எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நன்செய் நிலத்தில் மட்டுமல்ல: களர்-உவர் நிலங்களில் பயிர் செய்து சாதிக்கலாம். மக்கள்தொகை அதிகரித்துச் செல்லும் இந்தக் காலக்கட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்துவருகிறது. இதனால், பிரச்னைக்குரிய களர்-உவர் நிலங்களைச் சீர்திருத்தி சாகுபடி செய்து உணவு உற்பத்தியை மேம்படைய செய்வது இன்றைய காலக்கட்டத்தின் அவசியமாகிறது.
தமிழகத்தில் 4.7 லட்சம் ஹெக்டேர் களர்-உவர் நிலங்கள் இருக்கின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் களர் -உவர் நிலங்கள் அதிகளவு உள்ளன.
களர் நிலம்: களர் நிலம் என்றால் மண்ணில் களித்துகள்களில் சோடிய அயனிகள் அதிகமாகப் படிந்திருக்கும். இவ்வகை மண்ணின் கார அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். களர் மணி வயலில் மழை அல்லது நீர்பாசனத்தின் மூலம் மண்ணின் கட்டமைப்பு சிதைந்தும், மண்ணின் நீர் கடத்தும் திறன் குறைந்தும் நீர்த் தேக்கம் உண்டாகிறது. மேலும், பயிர்களின் வேர் சுவாசம் குறைந்தும், கோடியில் மண் இறுகியும் காணப்படும்.
உவர் நிலம்:- உவர் நிலங்களில் அதிகமாக நீரில் கரையக் கூடிய உப்பின் அளவு அதிகமாக இருந்தால், அது உவர் நலம் என்று பெயர். பெரும்பாலும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட், கால்சியம் குளோரைடு, மக்னீசியம் சல்பேட் போன்ற உப்புகள் பெருமளவில் கரைந்திருக்கும். இதனால் வேர்களின் நீர் உறிஞ்சும் சக்தி குறைந்துவிடும். அவ்வாறு சிரமப்பட்டு உறிஞ்சும்போது உப்புகளும் அதிகளவு உறிஞ்சப்பட்டு பயிரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் குறைய வாய்ப்புள்ளது.
தொழில்நுட்பம்:- மண் பரிசோதனை மூலம் உவர் தன்மை, களர் தன்மையைக் கண்டறிய வேண்டும். நிலத்தைப் புழுதிபட உழுது தயார் செய்ய வேண்டும். நன்குத் தூளாக்கப்பட்ட ஜிப்சத்தை சிபாரிசு செய்யப்பட்ட அளவு இட வேண்டும். உவர் தன்மை மட்டுமே இருந்தால் ஜிப்சம் இட வேண்டிய அவசியம் இல்லை. ஜிப்சத்தை மண்ணுடன் ஆழமாகக் கலக்கக் கூடாது.
வயலை 30 சென்ட் அளவு கொண்ட சிறு பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். முதில் பாத்தியின் 4 பக்கங்களிலும் ஆழமான (30 செ.மீ.) வடிகால் வாய்க்கால் அமைக்க வேண்டும். பின் மத்திய வடிகால், பக்க வடிகால் வாய்க்கால் அமைத்து, மத்திய வடிகால் வாய்க்காலை முக்கிய வடிகால் வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். வாய்க்கால் பாசன நீரை வயலில் கட்டி 48 மணி நேரம் வைத்திருந்து இயற்கையாகக் கசிந்து வடியும்படி செய்ய வேண்டும்.
48 மணி நேரம் கழித்து, அதிகமாக உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். வயலில் தண்ணீர் கட்டி நிறுத்தியப் பிறகு வடிப்பதை 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும். ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப்பூண்டு வதையை விதைத்து, 40 நாள்கள் கழித்து வளர்ந்துள்ள பசுந்தாள் உரத்தை நிலத்திலேயே மடக்கி உழ வேண்டும். தக்கைப்பூண்டு விதைக்க முடியாத நிலையில், பிசுந்தழை உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட்டு உழவு செய்ய வேண்டும்.
சிபாரிசு செய்யப்பட்ட அளவு சர்க்கரை ஆலைக் கழிவை ஏக்கருக்கு 2 டன் என்ற அளவில் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
பயிர் செய்யும் முறை:- களர்-உவர் நிலங்களைத் தாங்கி வளரக்கூடிய நெல் ரகங்களான திருச்சி - 1, 2, 3, கோ - 43 போன்ற ரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கேழ்வரகு, பருத்தி, கரும்பு, மிளகாய், வெண்டை, கொத்தவரை, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் களர் - உவர் தன்மையை தாங்கி வளரக் கூடியவையாகும். பரிந்துரைக்கப்பட்ட தழை சந்து அளவைவிட 25 சதவீதம் கூடுதலாக (நிலத்தை 4-ஆக பிரித்து) இட வேண்டும். கடைசி உழவுக்குப் பின் ஹெக்டேருக்கு 40 கிலோ என்ற அளவில் துத்தநாக சல்பேட் இட வேண்டும். இவ்வகை மண்ணில் கோடையில் விவசாயம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். நெல், பருத்தி அல்லது நெல் பாசிபயறு அல்லது நெல், தட்டை பயிறு, உளுந்து போன்ற பயிர் சுழற்சி முறையைக் கையாள வேண்டும்.
