எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.10 - மதுபானம், பெட்ரோலியப் பொருட்கள் போன்றவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டத்தின்கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை விஷயத்தில், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.3800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக வணிகவரித்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கோரியுள்ளார்.
மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் மாநில நிதியமைச்சர்கள் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் தலைவர் தலைமையில், பல்வேறு மாநிலங்களின் நிதி வரிவிதிப்பு அமைச்சர்களின் மாநாடு நடந்தது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை மத்திய பிரதேச நிதியமைச்சர் செய்திருந்தார். இம்மாநாட்டில் தமிழக அரசின் சார்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
சேவைவரியில் எதிர்மறை பட்டியில் தயாரிப்பது குறித்தான மத்திய அரசின் கருத்துருவைப் பொறுத்தமட்டில், இந்நேர்வில் பல மாநில அரசுகளை சேர்ந்த செயலாளர்கள், ஆணையர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைகளை நாங்கள் பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். சேவைவரியில் எதிர்மறை பட்டியலை அறிமுகப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரிவிதிப்பு இனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. இந்திய அரசியல் சட்டத்தின் மத்திய பட்டியலில் வரிசை எண்.97-ல் உள்ள எஞ்சிய அதிகாரங்களைக் கொண்டு மாநில அரசுகளின் வரிவிதிப்பு வரம்பிற்குள் மத்திய அரசு பலமுறை தலையிட்டுள்ளது. இந்நேர்வில், விரிவான கலந்தாலோசிப்பிற்கு பின்னும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ்-ன் வல்லுநர்களின் ஆலோசனைகளின் படியும் எங்களுடைய குறிப்பு விரைந்து அனுப்பி வைக்கப்படும்.
சென்ற கூட்டத்தில் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் விரிவிதிப்பதற்கான கோரிக்கையின் மீது மாநில அரசுகளின் குறிப்புகள் கோரப்பட்டுள்ளது. சிறிய விநியோக சங்கிலி தொடர் கொண்ட பொருட்களில் வரி ஏய்ப்பு மிக அதிக அளவில் நடைபெறுகிறது என்பது கடந்த கால அனுபவங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம். மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்டால் தற்போது உள்ள வரி விகிதத்தின் அடிப்படையில் ஈட்டப்படும் வருவாயினை காத்திட மாநில அரசுகள் சரக்கு மற்றும் சேவை வரிக்கு கூடுதலாக விதிக்கப்படும் வரியானது, சரக்கு மற்றும் சேவை வரிக்கு உட்படுத்தப்படும் வரியைவிட அதிகமாக இருக்கக்கூடிய நிலை ஏற்படும். இதுபோன்ற பல காரணங்களுக்காக, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் ஆகியவற்றை சரக்கு மற்றும் சேவைவரிச் சட்டத்தின் கீழ் வரிவிதிப்பதற்கு தமிழக அரசிற்கு ஏற்புடையதல்ல. இது தொடர்பாக எங்களுடைய கருத்துக்களை அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழான இழப்பீட்டுத் தொகையை பொறுத்தமட்டில், நிலுவையில் உள்ள தொகையினை விரைந்து வழங்கிட மத்திய அரசின் நிதியமைச்சகத்திடம் அதிகாரமளிக்கப்பட்ட குழு வலியுறுத்த வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறோம். பலமுறை கேட்டு கொண்டதற்கு பின்பும் தமிழ்நாட்டிற்கு வரப்பெற வேண்டிய தொகையான ரூ.3,800 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்ச மதிப்புக் கூட்டுவரியானது 4 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக அதிகரிக்கப்படவில்லை என்ற அற்ப காரணத்தைக் காட்டி 2010-2011-ம் ஆண்டிற்கு மட்டும் ரூ.2,000 கோடி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான முத்திரைத் தீர்வை விதிக்க விளையும் மத்திய அரசின் கருத்துரு குறித்து மாநில அரசுகளின் கருத்தினை அதிகாரமளிக்கப்பட்ட குழு கோரியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே பங்குச் சந்தை தொடர்பான பரிமாற்றங்களுக்கு முத்திரைத் தீர்வை விகிதத்தை முடிவு செய்யும் முன் தமிழக அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதற்கு உட்பட்டு இக்கருத்துருவிற்கு தமிழக அரசின் இசைவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டை ஏற்று நடத்தும் நான் மீண்டும் ஒருமுறை மத்திய பிரதேச அரசின் நிதியமைச்சர் மற்றும் அவருடைய அணியினை சிறப்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.


