எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : பொதுமக்கள் 5 பவுன் வரை தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்துக் கடன் வாங்கத் தூண்டியது யார்?, அனைத்து கூட்டுறவு சங்கங்களின் மீதும் பொதுவாகப் பழி சுமத்துவது ஏன் என்று கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
தங்கள் உழைப்பை வியர்வையாய் சிந்தி, இந்நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கக்கூடிய வேளாண் பெருமக்கள், புயல், மழை, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிப்படையும்போது, தாங்கள் பயிரிட்ட வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல், விலைக் குறைவால் நஷ்டத்திற்கு உள்ளாகும் சமயங்களில், அரசு, விவசாயிகளின் சிரமத்தில் பங்குகொள்ளும் வகையில், அவர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்கிய கடன்களுக்கு வட்டி தள்ளுபடி, கடன் தள்ளுபடி என்று நிலைமைக்குத் தக்கவாறு முடிவெடுத்து, விவசாயிகளின் துயரத்தில் பங்கு கொள்கிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக விவசாயிகள், தங்கள் விளைபொருட்களுக்கு ஏற்ப விலை இல்லாத நிலையில், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைக்கவில்லை. இதனால் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகினர். எனவே, தொடர்ந்து விவசாயிகள் வேளாண் கடன் மற்றும் நகைக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவேதான், அ.தி.மு.க. அரசு விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டது.
பொதுவாக, ஒரு விவசாயி குடியிருக்கும் இடம் ஒன்றாக இருக்கும். அவருடைய நிலங்கள் அந்த கிராமத்திலோ அல்லது பக்கத்தில் உள்ள கிராமங்களிலோ இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில், அந்த விவசாயினுடைய நிலங்கள் எந்தெந்த கிராமங்களில் உள்ளதோ, அந்தந்த கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மூலம்தான் வேளாண் பயிர்க் கடன் வாங்குவார்கள். அதுதான் கூட்டுறவு சங்கங்களின் விதியும் கூட. இம்முறையில்தான் வேளாண் கடனும் ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வேளாண் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகத்தான் வெளியிடப்பட்டது. எனவே, தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன் வேளாண் கடன்கள் பெற்ற அனைத்து விவசாயிகளும், முறைகேடாகக் கடன் பெற்றவர்களா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல், தேர்தல் சமயத்தில் தி.மு.க.வின் தலைவரும், அவரது வாரிசும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் 5 பவுன் வரை தமிழக மக்கள் வாங்கிய நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும்; நீங்கள் உடனே வங்கிகளில் 5 பவுன் வரை அடகு வைத்து நகைக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள்; நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம், வந்தவுடன் உங்களது நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் பொதுமக்களைத் தூண்டிவிடும் வகையில் பேசியதை அனைத்து ஊடகங்களும், தினசரி நாளிதழ்களும் செய்திகளாக வெளியிட்டிருந்தன.
தி.மு.க. தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிகள் வெளியிட்டபோதும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்பொழுதும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று, எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இவர்களது பேச்சை நம்பி, 5 பவுன் வரை குடும்பத்தில் உள்ள அனைவரும் நகைகளை வங்கிகளில் வைத்துக் கடன் பெற்றனர். இந்தக் குழப்பத்திற்குக் காரணம் தி.மு.க.வின் தேர்தல் அறிவிப்பு வாக்குறுதிதான். தற்போது, மக்கள் நகைக் கடனுக்குத் தேவையின்றி வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, தற்போது பலவிதமான நிபந்தனைகளை விதிப்பது; நகைக் கடன் வழங்கியதில் முறைகேடுகள் செய்துவிட்டதாகவும், மோசடியில் ஈடுபட்டதாகவும் கூட்டுறவு சங்கங்கள் மீதும், அதன் பணியாளர்கள் மீதும், கடன் பெற்ற பொதுமக்கள் மீதும் குற்றம் சுமத்திப் பேசுவது, அனைவரையும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது.
இப்படி, பொதுமக்கள் 5 பவுன் வரை தங்களது நகைகளை வங்கிகளில் அடகு வைத்துக் கடன் வாங்கத் தூண்டியது யார்? நகைக் கடன் மட்டுமல்ல, நிறைய நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்ற முடியாத நிலையில், மற்றவர்கள் மேல் பழி போடுவது யார் ?
ஒரு உன்னத நோக்கத்துடன் 'கூட்டுறவே நாட்டுயர்வு என்று நமது முன்னோர்களால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு இயக்கம், இன்று தமிழ்நாடு முழுவதும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒருசில கூட்டுறவு சங்கங்கள் தவிர, தமிழ்நாட்டில் 99 சதவீதக் கூட்டுறவு சங்கங்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் (உழவுப் பணிகளுக்காக), குறைந்த வட்டிக்குக் கடன் அளித்தல், விதை மற்றும் உரங்கள் வழங்கி உதவுதல், நகைக் கடன் அளித்தல், வீட்டுக் கடன் அளித்தல் மற்றும் அந்த கிராமங்களில் நியாய விலைக் கடைகளை நடத்துதல் போன்ற சேவைகளை அந்தந்தப் பகுதி மக்களுக்கு அளித்து வருகிறது.
வேளாண் பயிர்க் கடன் வழங்கியதிலும், நகைக் கடன் வழங்கியதிலும் ஏதேனும் தவறுகள் நடந்திருந்தால், அத்தவறுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அனைத்து சங்கங்களின் மீதும் பொதுவாகப் பழி சுமத்தக் கூடாது.
இவ்வாறு செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
கென்யாவில் வெள்ளம்: 40 டன் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த இந்தியா
14 May 2024புதுடெல்லி : கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கென்யாவுக்கு 40 டன் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்பு உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவ
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டம்: பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
14 May 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் போராட்டத்தின் விளைவாக பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகள் குறைப்பு : புதுச்சேரி அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
14 May 2024புதுச்சேரி : கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளை குறைத்தது தொடர்பாக பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.