இவ்வகை மண்ணில் ஊட்டச் சத்துகள் சரிவர கிடைப்பதில்லை. எனவே, அதிக அளவில் தொழுஉரம், தழைஉரம் இட வேண்டும். இந்த மண்ணுக்கு தழைச்சத்தை அம்மோனியம் சல்பேட் வடிவிலும், மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் வடிவிலும் சாம்பல் சத்தை பொட்டாசியம் சல்பேட் வடிவிலும் இட வேண்டும். மேலும் துத்தநாகச் சல்பேட் இந்த நிலங்களுக்கு மிக முக்கியம்.
ஜிப்சம் எளிதாகக் கிடைக்காத சூழ்நிலையில் களர் நிலத்தை எரிசாராய ஆலைக்கழிவின் மூலம் சீர்த்திருத்தலாம். எரிசாராய ஆலைக்கழிவில் கணிசமான சுண்ணாம்புச்சத்து உள்ளது. மேலும், இது அமிலத் தன்மையுடன் இருப்பதால் மண்ணில் உள்ள சுண்ணாம்புச்சத்தை கரையச் செய்து களர் நிலச் சீர்த்திருத்தத்துக்கு உதவுகிறது. ஒரு ஏக்கர் நிலத்தை சீர்த்திருத்துவதற்கு 2 லட்சம் லிட்டர் எரிசாராய ஆலைக்கழிவை வயலில் விட வேண்டும். 7 நாள்களுக்குப் பிறகு 10 முதல் 15 செ.மீ. உயரத்துக்கு நன்னீரைத் தேக்க வேண்டும். பிறகு 24 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டும். நெல்பயிரில் ஒரு குத்துக்கு 3 முதல் 5 நாற்றுகளை நட வேண்டும். களர்-உவர் மண்ணுக்கு அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும். மாற்றுக்கால் பாசனம் மிகவும் நல்லது. சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் நல்ல பயன் தரும். மானாவாரி களர் - உவர் நிலங்களில் பருத்தி, சோளம், வரகு, சூரியகாந்தி போன்ற பயிர்கள் பயிர் செய்து அதிக லாபம் அடையலாம்.
களர் - உவர் மண் சீர்த்திருத்தம் செய்வதோடு மட்டுமில்லாமல், பயிர் மண் உர நீர் நிர்வாக முறைகளையும் செவ்வனேக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வகை நிலங்களைக் கண்டு விவசாயிகள் மனம் தளதாரமல் விஞ்ஞான ரீதியில் விவசாயம் செய்து நல்ல விளை நிலங்களாக மாற்ற முடியும்.
ஆதாரம் : வேளாண்மை அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-10-2025.
14 Oct 2025 -
மாநில திட்டக் குழுவின் 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
14 Oct 2025சென்னை : மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
-
ரூ.95 ஆயிரத்தை நெருங்கிய ஒரு பவுன் தங்கம் விலை : ஒரேநாளில் ரூ.1,960 உயர்வு
14 Oct 2025சென்னை : 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (அக்.14) பவுனுக்கு ரூ.1,960 உயர்ந்து மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்
-
கரூர் சம்பவம்: ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
14 Oct 2025சென்னை : கரூர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து ஆவணங்களை சமர்ப்பித்தது எஸ்.ஐ.டி.
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்: சி.வி.சண்முகத்திற்கு அமைச்சர் கண்டனம்
14 Oct 2025சென்னை : மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம் என்று அமைச்சர் கீதா ஜீவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து
14 Oct 2025சென்னை : தமிழ்நாட்டில் ஓட்டுநர் தேர்வு தானியங்கி மையங்கள் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
-
தமிழக 'மா' விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
14 Oct 2025சென்னை : நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யவும், மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கவும் மாம்பழ ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை தேவை என்று ப
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு - மத்திய அரசு தகவல்
14 Oct 2025டெல்லி : நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டப்பேரவைியல் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பம் : முதல் நாளில் இரங்கல் தீர்மானம் - அவை ஒத்திவைப்பு
14 Oct 2025சென்னை : தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று முதல் நடைபெறுவுள்ளது.
-
சர்வதேச விதிகளை சில நாடுகள் வெளிப்படையாக மீறுகின்றன : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
14 Oct 2025புதுடெல்லி : உலக நாடுகளில் அமைதிக்காப்பு பணிகளில் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளின் பங்களிப்பு உள்ளதாக பெருமிதம் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச வ
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு ஜாமீன்
14 Oct 2025சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேற்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
-
பாலஸ்தீன தனி நாடு பற்றி கேள்வி: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதில்
14 Oct 2025வாஷிங்டன் : பாலஸ்தீன தனி நாடு பற்றிய கேள்விக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
-
பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடப்படும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெறுவது கட்டாயம்
14 Oct 2025பீகார், பீகார் சட்டமன்ற தேர்தலுக்காக வெளியிடும் விளம்பரத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: 71 பேரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
14 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் போட்டியிடவுள்ள 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
-
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைகிறது: ரூ.87,520 கோடியில் கூகுள் ஏ.ஐ. மையம் : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விவரிப்பு
14 Oct 2025புதுடெல்லி : விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பி
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்: த.வெ.க. நிர்வாகி
14 Oct 2025கரூர் : கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னருக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று த.வெ.க. நிர்வாகி அறிவித்துள்ளார்.