முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவால் வருவாய் இழந்த சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : டெல்லியில் கொரோனாவால் வருவாய் இழந்த சுற்றுலா, சுரங்க தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால்  அறிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொழில்கள் முடங்கின.  இதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த சூழலில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது, 

டெல்லியில் கொரோனாவால் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்ட குடும்பத்தினர் வருவாய் இழந்துள்ளனர்.  இதனால், அவர்கள் தொழில் மீண்டும் தொடங்கும்வரை அவர்களின் குடும்பங்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். 

இதே போன்று, சுரங்கங்கள் மூடப்பட்டு, சுரங்க தொழிலாளர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  இதனால், அவர்களுக்கும் மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து