எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் பயிர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை குறித்த கண்காட்சி அரங்கை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்து கருத்தரங்கம் நிகழ்ச்சியில் பேசுகையில்,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேளாண்மைத்துறையில் பசுமைப்புரட்சியை உருவாக்க பாடுபட்ட தலைவராவார். அதுமட்டுமன்றி விவசாயிகளின் பிரதானத் தொழில் விவசாயம் அதை சிறப்புடன் செய்ய அவர்களுக்கு என்ன உதவி செய்திட வேண்டும் என்பதை சிந்தித்து திட்டங்களை வழங்கி வந்த தலைவராவார். மேலும் காவிரியாற்றிலிருந்து உரிய தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர போராடி வெற்றி பெற்ற தலைவரும் ஆவார். அவர் காட்டிய வழியில்தான் பல்வேறு திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கோதாவரி ஆற்றை காவிரியாற்றுடன் இணைத்திட ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள திட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். காரணம் சில காலக்கட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுபோன்ற நிலையை ஆறுகளை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு திட்டங்களை வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்த உத்தரவிட்டு தற்பொழுது விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக அனைத்துப் பகுதிகளிலும் வேளாண்மைத்துறையின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை விவசாயிகள் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் மழைக்காலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதுடன் அதன்மூலம் அருகாமையிலுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நீர்நிலை மட்டம் உயர வாய்ப்பு உருவாகும். எனவே பண்ணைக்குட்டை என்பது விவசாயிகளுக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். அதேபோல் தற்பொழுது குறைந்த அளவில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயப் பணிகளை
திட்டமிட்டு மேற்கொண்டால்தான் நாம் நினைத்த பயிர் வகைகளை முழுமையாக பயிரிட்டு பயன்பெற முடியும். அதற்கு தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நாம் என்ன விவசாயம் செய்கின்றோமோ அதற்கேற்ப வேளாண் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போது குறைந்த அளவு தண்ணீரில் அதிக அளவு மகசூல் கிடைக்கும் வகையிலும், மேலும் தேவையான பரப்பளவில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் மிகப்பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் உங்களுக்கு தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வேளாண்மைத்துறையில் மானியத் திட்டத்தில் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அதை மனதில் கொண்டு ஒவ்வொரு விவசாயியும் மனம் தளராமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு திட்டமிட்டபடி மகசூலை பெற்று பயன்பெற வேண்டும். அதற்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
பின்னர் 9 பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தில் ரூ.12.55 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களை வழங்கி வேளாண்மை கண்காட்சியில் சிறப்பாக அரங்கு அமைத்து பொதுமக்களுக்கு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த கல்லல், எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்களுக்கு கேடயம் வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்இராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சசிகலா, அட்மா திட்ட துணை இயக்குநர்இளங்கோவன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஷர்மிளா, பன்னீர்செல்வம், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.