எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பசியை தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால் அதை விடப் பெரியது பசி உள்ள ஒருவருக்கு உணவளிப்பது தான். ராமாயணத்தில் அன்னதான மகிமையை குறித்து இடம் பெற்றுள்ளதாவது, வசிஷ்டர் சொன்னதின் பேரில் ரிஷயசிருங்க முனிவரை வைத்து புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை தசரத மகா சக்கரவர்த்தி செய்கிறார்.
ஆனால் யாகம் பூர்த்தியாகாமல் இருந்து வந்த நிலையில் அப்போது வயதான ஒரு முதியவர் கடும் பசியால் தசரத மக்களிடம் ஐயா நான் பசியுடன் உள்ளேன். எனக்கு உணவு தாருங்கள் என்று கேட்ட போது அப்போது தனக்கு இருந்த உணவை கொடுத்து அவரை பசியார செய்தார். அப்பொழுது அந்த முதியவர் ஐயா எனது வயிறு நிரம்பி விட்டது உன் எண்ணம் ஈடேறுக என்று கூறினார்.
இதை பார்த்த வசிஷ்டர் மன்னனைப் பார்த்து புன்னகையுடன் மன்னா இந்த யாகத்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டாலும் நீ செய்த அன்னதானத்தால் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவரே அன்னதான பலனை பற்றி அப்போதைய கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று கூறுவார்கள். இதன் உண்மையான பழமொழி என்றால் மற்றொருவருக்கு உணவு அளிக்க முந்த வேண்டும். தனக்கு உணவு படைக்க பிந்த வேண்டும் என்ற அர்த்தமாகும். எம்.ஜி.ஆர். முதல் அம்மா வரை தற்போது தமிழக மக்களை காத்து வரும் நமது முதல்வரும் அன்னதானங்களை வழங்கி எளிய, ஏழை மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அதிலும் தற்போது உள்ள இந்த தொற்றுநோய் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவது மட்டுமல்லாது, தற்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் தமிழகம் முழுவதும் உணவு வழங்கி வரும் அதே வேளையில் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாய் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட ஆரோக்கியமான முறையில் புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி இயக்குனர் யு.தனலட்சுமி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
மதுரை மாவட்டத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை,தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை விவசாய கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவுகளும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பழச்சாறுடன் பாசிபருப்பு மாலை 4 மணிக்கு சூப் வகைகளுடன் சுண்டல் ஆகியவை இந்த கொரோனா தொற்றுநோய் முடியும்வரை வழங்கப்படுகிறது.
தற்பொழுது அம்மா பேரவையுடன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் இணைந்து கொரோனா தொற்று நோய் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு கூடத்தில் 50 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மூன்று வேளைகளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அதேபோல் அவர்களுக்கு தலையில் அணியும் உறை, முகக் கவசங்கள், கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் மைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் பெற்று வருகிறார். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம் என்று கூறினார்.
கொரானா வார்டில் பணிபுரியும் மருத்துவர் கூறியதாவது; பொதுவாக ஒரு நோயாளி அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான முறையில் உணவு எடுத்துக் கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை நாங்களும் சோதனை செய்தோம். மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.
ரமேஷ் என்பவர் கூறியதாவது, நான் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு தக்க நேரத்தில் வழங்குகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் உணவு மிகவும் ருசியாக எங்கள் இல்லங்களில் சமைப்பது போல் உள்ளது.
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதைப்போல் இன்றைக்கு தக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உயிரை காப்பாற்றி, வயிற்றுக்கு வயிறார உணவையும் வழங்கி வரும் தாயுமானவராக திகழ்ந்து வரும் முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்
ராணி என்ற பெண்மணி கூறியதாவது நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்று வருகிறேன். வெளியில் சமைக்கும் உணவு எனக்கு ஒவ்வாமை ஏற்படும். தற்போது முதல்வர் ஆணைக்கிணங்க வீட்டு சமையலை போல் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலையில் பழச்சாறுகளும், மாலையில் காய்கறி சூப் வகைகளும் இத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உபசரிப்பு வரப்பிரசாதமாகும். எங்களின் ரத்த உறவுகளை போல் பாசத்துடன் எங்களை காத்து வரும் முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பா.ம.க. எங்களுக்கே சொந்தம்: ஐகோர்ட்டில் ராமதாஸ் வழக்கு
19 Jan 2026சென்னை, பா.ம.க. கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
-
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம்: 71 புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்
19 Jan 2026சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு ரீதியான 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
-
பனையூரில் இன்று நடைபெறுகிறது 12 பேர் அடங்கிய த.வெ.க.வின் தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
19 Jan 2026சென்னை, பனையூரில் இன்று நடைபெறுகிறது த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்.
-
இ.பி.எஸ்.சுடன் தனியரசு சந்திப்பு?
