முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி பூமி பூஜை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம் : துணை ஜனாதிபதி வெங்கையா கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியை காணவிருக்கிறோம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் 5-ம் தேதி, கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாக  நாம் காணவிருக்கிறோம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ராமர் கோயில் பூமி பூஜை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சி. ராமருக்காக ஒரு கோவிலைக் கட்டுகிறோம் என்பதில் நாங்கள் பாக்கியம் அடைகிறோம். ராமர் கோவிலை மீண்டும் எழுப்புவது கலாச்சார மதிப்பீடுகளை கட்டி எழுப்புவதாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட காலங்களைத் தாண்டி நிற்கும் ராமாயணத்தை நினைவுகூர்வதாக அந்த நிகழ்ச்சி இருக்கும். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து