எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.10 - மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின்கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் தலைமையில், பல்வேறு மாநிலங்களின் நிதி வரிவிதிப்பு அமைச்சர்களின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச நிதியமைச்சர் செய்திருந்தார். இம்மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேவைவரியில் எதிர்மறை பட்டியில் தயாரிப்பது குறித்தான மத்திய அரசின் கருத்துருவைப் பொறுத்தமட்டில், இந்நேர்வில் பல மாநில அரசுகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். சேவைவரியில் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிதிப்பு இனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்தின் மத்திய பட்டியலில் வரிசை எண்.97-ல் உள்ள எஞ்சிய அதிகாரங்களைக் கொண்டு மாநில அரசுகளின் வரிவிதிப்பு வரம்பிற்குள் மத்திய அரசு பலமுறை தலையிட்டுள்ளது. இந்நேர்வில், விரிவான கலந்தாலோசிப்பிற்கு பின்னும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் வல்லுநர்களின் ஆலோசனைகளின் படியும் எங்களுடைய குறிப்பு விரைந்து அனுப்பி வைக்கப்படும்.
சென்ற கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் விரிவிதிப்பதற்கான கோரிக்கையின் மீது மாநில அரசுகளின் குறிப்புகள் கோரப்பட்டுள்ளது. சிறிய விநியோக சங்கிலி தொடர் கொண்ட பொருட்களில் வரி ஏய்ப்பு மிக அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கடந்த கால அனுபவங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் தற்போது உள்ள வரி விகிதத்தின் அடிப்படையில் ஈட்டப்படும் வருவாயினை காத்திட மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்படுத்தப்படும் வரியைவிட அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களுக்காக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசிற்கு ஏற்புடையதல்ல. இது தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான இழப்பீட்டுத் தொகையை பொறுத்தமட்டில், நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்கிட மத்திய அரசின் நிதியமைச்சகத்திடம் அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பலமுறை கேட்டு கொண்டதற்கு பின்பும் தமிழ்நாட்டிற்கு வரப்பெற வேண்டிய தொகையான ரூ.3,800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச மதிப்புக் கூட்டுவரியானது 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக அதிகரிக்கப்படவில்லை என்ற அற்ப காரணத்தைக் காட்டி 2010-2011-ம் ஆண்டிற்கு மட்டும் ரூ.2,000 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரைத் தீர்வை விதிக்க விளையும் மத்திய அரசின் கருத்துரு குறித்து மாநில அரசுகளின் கருத்தினை அதிகாரமளிக்கப்பட்ட குழு கோரியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை விகிதத்தை முடிவு செய்யும் முன் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டு இக்கருத்துருவிற்கு தமிழக அரசின் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டை ஏற்று நடத்தும் நான் மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேச அரசின் நிதியமைச்சர் மற்றும் அவருடைய அணியினை சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
கேரளாவில் நடந்த மாதிரி வாக்கு பதிவில் முறைகேடு ஏதும் இல்லை: தேர்தல் ஆணையம் மறுப்பு
18 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் முறைகேடு ஏதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
பதிவான வாக்குகளை விவிபேட் சீட்டுகளுடன் ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
18 Apr 2024புது டெல்லி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகளை விவிபேட் சீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுளள்து.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.