எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சிவகங்கை : அம்மா அரசு மேற்கொண்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் நல்ல பலன் கிடைத்துள்ளது என்று சிவகங்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்நோய்த் தொற்றுப் பரவல் தமிழ்நாட்டில் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் சிறப்பாக செயல்பட்டு, சிவகங்கை மாவட்டத்தில் இந்நோய் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. இந்நோய் பரவல் குறைந்திருந்தாலும், மருத்துவ வல்லுநர்கள் மீண்டும் இது அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது என்றும், மழைக் காலமாக இருக்கின்ற காரணத்தினால் மேலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்கள். எனவே, மாவட்ட நிர்வாகத்திற்கும், சுகாதாரத் துறைக்கும் மற்றும் பல்வேறு துறைகளுக்கும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்நோய்ப் பரவல் குறைந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், இந்நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவமனைகளும், படுக்கை வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருந்துகளும், உபகரணங்களும் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளன. எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.
இது ஒரு தொற்று நோய். ஆகவே, இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்தாலும், பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இம்மாவட்டத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காவேரி குடிநீர் கிடைக்கப்பெறாத சிவகங்கை மாவட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. சிவகங்கை மாவட்ட மக்களுக்காக மாபெரும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். சிவகங்கை மாவட்டத்திற்கு காவேரி குடிநீர் கிடைக்காமல் விடுபட்ட 11 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 2,459 ஊரகக் குடியிருப்புகளும், 8 பேரூராட்சிகளும், 3 நகராட்சிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பொருட்டு சேர்க்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு அம்மாவின் அரசால் நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. சிவகங்கை நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் நிலையிலுள்ளது. தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. குடிமராமத்துத் திட்டத்தைப் பொறுத்தவரை, 2016-2017 முதல் 2019-2020 வரை 236 கண்மாய்கள் தூர்வாரப்பட்டதில் 35,566 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட உப்பாற்றை சமப்படுத்துதல் மற்றும் அதன் குறுக்குக் கட்டுமானங்கள் புனரமைக்கும் பணி ரூபாய் 14.50 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு 7,454 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. . சென்னை-கன்னியாகுமரி தொழிற்தடச் சாலைத் திட்டத்தின் கீழ் மேலூர்-திருப்பத்தூர் சாலையில் 16.26 கி.மீ சாலையை அகலப்படுத்தி மேம்படுத்துதல் மற்றும் 2.66 கி.மீ. நீளம் திருப்பத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு ரூபாய் 110 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன, விரைவில் பணி துவங்கப்படும். திருப்பத்தூர் ஆலங்குடி சாலை, மாத்தூர் முளக்குளம் சாலை, அரண்மனை சிறுவயல் சாலையில் ரூபாய் 20.16 கோடி மதிப்பீட்டில் 3 உயர்மட்டப் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக உயர்த்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ மாணவர்களின் பட்ட மேற்படிப்பிற்காக முதுநிலை மருத்துவ மேற்படிப்புகள் தொடங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 66 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டு மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2020-21ஆம் ஆண்டில் 35 ஊராட்சிகளிலுள்ள 53 குக்கிராமங்களில் 4,231 வீடுகளுக்கு ரூபாய் 8.85 கோடி மதிப்பீட்டில் வீடுகளுக்கான செயல்படக்கூடிய குடிநீர் இணைப்பு வழங்கிடும் பணிகளில் தற்போது வரை 749 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, எஞ்சிய வீடுகளுக்கு இணைப்புகள் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2016-2017, 2018-2019 மற்றும் 2019-2020 ஆண்டுகளில் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி மற்றும் மழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதத்திற்கு 96,109 விவசாயிகளுக்கு ரூபாய் 82.5 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்கு கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு நன்மைகள் அம்மாவின் அரசு மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கிறது. சிவகங்கை பையூர், முல்லைவாயல் கிராமங்களில் ரூபாய் 55.40 கோடி மதிப்பீட்டில் 608 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு முடிவுறும் தருவாயில் உள்ளன. புதிய கால்நடை நிலையங்கள் கட்டுவதற்கு ரூபாய் 10.7 கோடி மதிப்பீட்டில் செயலாக்கம் செய்ய அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூபாய் 3.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மணலூர், அகரம் மற்றும் கொந்தகை ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளவுள்ள ஆறாம் கட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழர்களின் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான, தொன்மையான நாகரிகத்தை, பண்பாட்டை உலகறியச் செய்ய தமிழ்நாடு அரசால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, பல்வேறு திட்டங்கள் இம்மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க எடுத்த முயற்சிகள் பாராட்டுக்குரியவை. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க அனைத்து வகைகளிலும் அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்நோய்ப் பரவல் மேலும் படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலை திரும்ப அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.


