முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகம், கேரளா, ஒடிசா, புதுச்சேரியில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சென்னை : கர்நாடகம், கேரளா, ஒடிசா, புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் 55 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கை கர்நாடகம், கேரளா, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் அறிவித்தன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து திங்கட்கிழமை காலை வரை 55 மணி நேர முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மருந்தகம், பால், பெட்ரோல் பங்குகள், உணவகங்கள் இயங்கியது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து