முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு விவசாயிகளுக்கு கோடையில் பணம் கொழிக்கும் வெள்ளரி பிஞ்சு சாகுபடி

புதன்கிழமை, 22 மார்ச் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

கோடை காலத்து பட்டத்தில் நல்ல வருவாயினைத் தருவது பிஞ்சு வெள்ளரி சாகுபடி. இந்தப்பயிர் சிறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றது. இவர்கள் சாகுபடியை அரை ஏக்கர் அல்லது ஒரு ஏக்கர்தான் செய்ய இயலும்.

• பிஞ்சு வெள்ளரி சாகுபடி என்பது வெள்ளரிக்காய் பிஞ்சாக இருக்கும்போதே அறுவடை செய்து விற்று பயன்பெறும் தொழிலாகும். இதன் வயது 90 நாட்கள்.

• பிஞ்சினை அப்படியே விட்டால் அது மிகப்பெரிய காயாகி அதிக விதைகளைக் கொண்டிருக்கும். இதனை விற்று லாபம் எடுக்க முடியாது.

• மிகச்சிறிய பிஞ்சுகள், நீளம் ஆறு அங்குலத்திற்குள் இருக்கும். இவைகள் மிகச்சுவை கொண்டதாக இருக்கும். ஒரு விதைகூட காயில் இருக்காது.

• இத்தகைய காய்களை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கிலோ ரூ.8 கொடுத்து வாங்கி பின்னால் தாங்கள் காய்களை கிலோ ரூ.15 வரை விற்கின்றனர்.

• இரண்டாம் தரக் காய்கள் 9 அங்குலம் நீளம் வரை இருக்கும். இதன் விலை கிலோ ரூ.10 வரை இருக்கும்.

• பெரிய பிஞ்சுகள் 10-11 அங்குலம் இருக்கும். இதன் விலை கிலோ ரூ.5 வரை இருக்கும்.

• முதல் இரண்டு தரம் கொண்ட காய்கள் சிரமம் இன்றி விற்பனையாகிவிடும். மூன்றாம் தரக்காயில் விற்பனை சில சமயம் பிரச்னையாக இருப்பதுண்டு

சாகுபடி விவரங்கள்:

• விவசாயிகள் தனது டீசல் ஆயில் இன்ஜின் செட்டினை உபயோகித்து பாசனம் செய்து வெள்ளரி சாகுபடி செய்கின்றனர். விவசாயி ஒரு ஏக்கரில் சாகுபடி செய்வார்.

• இதற்குத்தேவையான விதையை தயார் செய்து கொள்கிறார்.

• ஏக்கருக்கு 150 கிராம் விதையை உபயோகப்படுத்துவார்.

• விதை வாங்கும் இடத்தில் வெள்ளை குட்டைக்காய் விதை வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும்.

• விதை அனைத்து பூச்சி மருந்து விற்கப்படும் கடைகளில் கிடைக்கும்.

• விவசாயி தனது நிலத்தை டிராக்டர் கொண்டு ஒரு உழவு செய்துவிட்டு நிலத்திற்கு மூன்று டிரெய்லர் லோடு மக்கிய தொழு உரத்தை இட்டு அதனை வயல் பூராவும் மண்ணோடு சீராக கலக்க உழுதுகொள்கிறார்.

• பிறகு ஏக்கரில் 600 குழிகள் போட்டுக்கொள்கிறார். நிலத்திற்கு அடியுரமாக ஒன்று – ஒன்றரை மூடை பேக்ட் அம்மோபாஸ் உரத்தைப் போட்டு மண்ணோடு கலக்குகிறார்.

• நிலத்திலுள்ள குழிகளில் இயற்கை உரமும் ரசாயன உரமும் உள்ளது.

• உடனே குழிக்கு மூன்று விதைகள் விதைத்து தண்ணீர் ஊற்றுகிறார்.நிலத்திலுள்ள குழிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடுகிறார்.

• இவ்வாறு 15 நாட்கள் செய்துவிட்டு பிறகு நிலத்தில் கால்வாய் போட்டு பாசனம் செய்கிறார்.

• குழிகள் அனைத்திற்கும் ஏக்கருக்கு ஒன்று – ஒன்றரை மூடை பாரமாபாஸ் 20:20 உரம் இடுகிறார்.

• குழிகளில் களைச்செடிகளை குச்சிகள் உபயோகித்து அகற்றுகிறார்.

• செடிகள் நன்கு பூக்கள் பிடித்து காய்கள் காய்க்கத் தொடங்கும். சாகுபடி சமயம் விவசாயி தனது பயிரினை பூச்சிகள், பூஞ்சாளங்கள் தாக்காமல் இருக்க தக்க பயிர் பாதுகாப்பு முறைகளை அனுசரிக்கிறார்.

• பிஞ்சு வெள்ளரி பயிரின் மொத்த வயது 90 நாட்கள்.

இந்த சாகுபடியில் பயிரில் விதைத்த 45வது நாளிலிருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை... பின்ன என்ன வருமானம் அடி தூள் தான்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்