முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு : கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது.

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி தனது தாக்குதலை கொரோனா தொடுத்து உள்ளது. 

இந்த நிலையில் கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளர்.

தொற்று உறுதி செய்யப்பட்டதை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.  சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இன்று(நேற்று) எனக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததை அடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் விரைவில் குணமடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்,

சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து