முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரத்து செய்த ரயில் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம்: தெற்கு ரயில்வே

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான பணம் திரும்பப் பெற 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்தனர்.

மேலும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21-ம் தேதி தொடங்கி  வரும் ஜூன் 21-ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான முன்பதிவு செய்த டிக்கெட்களை அளித்து கட்டணத்தை திரும்பப் பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய கவுன்டர்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கும் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது.

கவுன்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை கவுன்டர்களிலேயே பணம் திரும்பப் பெறலாம். ரத்து செய்ய போதிய அவகாசம் உள்ளதால் தேவையின்றி கவுன்டர்களில் கூட வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து