முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா: பிரதமர் மோடி வழங்கினார்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கவுகாத்தி : அசாம் மாநிலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பிரதமர் மோடி வழங்கினார்.

அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது.  

நிகழச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, அசாமின் விரைவான வளர்ச்சி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்களிடையே ஆத்மவிஷ்வாஸ் (தன்னம்பிக்கை) வழியாகும். மாநில மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனைப் பெறுகின்றனர்:

அஸ்ஸாமிய மொழியைப் பாதுகாத்தல் மற்றும் அதன் இலக்கியங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட கொள்கைகளைச் செயல்படுத்துவதற்குப் பின்னால், அஸ்ஸாமிய கலாச்சாரத்தை பாதுகாப்பதை அரசு எப்போதும் முன்னணியில் வைத்திருக்கிறது.

கொரோனா வைரசை அசாம் அரசாங்கம் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. தடுப்பூசி இயக்கத்தை அசாம் இப்போது முன்னெடுக்கும் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் ஓடும் நீரை வழங்க மத்திய-மாநில இரட்டை இயந்திர அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து