எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்ட 2-ம் கட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
தருமபுரி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
தருமபுரி மாவட்டம் என்றாலே இரண்டு விஷயங்களை நாம் மறக்க முடியாது. ஒன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தருமபுரியில்தான் முதன்முதலாக தொடங்கப்பட்டது. மற்றொன்று என்னவென்றால், என்னுடைய மேற்பார்வையில் நடந்த ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். தருமபுரி மாவட்ட மக்கள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அவர்களுக்கு கிடைக்கக் கூடிய குடிதண்ணீரில் ப்ளோரைடு அதிகமாக கலந்து இருந்தது. குறிப்பாக பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களும் பற்களில் காரை படிவதும் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதில் இருந்து இந்த இரண்டு மாவட்ட மக்களைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம். அந்த சீரிய திட்டத்தை கடந்த 2008-ஆம் ஆண்டு தருமபுரியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியே நேரடியாக வந்து துவக்கி வைத்தார்.
இப்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையில், இத்திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதுமட்டுமல்ல, சேலம் - தருமபுரி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தை மேலும் எளிதாக்கக் கூடிய வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டையூருக்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டனூருக்கும் இடையே புதிய மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை இணைப்பு உருவாக்கப்படும்.
அதிக அளவில் பால் உற்பத்தி செய்யும் தருமபுரி மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தருமபுரியில் புதிய பால் பதனிடும் நிலையம் ஒன்று அமைக்கப்படும். புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக தருமபுரியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா ஒன்று அமைக்கப்படும். தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய கூடுதல் அலுவலகக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படும்.
ஒரு மாநிலத்தில் ஏராளமான முதலீடுகள் பல்வேறு நிறுவனங்களால் செய்யப்படுகிறது என்றால் அந்த மாநிலத்தில் நல்லாட்சி நடக்கிறது என்று பொருள். முதலீடு என்பது வெறும் தொழில் சார்ந்தது மட்டுமல்ல, அது வளர்ச்சியை சார்ந்தது. நமது தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக நிச்சயமாக நாம் ஆக்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.