எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் வேளாண்மைத்துறையின் சார்பில் வேளாண் பயிர்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் மற்றும் வேளாண்மை குறித்த கண்காட்சி அரங்கை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேளாண்மை கண்காட்சியை துவக்கி வைத்து கருத்தரங்கம் நிகழ்ச்சியில் பேசுகையில்,
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வேளாண்மைத்துறையில் பசுமைப்புரட்சியை உருவாக்க பாடுபட்ட தலைவராவார். அதுமட்டுமன்றி விவசாயிகளின் பிரதானத் தொழில் விவசாயம் அதை சிறப்புடன் செய்ய அவர்களுக்கு என்ன உதவி செய்திட வேண்டும் என்பதை சிந்தித்து திட்டங்களை வழங்கி வந்த தலைவராவார். மேலும் காவிரியாற்றிலிருந்து உரிய தண்ணீரை விவசாயிகளுக்கு பெற்றுத்தர போராடி வெற்றி பெற்ற தலைவரும் ஆவார். அவர் காட்டிய வழியில்தான் பல்வேறு திட்டங்கள் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி மத்திய அரசு கோதாவரி ஆற்றை காவிரியாற்றுடன் இணைத்திட ரூ.60 கோடி மதிப்பீட்டில் பணியினை மேற்கொள்ள திட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். காரணம் சில காலக்கட்டங்களில் விவசாயிகளுக்கு தேவையான மழை பெய்யாமல் பொய்த்து விடுகிறது. அதுபோன்ற நிலையை ஆறுகளை நம்பித்தான் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுமட்டுமன்றி வறட்சி ஏற்படும் நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விடுகிறது.
இதைக்கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் பல்வேறு திட்டங்களை வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்த உத்தரவிட்டு தற்பொழுது விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் பகுதிகளில் மண்வளம் மற்றும் நீர்வள ஆதாரங்களை கருத்தில் கொண்டு அதற்கேற்ப விவசாயப் பணிகளை திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக அனைத்துப் பகுதிகளிலும் வேளாண்மைத்துறையின் மூலம் பண்ணைக்குட்டை அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை விவசாயிகள் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும். காரணம் மழைக்காலங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் விவசாயப் பணிக்கு பயன்படுத்துவதுடன் அதன்மூலம் அருகாமையிலுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் நீர்நிலை மட்டம் உயர வாய்ப்பு உருவாகும். எனவே பண்ணைக்குட்டை என்பது விவசாயிகளுக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். அதேபோல் தற்பொழுது குறைந்த அளவில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயப் பணிகளை
திட்டமிட்டு மேற்கொண்டால்தான் நாம் நினைத்த பயிர் வகைகளை முழுமையாக பயிரிட்டு பயன்பெற முடியும். அதற்கு தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் வேளாண்மைத்துறையின் மூலம் முழு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப நாம் என்ன விவசாயம் செய்கின்றோமோ அதற்கேற்ப வேளாண் உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும் போது குறைந்த அளவு தண்ணீரில் அதிக அளவு மகசூல் கிடைக்கும் வகையிலும், மேலும் தேவையான பரப்பளவில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளவும் இத்திட்டம் மிகப்பயனுள்ளதாக இருந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகள் உங்களுக்கு தேவையான உபகரணங்கள், இடுபொருட்கள் மற்றும் உரங்கள் வேளாண்மைத்துறையில் மானியத் திட்டத்தில் பெற்று பயன்பெற வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கமாகும். அதை மனதில் கொண்டு ஒவ்வொரு விவசாயியும் மனம் தளராமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு திட்டமிட்டபடி மகசூலை பெற்று பயன்பெற வேண்டும். அதற்கு நாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என மாண்புமிகு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
பின்னர் 9 பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தில் ரூ.12.55 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண் இயந்திரங்களை வழங்கி வேளாண்மை கண்காட்சியில் சிறப்பாக அரங்கு அமைத்து பொதுமக்களுக்கு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்த கல்லல், எஸ்.புதூர், சிவகங்கை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்களுக்கு கேடயம் வழங்கி கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், வேளாண் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் செந்தூர்குமரன், கண்ணன், பரமசிவம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்இராஜேந்திரன், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் சசிகலா, அட்மா திட்ட துணை இயக்குநர்இளங்கோவன், வேளாண்மை உதவி இயக்குநர்கள் ஷர்மிளா, பன்னீர்செல்வம், பரமேஸ்வரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தே.ஜ.கூட்டணியில் டி.டி.வி.தினகரன், பிரேமலதாவை இழுக்க இறுதி முயற்சி
20 Jan 2026சென்னை: அ.ம.மு.க., தே.மு.தி.க.
-
மாநில கவர்னர் உரை தேவையில்லை என பார்லி.யில் அரசியலமைப்பு திருத்தத்தை கோருவோம்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
20 Jan 2026சென்னை, இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு கவர்னர் உரை தேவையில்லை என பாராளுமன்றத்தில் அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
இன்று த.வெ.க. தேர்தல் பிரச்சார குழுவின் ஆலோசனைக் கூட்டம்
20 Jan 2026சென்னை: த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் வணக்கம்.
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
நாங்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம்: செங்கோட்டையன் பரபரப்பு விளக்கம்
20 Jan 2026சென்னை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் என்று தமிழக வெற்றிக்கழகத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன்
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
ஆபாச வீடியோ விவகாரம்; கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு பெங்களூரு, ஆபாச வீடியோ விவகாரம்; நடிகை ரன்யாவின் வளர்ப்பு தந்தையான கர்நாடக டி.ஜி.பி. சஸ்பெண்டு
20 Jan 2026கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ்.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து வரும் தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Jan 2026சென்னை: 234 தொகுதிகளிலும் நானே நிற்பதாக நினைத்து தேர்தலில் 100 சதவீதம் களப்பணியாற்ற வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.


