முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எங்களுக்கு மடியில் கனம் இல்லை தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுங்கள்: நிதிஅமைச்சருக்கு செல்லூர் ராஜூ சவால்

வெள்ளிக்கிழமை, 17 செப்டம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

‘ஸ்மார்ட் சிட்டி ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. பெரிய ரெய்டுகள் நடக்கின்றன. ஜாக்கிரதை’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.

இதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள் என்று  சவால் விடுத்துள்ளார்.

மதுரை ஸ்மார்ட் சிட்டி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைச்சராக எனக்குத் தனிப்பட்ட பங்கு எதுவும் இல்லை. சட்டமன்ற உறுப்பினராகத்தான் பங்கேற்றுள்ளேன். இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது. தேர்தல் நடக்காததால் மத்திய அரசு, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,805 கோடியை வழங்கவில்லை.

பொதுவாக வரவேண்டிய நிதியையே உள்ளாட்சித் தேர்தலைக் காரணம் சொல்லித் தரமறுத்த மத்திய அரசு, எப்படி மேயர், கவுன்சிலர்கள் இல்லாமலே ஸ்மார்ட் சிட்டிக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கியது?

இன்று லக்னோவில் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டுவருவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. கடைசி நேரத்தில் அழைப்பு வந்ததோடு அதில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி ஆலோசிப்பது குறித்து முன்கூட்டியே தெரியவில்லை.

டெல்லியில் நடந்திருந்தால் கூட ஒரே விமானத்தில் சென்று வந்திருக்கலாம். ஆனால், லக்னோவுக்குச் செல்ல 3 விமானங்கள் மாற வேண்டும். அதே நேரத்தில் அந்தக் கூட்டத்திற்காக மதுரையில் என்னால் 15, 20 நிகழ்ச்சிகளை ரத்து செய்ய முடியவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் விஞ்ஞான அறிவியல் உலகத்திற்கே தெரியும். அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்கிறார். ஊழலைக் கண்டுபிடிப்பது பெரிய வித்தை இல்லை. தற்போது பெரிய ரெய்டுகளெல்லாம் நடக்கின்றன. ஜாக்கிரதை என்றார்.

செல்லூர் கே.ராஜூ சவால்

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் அதிமுக மாநகர அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பெரியார் தமிழகத்தின் தன்மானத்தை மீட்டெடுத்தவர். அ.தி.மு.க.வைத் தொடங்கி ஒரு குடும்பமாய் தமிழக மக்களை இணைத்தவர். அதன்பின், அண்ணா கொள்கைகளில் இருந்து தி.மு.க. தடம் மாறிச் சென்றதால் அ.தி.மு.க. தொடங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பொறுப்பான நிதி அமைச்சர் வாயிலிருந்து பொறுப்பில்லாத வார்த்தைகள் வருவது வரவேற்கும்படியாக இல்லை.

 

தற்போது நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. சட்டம், அதிகாரம் அவர்கள் கையில் இருக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடந்திருந்தால், முடிந்தால் நடவடிக்கை எடுத்து மக்கள் முன் நிறுத்துங்கள். பொத்தாம் பொதுவாகக் குறை சொல்லாதீர்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரெய்டு நடப்பது வழக்கம்தான். எங்களுக்கு மடியில் கனமில்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து