதுப்பிக்க தங்கள் நாடு கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

     

                      

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்