19 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் விடைபெற்ற வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3 சதவீதம் குறைவு
19 Jan 2026சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விடைபெற்ற நிலையல் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
அவதூறு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகாத ராகுல் காந்தி விசாரணை ஒத்திவைப்பு
19 Jan 2026லக்னோ, பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராகததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –20-01-2026
20 Jan 2026 -
தமிழ்நாட்டில் கூட்டணி குறித்து காங்., மேலிடம் முடிவு செய்யும் கிரிஷ் சோடங்கர் பதில்
20 Jan 2026சென்னை, வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
-
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? கவர்னர் மாளிகை அறிக்கை
20 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் கவர்னர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
போட்டியின்றித் தேர்வு: பா.ஜ. புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நவீன்
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. கட்சியின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் தில்லியில் உள்ள அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: அமலாக்கத்துறை விசாரணை தீவிரம் சென்னையில் பல்வேறு இடங்களில் சோதனை
20 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரத்தில் அமலாக்கத்துறை சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று சோதனை நடத்தியது.
-
படத்தைப் பார்த்தார்கள்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதிகள் கேள்வி
20 Jan 2026சென்சார் போர்டில் யார்
-
மரியாதை - நன்றிக்கு தகுதியானவர்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி. கருத்து
20 Jan 2026சென்னை, நாட்டின் இசையை உலகளாவிய மேடைகளுக்கு எடுத்துச் சென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., ஏ.ஆர்.ரஹ்மான் வெறுப்பை அல்ல, மரியாதையையும் நன்றியையும்
-
கவர்னர் உரையின் முக்கிய அம்சங்கள்:
20 Jan 2026சட்டசபையில் கவர்னர் உரையை சபாநயகர் அப்பாவு தமிழில் வாசித்தார். அதில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:
-
தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் ஜனவரி 24 வரை நடைபெறும் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக் கூட்டம் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர்ந்து 4-வது ஆண்டாக வெளிநடப்பு: கவர்னர் அரசமைப்பு சட்டத்தை வேண்டும் என்றே மீறியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
20 Jan 2026சென்னை, தமிழக சட்டசபையில் உரையை வாசிக்காமல் தொடர்ந்து 4-வது ஆண்டாக கவர்னர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்ப்பித்திட தமிழ்நாடு கவர்னர் உரையில் வலியுறுத்தல்
20 Jan 2026சென்னை, தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டு பணி குழுவை மீண்டும் உயிர்பித்திட வேண்டும் என்று கவர்னர் உரையில் வலியுறுத்தப்பட்டது.
-
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும்: பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2026புதுடெல்லி, இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த நாடாக உருவாகும் என்று பிரதமர் மோடி பேசினார்.
-
கவர்னரின் வெளிநடப்பால் அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது: முதல்வர்
20 Jan 2026சென்னை, கவர்னர் வெளிநடப்பால் தமிழக அரசின் 4 ஆண்டுகள் சாதனைகளை மறைத்து விட முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு
20 Jan 2026சென்னை, தணிக்கை சான்று விவகாரத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டியுள்ளது.
-
உரையின் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள மாநில கவர்னர் முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
20 Jan 2026திருவனந்தபுரம், கேரள சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நேற்று (ஜனவரி 20, 2026) தொடங்கியது.
-
வரும் 26-ம் தேதி குடியரசு தின கொண்டாட்டம்: 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு
20 Jan 2026புதுடெல்லி, வரும் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள 10 ஆயிரம் பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவர் நபினுக்கு 'இசட்' பிரிவு பாதுகாப்பு
20 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தேசிய செயல் தலைவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கத்தின் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,600 உயர்வு
20 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று ஒருநாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்துள்ளது.
-
முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு
20 Jan 2026சென்னை, முதல்வரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


