முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

புதன்கிழமை, 28 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : வங்கக் கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான கஜா புயல் நாகையில் கரையை கடந்த போது 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதன்பின் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்களிலும், சென்னையிலும் பரவலாக மழை பெய்தது. வங்கக்கடலில் 22-ம் தேதி உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வுநிலை சீர்காழி அருகே கரையை கடந்து தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா, தமிழகத்தின் மேட்டூர் அணைப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. அது காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் நீடித்துக் கொண்டிருந்ததால் தமிழகத்தில் மழை இல்லாத வறண்ட வானிலை நிலவுகிறது.

குறைந்த காற்றழுத்தம்

இன்று 29-ம் தேதி, நாளை 30-ம் தேதி மற்றும் டிசம்பர் 1-ம் தேதி ஆகிய 3 நாட்களில் ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது விட்டு விட்டு மழை பெய்யும். வடகிழக்கு பருவமழை இயல்பை விட நிச்சயமாக அதிகமாக இருக்கும். பொங்கல் பண்டிகை வரை வடகிழக்கு பருவமழை பெய்ய சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.  இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 2 நாட்களில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் கூறியதாவது:-

மிதமான மழை

வியட்நாம், தாய்லாந்தை யொட்டியுள்ள சியாம் வளைகுடா பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அது அந்தமான் கடல் பகுதிக்கு பரவுகிறது. மேலும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி காற்று வீசுவதால் அந்தமான் கடல் பகுதியில் அடுத்து 2 நாட்களில் மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து