எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						
சென்னை, அக்.19 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் சென்னையில் 18 மையங்களில் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தல்களில் முதல்கட்டமாக நடந்த அக்.17 அன்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் 1500 மையங்களில் 4876 வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வக்களித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. குண்டர்களை வைத்து வெளியேற்றம் நடத்தியது. பொதுமக்களை, தேர்தல் ஏஜண்டுகளை தாக்கி வன்முறையை நடத்தி விட்டு வாக்கு சாவடிகளை ஆக்ரமித்து தேர்தலை நடத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தனர்.
கடந்த தேர்தலை மனதில் வைத்து அச்சத்துடன் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தல் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கில், திருவொற்றியூரில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கத்தியால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.
நேற்றுமாலை அமைதியான முறையில் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சென்னையில் 18 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 மையங்களில் 4 அடுக்கு போலீஸ்சார் துணைய்யுடன் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது.
வாக்கு பதிவு மையத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வாக்கு எண்ணும் இடத்தின் உள்வாயில், வெளிவாயில் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
வாக்கு எண்ணும் நாள் அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தலைமை ஏஜண்ட் மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை மையங்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியும், மாநகராட்சி தலைவர் கார்த்திகேயனும் பார்வையிட்டனர் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையத் சேஷசாயி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 18 மையங்கள் விபரம் வருமாறு.
1. வார்டு 1 முதல் 7 வரை 8 முதல் 14 வரை வார்டுகள் -வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
2. வார்டு 15 முதல் 21 வரை வார்டுகள் - செயின்ட் செபாஸ்டீன் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம்.
3. வார்டு 22 முதல் 25 வரை 26 முதல் 33 வரை வார்டுகள் -வேளம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.
4. வார்டு 34 முதல் 37 வரை, 46தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை.
5. வார்டு 38 முதல் 41 வரை, 42 முதல் 45 வரை, 47, 48 வார்டு -சென்னை மேல்நிலைப் பள்ளி தண்டையார்பேட்டை.
6. வார்டு 49 முதல் 53 வரை 54 முதல் 57 வரை, 59 வார்டு -பாரதி கலை கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை.
7. வார்டு 58, 60 முதல் 63 வரை 115 முதல் 120 வரை -ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை, சென்னை.
8. வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை -பி.டி.செங்கல்வராயன் பால்டெக்னிக், வேப்பேரி, சென்னை.
9. வார்டு 74 முதல் 78 வரை 109 முதல் 144 வரை -லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.
10. வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை -டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, திருமங்கலம் சாலை, முகப்பேர், சென்னை.
11. வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை, 104 முதல் 108 வரை -பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா பெரியார் சாலை.
12. வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை -பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை.
13. வார்டு 127 முதல் 129 வரை, 130, 131, 132, 133, 134, 135, 137, 138 - மீனாட்சி பொறியியல் கல்லூரி, விருகம்பாக்கம், சென்னை. 14. வார்டு 136, 139 முதல் 142 வரை 170 முதல் 175 வரை - சென்ட்ரல் பால்டெக்னிக், ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, சென்னை.
15. வார்டு 143 முதல் 149 வரை 150 முதல் 155 வரை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம் பட்டு, சென்னை-95.
16. வார்டு 156 முதல் 159 வரை 168, 169 160 முதல் 167 வரை மோன்ட் போர்ட் பயிற்சி இன்ஸ்டிடியூட், கன்ட்டோன்மென்ட் அலுவலக சாலை, சென்னை-16.
17. வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை - ஆசான் மெமோரியல் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை100.
18. வார்டு 192 முதல் 195 வரை 196 முதல் 200 வரை டி.பி. ஜெயின் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம், சென்னை69. ஆகிய இடங்களாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 2 months ago | 
-   
          2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 
-   
          சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
-   
          கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது. 
-   
          பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார். 
-   
          இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
-   
          ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது. 
-   
          ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
-   
          சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 
-   
          ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 
-   
          கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு. 
-   
          பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-10-2025.31 Oct 2025
-   
          இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
-   
          பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க 
-   
          த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். 
-   
          முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
-   
          அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். 
-   
          ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும்: கார்கே31 Oct 2025புதுடெல்லி : ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 
-   
          தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார். 
-   
          டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில்31 Oct 2025மதுரை : டி.டி.வி. தினகரன், ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்துள்ளார். 
-   
          கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய கோர்ட்டு உத்தரவு அமலாக்கத்துறை நடவடிக்கை31 Oct 2025புதுடெல்லி, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
-   
          ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை சேஸிங் செய்த அணி : இந்திய மகளிர் அணி சாதனை31 Oct 2025மும்பை : ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலான அதிகபட்சமாக துரத்திப் பிடிக்கப்பட்ட இலக்காக இருந்தது. 
-   
          இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா, கார்கே, ராகுல் அஞ்சலி31 Oct 2025புதுடெல்லி : இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் சோனியா, கார்கே, ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர். 
-   
          கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிச. 31-ம் தேதி வரை பயணிக்க போக்குவரத்து கழகம் அனுமதி31 Oct 2025சென்னை : கட்டணமில்லா பேருந்து பயண அட்டை மூலம் டிசம்பர் 31-ம் தேதி வரை பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

























































