எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ.நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.97 லட்சம்மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் கீழ் 114 பயனாளிகளுக்கு ரூ.97லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாகவும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாகவும் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் இம்முகாமில் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 114 பயனாளிகளுக்கு ரூ.97.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றது. மேலும் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒருங்கிணைந்து, கட்டாலங்குளம் முதல் டி.வேப்பங்குளம் வரை ரூ.4.80 லட்சம் மதிப்பில் 32 மின்கம்பங்கள் அமைத்து மின் விளக்கு பொருத்தும் பணிகளுக்காகவும், ஏ.நெடுங்குளம் கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் பள்ளி மராமத்து பணிகளுக்காகவும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் உறைகிணறு அமைப்பதற்காகவும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பதற்காகவும், கட்டலாங்குளம் மற்றும் வெள்ளையாபுரம் கிராமத்தில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் உறைகிணறு அமைக்கும் பணிகளுக்காகவும் என ஆக மொத்தம் 6 பணிகளுக்கு ரூ.7.80 லட்சம் மதிப்பில் நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்களில் 68657.97.5 ஹெக்டேர் பரப்பளவிலும், அரசு நிலங்களில் மொத்தம் 36259.06.0 ஹெக்டர் பரப்பளவிலும் என மொத்தம் 104947.03.5 எக்டேர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டு இதுவரை ஏறத்தாழ 16ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.
இதுதவிர தற்போது நிலவும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட சாத்தியக்கூறு உள்ள இடங்களை துல்லியமாக கண்டறிந்து அவ்விடங்களுக்கு உகந்த மாற்றுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திடும் வகையில் ஊரக மற்றும் நகர் பகுதிகளின் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்வதற்காக இதுவரை 941 பணிகளுக்காக ரூ.12.77 கோடி மதிப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகளுக்கான நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 1,38,108 விவசாயிகளுக்கு ரூ.45.59 கோடி மதிப்பில் வறட்சி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முனைவர் நடராஜன் கடலாடி வட்டம், இருவேலி கிராமத்தில் உள்ள கண்மாயில் பொதுப்பணித்துறை (குண்டாறு உப வடிநிலக்கோட்டம்) மூலம் ரூ.8.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளையும், கடலாடி ஊராட்சி ஒன்றியம் ஏர்வாடியில் பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ஏர்வாடி தர்ஹாவில் இருந்து நாச்சியம்மை வலசை வரையிலான 1.9 கி.மீ நீள அளவிற்கு தார்சாலை அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக மேற்கொண்டு காலதாமதமின்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இம்முகாமில் பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட தொழில்மைய மேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகானந்தம், வட்டாட்சியர் கோபால், வட்டார வளர்ச்சி அலுவலர் பச்சைமாள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் திட்டமிடவில்லை : பாகிஸ்தான் அமைச்சர் தகவல்
13 May 2025இஸ்லாமாபாத் : காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இல்லை.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 13 பகுதிகளில் 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு : அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
13 May 2025சென்னை : 13 திட்டப்பகுதிகளில் 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்ச்சியில் சென்னை மண்டலம் 4-ம் இடம்
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. +2 தேர்வில் 83.39 சதவீதம் பேர் தேர்ச்சி
13 May 2025புதுடெல்லி : சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.39 சதவீத மாணவர்க்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
லிபியா தலைநகரில் கடும் மோதல்: 6 பேர் உயிரிழப்பு
13 May 2025வட ஆப்பிரிக்க, வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் தலைநகர் திரிப்பொலியில் இரண்டு ஆயுதப் படைகளுக்கு இடையிலான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
-
அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதிக்க இந்தியா முடிவு
13 May 2025புதுடெல்லி : அமெரிக்க தயாரிப்புகளுக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க இந்தியா முடிவெடுத்துள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 8 பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு: சி.பி.ஐ. வழக்குரைஞர்
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ல
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
சி.பி.எஸ்.சி 10, 12-ம் வகுப்பு தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
13 May 2025புதுதில்லி : நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
-
பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் மோடி திடீர் விசிட் : வீரர்களுடன் கலந்துரையாடி பாராட்டு
13 May 2025புதுடெல்லி : பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் துணிச்சலை பாராட்டினார்.
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
13 May 2025பாகிஸ்தான் : இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் அமைதி நிலவுகிறது.
-
பாகிஸ்தான் ராணுவத்தின் 51 இடங்களை தாக்கினோம்: பலுசிஸ்தான் விடுதலைப்படை தகவல்
13 May 2025குவெட்டா, பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப்படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக
-
சேலம் ஏற்காடு கோடை விழா வரும் 23-ம் தேதி தொடக்கம்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
13 May 2025சேலம், சேலம் ஏற்காடு கோடை விழா வருகின்ற 23ஆம் தேதி துவங்கி 29ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாள்கள் நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
-
சவுதி பட்டத்து இளவரசருடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு
13 May 2025ரியாத் : அமெரிக்க ஜனாதிபதியாக 2வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார்.
-
முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை
13 May 2025புதுடெல்லி, பாதுகாப்புத் துறைச் செயலாளர், முப்படைத் தளபதிகளுடன் நேற்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
-
பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு இ.பி.எஸ். பதில்
13 May 2025சென்னை : பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.
-
அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை : 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
13 May 2025சென்னை : அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக