எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. பெரிய ரெய்டுகள் நடக்கின்றன. ஜாக்கிரதை’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.
மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சராக எனக்குத் தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினராகத்தான் பங்கேற்றுள்ளேன். இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது. தேர்தல் நடக்காததால் மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,805 கோடியை வழங்கவில்லை.
பொதுவாக வரவேண்டிய நிதியையே உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் சொல்லித் தரமறுத்த மத்திய அரசு, எப்படி மேயர், கவுன்சிலர்கள் இல்லாமலே ஸ்மார்ட் சிட்டிக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியது?
இன்று லக்னோவில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அழைப்பு வந்ததோடு அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பது குறித்து முன்கூட்டியே தெரியவில்லை.
டெல்லியில் நடந்திருந்தால் கூட ஒரே விமானத்தில் சென்று வந்திருக்கலாம். ஆனால், லக்னோவுக்குச் செல்ல 3 விமானங்கள் மாற வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கூட்டத்திற்காக மதுரையில் என்னால் 15, 20 நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடியவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் விஞ்ஞான அறிவியல் உலகத்திற்கே தெரியும். அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்கிறார். ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. தற்போது பெரிய ரெய்டுகளெல்லாம் நடக்கின்றன. ஜாக்கிரதை என்றார்.
செல்லூர் கே.ராஜூ சவால்
இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெரியார் தமிழகத்தின் தன்மானத்தை மீட்டெடுத்தவர். அ.தி.மு.க.வைத் தொடங்கி ஒரு குடும்பமாய் தமிழக மக்களை இணைத்தவர். அதன்பின், அண்ணா கொள்கைகளில் இருந்து தி.மு.க. தடம் மாறிச் சென்றதால் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொறுப்பான நிதி அமைச்சர் வாயிலிருந்து பொறுப்பில்லாத வார்த்தைகள் வருவது வரவேற்கும்படியாக இல்லை.
தற்போது நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. சட்டம், அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள். பொத்தாம் பொதுவாகக் குறை சொல்லாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான். எங்களுக்கு மடியில் கனமில்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
தனியார் பல்கலை. திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
25 Oct 2025சென்னை: 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு
25 Oct 2025கோபால்கஞ்ச்: பா.ஜ.க. போட்டி வேட்பாளருக்கு பிரசாந்த் கிஷோர் திடீர் ஆதரவு தெரிவித்தார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் சென்னை மாநகராட்சி தகவல்
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தாய்லாந்து ராணி காலமானார்
25 Oct 2025பாங்காக்: தாய்லாந்து ராணி காலமானார் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
விபத்தில் உயிர் தப்பிய உ.பி. அமைச்சர்
25 Oct 2025பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் விபத்தில் இருந்து அமைச்சர் பேபி ராணி உயிர் தப்பினார்.
-
சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம்: டெண்டர் கோரியது தமிழக அரசு
25 Oct 2025சென்னை: சென்னையில் கடல் ஆமைகள் மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.
-
டெல்டா மாவட்டங்களில் பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு முடிந்தவுடன் நிவாரணம் வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
25 Oct 2025சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்டுள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் சேதங்கள் வேளாண் மற்றும் வருவாய் துறை அலுவலர்களால் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம்: மேற்குவங்கத்தில் டாக்டர்கள் போராட்டம்
25 Oct 2025மும்பை: பெண் மருத்துவர் தற்கொலை சம்பவம் குறித்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
சர்வதேச ஒருநாள், டி- 20 கிரிக்கெட்: விராட் கோலி உலக சாதனை
25 Oct 2025சிட்னி: சர்வதேச வெள்ளைப்பந்து (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 18,443 ரன்கள் குவித்தன் மூலம் வெள்ளைப்பந்து போட்டிகளில் அதிக ரன் குவித்
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


